எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், மார்ச்.11 - தமிழகத்தில் அரசியல் மாற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைவதற்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மா.கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
திண்டுக்கல்லில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மா.கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் மணிக்கூண்டில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், சி.பி.எம். மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்.வரதராஜன், எம்.எல்.ஏ. பாலபாரதி, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் பாண்டி, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், நம்முடைய தேசத்தில் மக்கள் இரண்டு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒன்று மிகப்பெரிய ஊழல், மற்றொன்று தொடர்ச்சியான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. இதனை ஏற்படுத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தேசத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். நாட்டில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய பணத்தை திட்டமிட்டு மறுவழியில் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அதனை மறுத்தது. கூட்டுக்குழுவை அமைக்க தயாராக இல்லை. ஏனெனில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் அம்பலப்பட்டு விடும் என்பதற்காகத் தான். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்பு தான் சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது. பிரதமரும், தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒன்றுமே நடக்கவில்லையெய தொடர்ந்து கூறி வந்தனர். 192 நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக லைசன்ஸ் வழங்கியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இதனை தடுக்க பிரதமரிடம் வலியுறுத்திய போதும் பிரதமர் ராசாவிற்கு கடிதம் மட்டுமே எழுதினார். அதன்பின்னர் தான் போலி நிறுவனங்களுக்கும், கள்ள நிறுவனங்களுக்கும் ராசா 2008 ஜனவரியில் அனுமதி வழங்கினார். இதனைத் தடுக்காத பிரதமர் பரிசுத்தமானவரா?
ராசாவின் அறிவாற்றல் காரணமாகவும், திறமையின் காரணமாகவும் தான் இன்று கிராம மக்கள் முதற்கொண்டு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், அதுவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல. நாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தான் இவ்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்குவதற்கு தனியார் கம்பெனிகள் தயாராக இருந்தன. ஆனால் அவைகளுக்கு எல்லாம் வழங்காமல் மிகக்குறைந்த விலையில் சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பது தான் உண்மை. இத்தொகை தேசத்திற்கு ஒரு ஆண்டிற்கு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம். கல்வித்தேவைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். சுகாதாரம், கல்வி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லப்படவேண்டிய பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். ராசா கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது.
முறைகேடாக வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்து மறு ஏலம் விடப்பட்டு எந்த நிறுவனம் அதிகமாக வாங்க முன்வருகிறதோ அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்மூலம் தான் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் காங்கிரஸும், பங்காளியான தி.மு.க. அரசும் இதனை செய்ய முன்வராது. ஏனெனில் அலைக்கற்றை பெற்ற பல ஆயிரம் கோடி ஊழல் பணம் அம்பலமாகி விடும் என்பதற்காகத் தான்.
மத்திய அமைச்சரவையில் உள்ள ஆறு தி.மு.க. அமைச்சர்கள் மட்டும் இவ்வளவு பெரிய தொகையைக் கொள்ளையடித்தார்கள் என்றால், 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்? தி.மு.க. ஊழலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டு கால மிகப்பெரிய ஊழல் ஆட்சியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளனர். ஒரே குடும்பமே அத்தனை துறையிலும் ஆதிக்கம் வைத்திருப்பதை எத்தனை காலம் தான் பொறுக்க முடியும் என்பதை முடிவு கட்டும் காலம் வந்து விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காததாலும், தகுதிக்கேற்ற பணி கிடைக்காததாலும் அல்லல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை. நெசவாளர்கள், கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நல்ல அரசை எதிர்பார்த்திருக்கின்றனர். தி.மு.க. அரசால் அதை நிறைவேற்ற முடியாது. இந்த அரசு தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளவே ஆட்சி செய்கிறது. எனவே ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மா.கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்திட தமிழக மக்கள் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.