எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆட்டுப்பண்ணை இலாபகரமாக இருப்பது ஆடுகளின் இனவிருத்தி மற்றும் உற்பத்தித்திறனை பொறுத்துதான் அமைகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதில் முதன்மையாக திகழ்வது இனவிருத்தி. சரியான காலங்களில் இனவிருத்திக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட காலங்களில் தரமான குட்டியை ஈனச் செய்வதன் மூலம் தான் லாபகரமான பண்ணை அமையும். ஆகவே சினைப்பட்டு கருவுற்ற காலங்களில் பெட்டை ஆடுகள் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
சினைப்பட்டு கருவுற்ற ஆடுகளின் முதல் மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சினைப்பட்ட ஆடுகளை நீண்ட நேரம் நேரிடையாக கடுமையான சூரிய வெளிச்சத்தில் இருக்கச் செய்வது, மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் நடத்தி எடுத்துச் சென்று ஆடுகளுக்கு மிகுந்த சோர்வு ஏற்படச் செய்வது, ஆடுகளை மேய்ச்சலுக்காக விரட்டி அங்கும் இங்கும் ஓட்டிச் செல்வது மற்றும் அதிக எண்ணிக்கை ஆடுகளை குறைந்த இடவசதி உள்ள பட்டிகளில் அடைத்து வைப்பது போன்ற காரணங்களினால் உடல் கூறு செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்பட்டு, உண்டான கரு அழிய வாய்ப்பு உள்ளது. ஆகவே சினைப்பட்டு கருவுற்ற சில தினங்களுக்கு இளம் வெயில் நேரங்களில் மேய்ச்சலுக்கு எடுத்துச் சென்று மேய்ப்பது, வெயில் நேரங்களில் குளிர்ச்சியான நிழல் கொடுத்து நல்ல போதுமான காற்றோட்டமான இடவசதி அளிப்பது, தேவையான அளவு தண்ணீர் கொடுத்து சரியான தீவனப்பராமரிப்பு கொடுப்பதன் மூலம் ஆடுகளில் ஆரம்ப காலத்தில் ஏற்படக் கூடிய கருச்சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.
முன்பருவ சினைக் காலம் : முன்பருவ சினைக் காலங்களாக கருதப்படுவது கருவுற்றதில் இருந்து முதல் 100 நாட்களாகும். இக்காலத்தில் ஆடுகளின் முழு தீவனத் தேவையை பூர்த்தி செய்வது மேய்ச்சல் தரையே ஆகும். ஆகவே, நல்ல தரமான மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில் எளிதில் ஜீரணிக்ககூடிய தரமான மேய்ச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்கால நிலையில் ஆடுகளின் பராமரிப்புக்கு தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கை மற்றும் ஆடுகள் பராமரிப்பில் ஏற்படும் செலவையும் குறைத்து வருமானத்தை கூட்ட வழி வகை செய்து கொடுக்கின்றது. தேவையான சரியான தீவனம் கிடைக்கும் நிலையில் ஆடுகளின் உடல் நலம் பாதுகாக்கப்பட்டு தாயின் வயிற்றில் குட்டிகளின் வளர்ச்சியும் சிறப்பானதாக காணப்படும்.
தரமற்ற மேய்ச்சல் தரையாக இருக்கும் நிலையில் ஆடுகள் தீவனத்தேவையை பூர்த்தி செய்து கொள்ள நிலத்துடன் ஒட்டி கிடைக்கக்கூடிய புல், பூண்டு மற்றும் விஷச் செடிகளையும் சேர்த்து உண்ண தூண்டப்படுகின்றது. இத்தகைய தரமற்ற மேய்ச்சல் தரையால் ஆடுகளுக்கு தேவையான தீவன சத்துக்கள் பூர்த்தி செய்ய இயலாமல் ஆடுகளின் உடல் பராமரிப்பு பாதிப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான நிலையில் மேய்ச்சல் தரை இருக்கும் காலகட்டத்தில் ஆடுகள் தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள விஷச் செடிகள் மற்றும் நிலத்துடன் ஒட்டி உள்ள தீவனப் புல்லை மண்ணுடன் சேர்த்து உண்பதால் ஆடுகளின் உடல்நிலையில் அயர்ச்சி மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டு சினை ஆடுகளில் குட்டி வீச்சும், ஆடுகளின் உடல் நலம் பாதிப்பும் ஏற்படும்.
