Idhayam Matrimony

நான் இன்னும் மாணவன்தான்: நடிகர் கமல் ருசிகர பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, நவ. 15 - பள்ளிப் படிப்பை முடிக்காததால் நான் என்னை இன்னும் மாணவனாகவே உணருகின்றேன் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். பேராசிரியர் ஞானசம்பந்தன் எழுதிய இலக்கிய சாரல், ஜெயிக்கப் போவது நீதான், மேடை பயணங்கள், சந்தித்ததும், சிந்தித்ததும், சிரித்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் பேசும் போது, 

ஞானசம்பந்தனும், நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஞானசம்பந்தனின் நகைச்சுவை இயல்பான ஒன்று. அவர் சிறந்த இலக்கியவாதி. ஆனாலும் தன்னுடைய புலமையை, தான் அறிந்த கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக, நகைச்சுவை உணர்வோடு உணர்த்தி விடுவார். இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை, நகைச்சுவை இருக்கிறது. அதனால் இவை அனைவரையும் சென்றடையும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago