எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். தக்க பயிற்சிகளின் மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். சரியில்லாத நினைவாற்றல் என்று ஒன்று இல்லை. நினைவாற்றல் என்பது ஒரு திறமை. நமது நினைவாற்றலுக்கு மூளை இன்றியமையாதது. ஏந்த ஒரு மருந்தோ மூலிகையோ மூளைத்திறனை அதிகப்படுத்திவிடாது. தவறான மருந்துகள் நினைவாற்றலை பாதிக்கத்தான் செய்கின்றன.
நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல்.
நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று கூறுவார்கள். ஆனால் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவில் கொள்ள ஞாபக சக்தியை அதிகப்படுத்த வேண்டும். மனித மூளை 75 சதவீதம் நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும் மற்றும் நுகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது நமது மனதில் குறைந்த நேரமே இருக்கும். உடனே மறைந்துவிடும். இதை நினைவில் கொள்ள ஆர்வத்துடன் கவனமாக செயல்படவேண்டும். திரும்பத்திரும்ப நினைத்துப்பார்த்து ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் அதிக வெப்பமான சூழ்நிலை மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்கவேண்டும். இதனால் நமது உடல்சோர்வு ஏற்பட்டு மூளையின் செயல் குறைந்துவிடும். அதிகநேரம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கவும் கூடாது. இதனால் நமது மூளையின் திறன் அல்லது கற்கும் திறன் குறைந்து உடல் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது. சிறிது நேரம் உடல்பயிற்சி மூலம் நினைவாற்றலை அதிகப்படுத்தவும் முடியும். மெது ஓட்டம் மற்றும் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் அதிகப்படும். இவ்வகையான உடல்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் தினமும் சிறிது நேரம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
நல்ல சூழ்நிலைகளில் வாழ்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகப்படவும் வாய்ப்புள்ளது. நினைவாற்றலை அதிகப்படுத்த நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. இரவு நேர தூக்கத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். நல்ல தூக்கம் நமது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தரும். மேலும் நினைவாற்றலும் 30 முதல் 40 சதவிகிதம் அதிகமாகிறது.
ஒரு செயலை செய்வதற்கு விருப்பமும் ஆர்வமும் இருக்க வேண்டும். எழுத்துக்களை பார்த்து மனதில் பதியவைப்பதைவிட படங்களை பார்த்து மனதில் பதிய வைப்பது மிகவும் எளிது. மேலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை கவனமாக செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நினைவாற்றல் அதிகப்படும்.
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு
1. தன்னம்பிக்கை,
2. ஆர்வம்,
3. செயல் ஊக்கம்,
4. விழிப்புணர்வு,
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம் ஆகியவை காரணமாக இருக்கின்றன.
1. தன்னம்பிக்கை : என்னால் பாடங்களை நன்றாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு நினைவாற்றல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
2. ஆர்வம் : எந்த ஒரு விசயத்தையும் ஆர்வத்துடன் கவனித்தாலோ அல்லது செயல்பட்டாலோ நமது நினைவில் நன்றாக பதியும். மேலும் ஆர்வம் இல்லாவிட்டாலும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு நினைவில் பதியவைத்தால் நமது மனதில் நன்றாக பதியும்.
3. செயல் ஊக்கம் : இந்த பாடங்களை அல்லது விசயங்களை ஏன் கற்க வேண்டும், எவ்வகையில் இவை நமக்கு பயன் தரும் என்று நம்மோடு அந்த விசயங்களை இணைத்துக்கொண்டு செய்தால் நம் மனதில் நன்றாக பதியும்.
4. விழிப்புணர்வு : மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும்
5. புரிந்துகொள்ளல் : புரிந்துகொண்டு செய்யும் செயல்கள் நம் மனதில் நன்றாக பதியும். மாணவர்கள் பாடங்களை புரிந்துகொண்டு படித்தால் நினைவில் நன்றாக நிற்கும்.
6. உடல் ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்க சில உணவு முறைகள் : தினமும் உணவில் சீரகம் மற்றும் மிளகு கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் ஆகியவை உள்ளது. ஆகையால் நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ளவும் நரம்புகளைப் பல்பபடுத்திக்கொள்ளவும் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பப்பாளிப்பழம், நெல்லிக்காய், வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதால் நினைவாற்றல் பலப்படும். அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் சாப்பிடுவதால் மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
தொகுப்பு: கே.சுரேஷ், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.