எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையில் சார்பில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மண்வள இயக்கம் குறித்து கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் பகுதிகளில் செய்தியாளர் பயணம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் கலெக்டர் தெரிவித்ததாவது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாய பெருமக்கள் உற்பத்தி அதிகரித்து அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் மண் இயக்கம் என்ற திட்டம் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயிர் வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண்வளமும், நீர்வளமும் அமைகிறது. மண்ணில் உள்ள சத்துக்களின் அளவையும், மண்ணின் இரசாயனத் தன்மைககளயும் மண் ஆய்வின் மூலமே அறிய முடியும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு வயலுக்கு வயல் மாறுபடுவதாலும், தேவைப்படும் சத்துக்களின் அளவு பயிருக்கு பயிர் மாறுபடுவதாலும் மண் ஆய்வின் மூலமே பயிருக்கு ஏற்ற மிகச் சரியான உரப்பரிந்துரை வழங்க முடியும்.
மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை அறிந்திடவும், பயிருக்கு தேவையான உர அளவை அறிந்திடவும், மண்ணில் களர், உவர், அமிலம் மற்றும் சுண்ணாம்பு தன்மையை அறிந்து நிலச் சீர்திருத்தம் செய்திடவும், அங்ககச் சத்தின் அளவினை அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை காத்திடவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரை தேர்ந்தெடுத்து அதிக மகசூல் பெற்றிடவும் மண் பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும்.
அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும், மண்ணின் நிறம், சரிவு மண் வகை (மணல், களி, செம்மண்) ஆகியவற்றை பொறுத்து மண் மாதிரிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும், வரப்பு ஓரங்கள், குப்பை குழிகளுக்கு அருகாமையில் பாசன வாய்க்காலுக்கு அருகாமை, மரத்தடி, உலர்களம், சாலை மற்றும் பள்ளங்களில் மண் மாதிரிகள் எடுக்கக் கூடாது.
மண் மாதிரியானது நெல், கேழ்வரகு, நிலக்கடலை, கம்பு மற்றும் சிறுதானிய பயிர்களுக்கு 6 அங்குலம், 15 செ,மீட்டர் என்ற அளவிலும், பருத்தி, கரும்பு, வாழை, மரவள்ளி மற்றும் காய்கறிகளுக்கு 9 அங்குலம், 22.5 செ.மீட்டர் என்ற அளவிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும். மா, தென்னை போன்ற மிக ஆழமாக வேர்கள் செல்லும் பழவகை மற்றும் மரப்பயிர்களுக்கு 12, 24, 36 அங்குல ஆழங்களில் மூன்று மாதிரிகளும் எடுக்க வேண்டும். மூன்று அடி ஆழமுள்ள குழி தோண்டி அதில் முதல் ஒரு மண் மாதிரியும், இரண்டாவது அடியில் ஒரு மண் மாதிரியும், மூன்றாவது அடியில் ஒரு மண் மாதிரியும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.
நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் 633 வருவாய் கிராமங்களிலும் மண் மாதிரிகள் (கிரிட்) வலைச்சட்ட முறையில் சேகரம் செய்ய திட்டமிடப்பட்டு அதன்படி 2017-18ம் ஆண்டு 293 வருவாய் கிராமங்களில் 21,600 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, 1,23,345 மண் வள அட்டைகள் வழங்கப்படவும். 2018-19ம் ஆண்டு 340 வருவாய் கிராமங்களில் 22,831 மண் மாதிரிகள் சேகரம் செய்து 1,29,043 மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் மூலம் கிராம வரைபடம் மூலம் இறவை நிலங்களில் 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 எக்டருக்கு 1 மண் மாதிரியும் சேகரம் செய்யப்பட உள்ளது. சேகரம் செய்யப்பட்ட மண் மாதிரியின் கார, அமில நிலை, உப்பின் நிலை, சுண்ணாம்பு நிலை, மண் நயம், பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்களான கால்சியம், மக்னிசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், போரான், அங்கக கார்பன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்ணின் தன்மை மற்றும் சாகுபடி பயிருக்கு ஏற்ப உரப் பரிந்துரை வழங்கப்படுகிறது.
மண்வள பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் அந்தந்த வட்டத்தில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை அனுகி பயன்பெறலாம். இந்த மண்வள பரிசோதனை ஆய்வு முடிவுகள் மண்வள அட்டையில் பதிவு செய்து வழங்கப்படும். மேலும் கிரிட்டில் (வலைச்சட்டம்) உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்படும். மண்வள அட்டைக்கு எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே கிரிட்டில் இரண்டு வருடங்களிலும் மண் மாதிரி சேகரம் செய்து மண் வளத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கணக்கிடப்பட்டு, உரப்பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு உர செலவினை குறைத்து உற்பத்தியை பெருக்க மண்வள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்., தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கநர் கே.கவிதா, இணை இயக்குநர் (வேளாண்மை) சௌந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சுவாமிநாதன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கு.ப.சதீஸ்குமார், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
17 Jul 2025பெங்களூரு, கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
-
கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
17 Jul 2025திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி
-
அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
17 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
-
இந்திய அணிக்கு கோலி மீண்டும் திரும்ப வேண்டும்: முன்னாள் வீரர் வேண்டுகோள்
17 Jul 2025மும்பை: இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் ஓய்விலிருந்து திரும்ப வேண்டும் என்று விராட் கோலிக்கு முன்னாள் வீரரான மதன் லால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
4-வது டெஸ்டில் பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும்: இர்பான்
17 Jul 2025மான்செஸ்டர்: 4-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விருந்தோம்பல் சேவையை சிறப்பாக நடத்த வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்
17 Jul 2025சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.