ஆகவே தரமற்ற மேய்ச்சல் தரையின் மூலம் ஆடுகள் தீவனத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள இயலாத நிலையில் ஆடுகளின் உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப சரியான தீவனம் கிடைக்க வழிவகை செய்து கொடுத்தல் அவசியம். இதன் மூலம் ஏற்படக்கூடிய இழப்பை தடுத்து லாபத்தை ஈட்ட வழிவகுத்துக் கொடுக்கும்.
சினை ஆடுகளின் எடை கூடும் திறன் : இனவிருத்தி செய்யப்பட்டு கருத்தரிக்கப்பட்ட ஆடுகளின் எடை மாதமாதம் கூடுதலாகி கொண்டு இருக்க வேண்டும். சராசரியாக கருதரிக்கப்பட்டஆடுகளின் உடல் எடை 5-6 கிலோ அளவிற்கு கருத்தரித்ததில் இருந்து குட்டி ஈணுதல் வரை கூடி காணப்படும். இம்மாறு எடை கூடுதல் பலவகை காரணங்கள் கொண்டு மாறுபடும். அதாவது இனம், வயது, கருவின் வளர்ச்சி, ஈற்றுநிலை, கருவின் எண்ணிக்கை, பராமரிப்பு தன்மை போன்றவற்றை கொண்டு மாறுபடும்.
இளம் வயதில் கருத்தரிக்கப்பட்ட ஆடுகளின் வளர்ச்சியும் கருவின் வளர்ச்சியும் ஒருங்கே நடைபெறும். ஆகவே, இளம் வயதில் கருத்தரிக்கப்பட்ட ஆடுகளுக்கு ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும், வளர்ச்சிக்கும் மற்றும் கருவின் வளர்ச்சிக்கும் சேர்ந்து தீவனம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி பெற்ற ஆடுகள் கருத்தரிக்கும்போது அதனுடைய உடல் பராமரிப்பு மற்றும் குட்டிகளின் வளர்ச்சிக்கு மட்டும் தீவனம் கொடுத்து பராமரித்தால் போதுமானது. சினை ஆடுகளின் உடல்நலன் மற்றும் குட்டிகளின் வளர்ச்சியினை சினை ஆடுகளின் வெளித்தோற்றத்தை வைத்து ஓரளவிற்கு கணிப்பு செய்யலாம். அதாவது ஆடுகள் கருவுற்ற முதல் மாதத்தில் ஆடுகளை பிடித்து ஆடுகளின் விலா எலும்புகளுக்கும், தண்டுவட எலும்புகளுக்கும் இடையே கை வைத்துப் பார்க்கும்போது எலும்புகள் எளிதாக தட்டுப்படும். இந்நிலையே கருவின் வளர்ச்சி நாட்கள் கூட இருக்குமாயின் ஆடுகளின் பராமரிப்பு சரியாக இல்லையென்பதை நிரூபணம் செய்கின்றது. ஆகவே, இந்நிலை மாறுபட குட்டியின் சரியான வளர்ச்சிக்கும், ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற தீவனத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சினைப்பட்ட ஆடுகளை தரம் வாரியாகப் பிரித்து தீவனம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து ஆடுகளுக்கும் தேவையான தீவனம் சரியாக கிடைக்கும்.
பின் பருவ சினை கால பராமரிப்பு : கருவுற்ற முதல் 3ல் இருந்து 5 நாட்கள் எவ்வாறு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றதோ அதுபோலவே கர்ப்ப காலத்தின் கடைசி 30 - 45 நாட்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. கருவுற்ற ஆடுகளின் கரு வளர்ச்சி முதல் 100 - 120 நாட்கள் வரை மிகவும் மெதுவாக நடைபெறும். சினை காலத்தின் கடைசி 30 - 45 நாட்களில் 60 - 80 சதவிகித வளர்ச்சி தரிதமாக நடைபெறும். ஆகவே, இக்கால கட்டத்தில் ஆடுகளுக்கு தேவையான அளவு தரமான புரதம் நிறைந்த புல் மற்றும் பயறு வகை தீவனத்துடன் தேவைக்கு ஏற்ப கலப்பு தீவனம் 100 -1 50 கிராம் கொடுப்பதன் மூலம் ஆடுகளின் உடல் நலன் பாதுகாப்பதுடன் குட்டிகளின் வளர்ச்சியும் சீரிய முறையில் காணப்படும். சரியான பராமரிப்பு இல்லாத காலத்தில் ஆடுகள் உடல் நலன் பாதிக்கப்பட்டு குறை பிரசவ குட்டிகள் அல்லது குறைந்த பிறப்பு எடையுள்ள மெலிந்த குட்டிகள் பிறக்கும். மேலும், ஆடுகளில் பால் உற்பத்தியும் குறையும்;. இதனால் குட்டிகளின் வளர்ச்சி குன்றி, இறப்பை தழுவ வேண்டிய நிலை ஏற்படும்.
சினை ஆடுகளுக்கு புரதம் மற்றும் தாது உப்புத்தேவையை நிவர்த்தி செய்வது மிகவும் அவசியமானது. சினை ஆடுகளுக்கு இதர தீவனத்துடன் தினம் நல்ல தரமான புரதம் நிறைந்த பயறுவகை பசுந்தீவனத்தை 1 - 2 கிலோ அளவிற்கு குறைவில்லாமல் கொடுத்தல் வேண்டும்.
தண்ணீர் : ஆடுகளின் தண்ணீர் தேவையானது தீவன முறை, மேயக்கூடிய புல்லின் தன்மை மற்றும் பிறசுற்றுப்புற சீதோஷண நிலை போன்றவற்றைப் பொருத்து மாறபடும் நன்கு வளர்ந்த இளம் புற்களை தீவனமாக கொடுக்கும்போது இத்தகைய புற்களில் நீர் அளவு அதிகம் இருப்பதால் தண்ணீர் தேவை சற்று குறைந்து காணப்படும். குறைவான தண்ணீர் குடிக்கும் காலங்களில் உண்ணக்கூடிய தீவனத்தின் அளவும் குறைந்து மாறுபட்டு காணப்படும்.
ஆகவே, சினை ஆடுகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குளங்களில் தண்ணீர் எடுத்து கொடுக்ககூடிய நிலையாக இருப்பின் பாதுகாப்புடன் குளங்களை வைப்பதுடன் அதில் உள்ள நத்தை போன்றவற்றை அழித்து அப்புறப்படுத்தி ஆடுகளுக்கு உடல் நல தீங்கு நேரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாது உப்பு : தாது உப்பு ஆடுகளின் வளர்ச்சி, உற்பத்தி சினை தருணத்தை வெளிபடுத்தல், கருவளர்ச்சி, பால் உற்பத்தி போன்ற அனைத்து கால நிலைகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பொதுவாக இத் தாது உப்புகளின் தேவை மனிதனால் உருவாக்கப்பட்ட நல்ல நிலையில் பராமரிக்கும் மேய்ச்சல் தரையில் கிடைக்க கூடிய புல் மற்றும் பயறுவகை தீனவங்களில் இருந்தே ஒர் அளவிற்கு சரிசெய்யப்பட்டு வருகிறது. ஆனால் இயற்கையாகவே மண்ணின் தன்மை பாதிக்கப்ட்டடு தாமிரம், கோபால்ட் போன்ற தாது உப்புக்கள் கிடைக்காத நிலையில் தாது உப்புக் கலவையை ஆடுகளுக்கு கிடைக்கச் செய்வது மிகவும அவசியம்.
பொதுவாக ஆடுகளின் தாது உப்பு பற்றாக்குறையை ஆடுகளின் செயல்பாடுகளில் இருந்து ஒர் அளவிற்கு ஊகிக்க முடியும். ஆடுகளை மேய்ச்சலுக்காக திறந்துவிடும் போது மண், மணல் போன்றவற்றை நக்கி சுவைப்பது மேலும், கொட்டகையில் அடைத்து வைக்கும் போது கொட்டகை சுவர்களை நக்கி சுவைப்பது போன்ற அறிகுறிகள் மூலம் தாது உப்பு பற்றாக்குறையை வெளிபடுத்தும், இக்கால நிலையில் ஆடுகளுக்கு தாது உப்புக்கலவையை தீவனத்துடனும் சேர்த்து கொடுத்தும் அல்லது தாது உப்பு கலவை கட்டிகளை கொட்டகையின் பல இடங்களில் கட்டி தொங்கவிடுவதன் மூலமும் தாது உப்பு பற்றாக்குறையுள்ள ஆடுகள் நக்கி சுவைப்பது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.
தாது உப்புக் கலவையை தீவனத் தொட்டிகளில் கொட்டி வைக்கும் போது அதிக ஈரத்தன்மை இருப்பின் தாது உப்பு கலவைத்துகள்கள் ஒன்று சேர்ந்து கட்டி போல் ஆகி ஆடுகள் சரியாக பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆகவே, முடிந்த அளவிற்கு தாது உப்புக் கலவையை தீவனத்துடன் சேர்த்து கலந்து அனைத்து ஆடுகளுக்கும் கிடைக்கும்படி வைப்பது சிறந்தது. ஆகவே, சினை ஆடுகளின் உடல் பராமரிப்பிற்கும் குட்டிகளின் சரியான வளர்ச்சிக்கும் பால் உற்பத்திக்கும் குட்டி போட்ட ஆடுகளின் உடல்நலன் பாதுகாப்பிற்கும் தாது உப்புக்களை சரியான அளவு கிடைக்க வழிவகை செய்து கொடுக்கவேண்டும்.
நோய்த் தாக்கம் : ஆடுகளுக்கும் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி தாக்குதல்களினால் பல வகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால் ஆடுகளின் வளர்ச்சித்திறன் பாதிப்படைவதுடன் சினை ஆடுகளின் குட்டி வீச்சு, குட்டிகள் பிறக்குமாயின் மெலிந்த குட்டிகள், குட்டி ஈன்ற ஆடுகளின் பால் இல்லாமை போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, ஆடுகளை தாக்ககூடிய நோய்களில் இருந்து காக்க உரிய தடுப்பூசி செலுத்தி வரும் நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் உற்பத்தி நிலையை மேன்மை அடைய செய்து தரமான குட்டிகளை பெறலாம்.
ஒட்டுண்ணி தாக்கம் : ஒட்டுண்ணி தாக்குதல் சினை ஆடுகளில் ஏற்படும்போது இரத்த சோகை உண்டாகுதல் குட்டி வீச்சு, பால் உற்பத்தி குறைதல் போன்றவற்றை ஏற்படுவதுடன் சினை ஆடுகளின் உடல் நலன் பாதிக்கப்பட்டு இறப்பையும் உண்டாக்க காரண கர்த்தாவாக திகழ்கின்றது. ஆகவே சரியான மருந்தினை கொண்டு உரிய காலங்களில் குடல் நீக்கம் செய்தல் மூலம் ஆடுகளின் ஏற்படும் கருச்சிதைவு, இரத்தச் சோகை போன்றவற்றைக் கட்டுப்படுத்தி தரமான குட்டிகளை ஆடுகளில் இருந்து பெறமுடியும்.
சினை ஆடுகளின் இதர பராமரிப்பு : சினைப்பட்ட ஆடுகளில் இருந்து கிடாய்களை பிரித்து தனித்து வைக்க வேண்டும. இதர கால்நடைகளுடன் ஆடுகளை சேர்த்து மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் மேய்ச்சல் போட்டியின் காரணமாக இடிபட வாய்ப்பு உள்ளது. இதனால் கருசிதைவு, ஆடுகளில் இறப்பு போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோலவே நாய் போன்ற விலங்கினத்தின் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பது அவசியம். மேய்ச்சல் பகுதியில் கட்டி ஈனும் போது நாய்களினால் குட்டி மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு தொந்திரவு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆகவே, கவனத்துடன் இருப்பது நலம்.
சினை ஆடுகளை குளிப்பாட்டும் போது கவனத்துடன் கையாள வேண்டும், தவறுதலாக அல்லது ஆடுகளை மிகவும் விரட்டி பிடித்தாலும் சினை ஆடுகளின் உடல்நலன் பாதிப்பு கருசிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேற்கூறிய முறைகளை சினை ஆடுகள் பராமரிப்பில் கடைப்பிடிக்கும் நிலையில் ஆரோக்கியமான நிலையில் ஆடுகளை வைத்து நல்ல தரமான குட்டிகளையும் பெற இயலும் என்பது நிச்சயம்.
தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மு.வீரசெல்வம், கோ.ஜெயலட்சுமி, சோ.யோகேஷ்பிரியா, சு.கிருஷ்ணகுமார் மற்றும் ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை : மத்திய நிதி அமைச்சர் தகவல்
17 Dec 2025டெல்லி, வரி விதிப்பு விவகாரத்தை கவனமாக கையாண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.


