எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னிலையில் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
கலெக்டர் , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.20000- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், வருவாய்த்துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2,87,520- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.89,400- மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 25 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.56,416- மதிப்பிலான இடுபொருட்களையும் என ஆகமொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் கூறியதாவது, தமிழக அரசு இந்த வறட்சியான காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 76,320 விவசாயிகளுக்கு ரூ.55 கோடி வறட்சி நிவாரணமாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக நமது மாவட்டத்தில் 9 உலர் தீவன கிடங்குகள் மூலம் சலுகை விலையில் ரூ.2- க்கு வைக்கோல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 உலர் தீவன கிடங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளே மாட்டு தீவனங்களை தயாரிக்க பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 220 மெட்ரிக் டன் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம் பகுதியில் கடல்நீர் உள்ளே புகுந்து குடிநீர் உப்பாவதை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல் போன்ற நீண்டகால திட்டங்களுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 130 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் ரூ.140.01 கோடி மதிப்பீட்டில் 5 வெள்ளத்தடுப்பு பணிகளை துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள 545 ஏரிகள் மற்றும் குளங்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் வீடு கட்டுவோர்கள் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. பேச்சு
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் இந்த மனுநீதிநாள் முகாமில் தெரிவித்ததாவது,கலெக்டர் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களை தேர்தெடுத்து இந்த மனுநீதிநாள் முகாமை நடத்துவதை நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறேன். கலெக்டர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கிராம மக்கள், விவசாயிகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். கலெக்டர் உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிதம்பரம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும் கட்ட கோரிக்கை வைத்துள்ளேன். கலெக்டர் அரசின் பரிசீலினைக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
கலெக்டருக்கு நன்றி
நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை ரூ.1000- மாக உயர்த்தி வழங்கினார்கள். இதனால் லட்சக்கணக்கான முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள். கலெக்டர் மிகவும் உத்வேகத்துடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகான முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்இந்த மனுநீதிநாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே 148 மனுக்கள் பெறப்பட்டு அதில் 43 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று 79 மனுக்கள் வரப்பெற்றது. அவைகளின்மீது விதிகளின்படி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்து.இந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர் மகேஷ் இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்புற நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.
பலர் பங்கேற்பு
இந்த மனுநீதிநாள் முகாமில் இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துணை மேலாளர் (தாட்கோ), சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர், அரசுத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வீகம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூர் நெரிசல் சம்பவத்தை எடுத்த அ.தி.மு.க.வினர்: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்கள்
15 Oct 2025சென்னை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைச்சர்கள் பேசியதாவல் அ.தி.மு.க.வினர் வெளிநாடப்பு செய்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
15 Oct 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையானது.
-
ஒருநாள் - டி-20 போட்டி தொடர்: ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி
15 Oct 2025மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி-202 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
15 Oct 2025சென்னை : செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு த.வெ.க.
-
விளையாட்டு பல்கலை. சட்ட மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
15 Oct 2025புதுடெல்லி : உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தொடர்பாக கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு த
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: அ.தி.மு.க.விற்கு முதல்வர் பாராட்டு
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அதே இடத்தில் அதற்கு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க.
-
கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்
15 Oct 2025திருவனந்தபுரம் : கென்யா முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா கேரளாவில் மரணம் அடைந்தார்.
-
தண்ணீரிலும், தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்கப்படும் : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
15 Oct 2025சென்னை : தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
15 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ள
-
தமிழக அரசின் நடவடிக்கையால் ஆம்னி பஸ் கட்டணம் குறைப்பு
15 Oct 2025சென்னை : 4 மடங்கு உயர்ந்த ஆம்னி பஸ் கட்டணம் தமிழக அரசின் நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி : சட்டசபையில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
15 Oct 2025சென்னை : எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் த.வெ.க.வுக்கு அனுமதி கொடுத்தனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக கூறினார்.
-
இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவால் சுட்டுக்கொலை
15 Oct 2025காசா சிட்டி : இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றனர்.
-
த.வெ.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவு
15 Oct 2025சென்னை : கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி
15 Oct 2025டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
-
முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில பயணிகள் மீது நடவடிக்கை : தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு
15 Oct 2025சென்னை : முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் பயணிப்பதையடுத்து அவர்களுக்கு தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
15 Oct 2025தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்பு
15 Oct 2025சென்னை : தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாடு அரசின் கூடுதல் செலவுக்கு ரூ.2,915 கோடி முதல் துணை மதிப்பீடு : சட்டசபையில் அமைச்சர் தாக்கல்
15 Oct 2025சென்னை : 2025-2026ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.2,915 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு அபராதம்
15 Oct 2025துபாய் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளதாக ஐ.சி.சி
-
தீபாவளிக்கு பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகளை விற்பதற்கு, வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
15 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் ரூ.13,430 கோடியில் திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
15 Oct 2025ஆந்திரா, பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் ரூ.13,430 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
15 Oct 2025சென்னை : சட்டசபை கூட்டத்திற்கு நேற்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர்.
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா
15 Oct 2025நியூயார்க் : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
-
பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
15 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
உலக கோப்பையில் தொடர் தோல்வி: உஜ்ஜைனி கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்திய அணி
15 Oct 2025உஜ்ஜைனி : உலக கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய