எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் 10 ஆண்டுகள் வீதம் மனிதனுடைய பூரண ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். 60 வயதில் உக்ரரத சாந்தியும் 70 வயதில் பீமரத சாந்தியும் 80 வயதில் விஜயரத சாந்தியும் செய்து அந்தந்த வயதில் ஏற்படும் கண்டங்களில் இருந்து தப்பித்து வாழலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இவ்வாறு பரிகாரம் செய்தால் மட்டுமே மனதில் மகிழ்ச்சியும் சாந்தியும் முழுமையான அளவில் கிடைக்குமா? அறுபது வயது கடந்தவர்களெல்லாம் தனக்கு முதுமை வந்து விட்டதாகக் கருதி மனதளவில் தளர்ச்சி அடைவதால் உடலும் தளர்ச்சி அடைகிறது. நமக்கு வயதாகி விட்டது. நாம் ஓய்வு பெற்றுவிட்டோம் என்ற எண்ணமே பலரை முடக்கிப் போட்டு விடுகிறது. அறுபதைக் கடந்தாலும் பொதுப்பணி, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு இயங்கிக் கொண்டே இருந்தாலும் முதுமையும் பொலிவு பெறும். கவலைகள், மனச் சோர்வு, எதிர்மறைச் சிந்தனைகள், தீய எண்ணங்கள் இல்லாவிடில் முதுமை விலகி ஓடிவிடும். ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உணவுமுறை, தன்னுடன் உள்ளோரிடம் அன்பு பாசம் வளர்த்துக் கொண்டால் முதுமைக்கு விடை கொடுத்து விடலாம்.
பெரிய புராணத்தில் திருநீல கண்டருக்கும், அவர் மனைவிக்கும் வடிவுறு மூப்பு வந்தது என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார். மூப்பு என்றால் முதுமை. அழகு இளமையில் இருக்கும் முதுமையில் இராது என்றுதான் நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சேக்கிழாரோ மூப்பில் அழகு என்றார். வாழைக்காயை விட வாழைப்பழம் அழகானது. மாங்காயை விட மாம்பழம் அழகானது. காந்தியடிகள் சிறுவயதில் உள்ள புகைப்படத்தை விட முதுமையில் பொக்கை வாயராக உள்ள படமே அழகாக உள்ளது. சில கிழங்கள் அழகாயில்லை என்றால் நன்றாகப் பழுக்கவில்லை. வெம்பல் என்று பொருள் என்று வாரியார் சுவாமிகள் கூறுவார். வழுக்கை என்றால் வயதாகிவிட்டது என்பது அர்த்தமில்லை. இளமைக்குத்தான் வழுக்கை என்று பெயர். இளமையான தேங்காயைத்தானே வழுக்கை என்று கூறுகிறோம்.
முதுமை என்பது ஒரு பருவ மாற்றம் தான்
பாலையாம் தன்மை போய்
பாலனாம் தன்மை போய்
காளையாம் தன்மை போய்
காமுறு இளமை போய்
மேலும் இவ்வியல்பினாலே
மேல் வரும் மூப்புமாகி என்று குண்டலகேசி கூறுகிறது.
அதனால் இளமைக்காலத்திலேயே அடுத்து வரும் முதுமைக் காலத்திற்காக திட்டமிட்டு, திட்டமிட்டபடி உழைத்தால் அது நமது முதுமையின் சோர்வை விரட்டி விடும். கழுகு தன் அலகாலும், நகத்தாலும் மாமிசத்தைக் கிழித்து உண்பதால் அதன் அலகும், நகமும் பலவீனமடைந்து விடும். கழுகு தன் 40 வயதில் ஏதாவது மலை உச்சிக்குச் சென்று அமர்ந்து தனது அலகால் கால் நகங்களை வெட்டி எடுக்கும். பின்பு தன் அலகை கல்லில் மோதி உடைக்கும். 5 மாதம் மலை உச்சியில் இருந்து அதன் நகம், அலகு இவை மீண்டும் வளர்ந்தவுடன் புதிய பொலிவோடு, வலிவோடு இரைதேடி அடுத்து 30 ஆண்டுகள் வாழும். ஒரு பறவையே தன் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து திட்டமிட்டு வாழும் போது, ஆறறிவு படைத்த மனிதன் தன் இளமைக்காலத்தில் அதைவிட சிறப்பாகத் திட்டமிட்டு வாழ வேண்டாமா? அப்படித் திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால் முதுமை என்னும் சோர்வு நோயைத் துரத்தி அடிக்கலாம் தானே.
ராக்பெல்லர் தனது முதுமைக்காலத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாலிபன் நீங்கள் வேண்டிய அளவு சம்பாதித்து விட்டீர்கள். இந்த முதுமையில் ஓய்வு எடுக்காமல் இன்னும் ஏன் பறந்து பறந்து சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டான். அப்போது ராக்பெல்லர் இந்த விமானம் மேலே பறக்க ஆரம்பித்து விட்டதே, இதன் இஞ்சினை நிறுத்திவிடலாமா என்றார். முடியாது என்றான் வாலிபன். அதுபோல் நாம் உழைப்பதை வாழ்க்கையின் எந்த உயரத்துக்கு போனாலும் எந்த வயதிலும் நிறுத்தமுடியாது. நிறுத்தவும் கூடாது என்றார்.
உதடு பிரிந்தால் ஓசை
இமை பிரிந்தால் பார்வை
கரு பிரிந்தால் உயிர்
பணியிலிருந்து பிரிந்தால் ஓய்வு ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது ஒரு அலுவலக பயணத்தின் பணி நிறைவு மட்டுமே. அதற்குப்பின் வாழ்க்கையின் அடுத்த பக்கத்தின் ஆரம்பம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுவதைப் போல. இங்கிலாந்தில் 65 ஆண்டுகளாக மகாராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 91-வது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.
அங்கே வயதின் முதுமை தெரியவில்லை. மனதின் இளமைதான் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் போட்டியிடும் 60 தொகுதிகளை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
20 Jan 2026சென்னை, சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் போட்டியிடவுள்ள 60 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளதாக தகவல் வ
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரியில் இளைஞர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Jan 2026சென்னை, சென்னை வேளச்சேரியில் பார்த்திபன் என்ற இளைஞரை இருவர் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


