எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், மார்ச்.11 - தமிழகத்தில் அரசியல் மாற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைவதற்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மா.கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
திண்டுக்கல்லில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மா.கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் மணிக்கூண்டில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், சி.பி.எம். மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்.வரதராஜன், எம்.எல்.ஏ. பாலபாரதி, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் பாண்டி, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், நம்முடைய தேசத்தில் மக்கள் இரண்டு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒன்று மிகப்பெரிய ஊழல், மற்றொன்று தொடர்ச்சியான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. இதனை ஏற்படுத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தேசத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். நாட்டில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய பணத்தை திட்டமிட்டு மறுவழியில் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அதனை மறுத்தது. கூட்டுக்குழுவை அமைக்க தயாராக இல்லை. ஏனெனில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் அம்பலப்பட்டு விடும் என்பதற்காகத் தான். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்பு தான் சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது. பிரதமரும், தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒன்றுமே நடக்கவில்லையெய தொடர்ந்து கூறி வந்தனர். 192 நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக லைசன்ஸ் வழங்கியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இதனை தடுக்க பிரதமரிடம் வலியுறுத்திய போதும் பிரதமர் ராசாவிற்கு கடிதம் மட்டுமே எழுதினார். அதன்பின்னர் தான் போலி நிறுவனங்களுக்கும், கள்ள நிறுவனங்களுக்கும் ராசா 2008 ஜனவரியில் அனுமதி வழங்கினார். இதனைத் தடுக்காத பிரதமர் பரிசுத்தமானவரா?
ராசாவின் அறிவாற்றல் காரணமாகவும், திறமையின் காரணமாகவும் தான் இன்று கிராம மக்கள் முதற்கொண்டு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், அதுவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல. நாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தான் இவ்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்குவதற்கு தனியார் கம்பெனிகள் தயாராக இருந்தன. ஆனால் அவைகளுக்கு எல்லாம் வழங்காமல் மிகக்குறைந்த விலையில் சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பது தான் உண்மை. இத்தொகை தேசத்திற்கு ஒரு ஆண்டிற்கு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம். கல்வித்தேவைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். சுகாதாரம், கல்வி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லப்படவேண்டிய பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். ராசா கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது.
முறைகேடாக வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்து மறு ஏலம் விடப்பட்டு எந்த நிறுவனம் அதிகமாக வாங்க முன்வருகிறதோ அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்மூலம் தான் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் காங்கிரஸும், பங்காளியான தி.மு.க. அரசும் இதனை செய்ய முன்வராது. ஏனெனில் அலைக்கற்றை பெற்ற பல ஆயிரம் கோடி ஊழல் பணம் அம்பலமாகி விடும் என்பதற்காகத் தான்.
மத்திய அமைச்சரவையில் உள்ள ஆறு தி.மு.க. அமைச்சர்கள் மட்டும் இவ்வளவு பெரிய தொகையைக் கொள்ளையடித்தார்கள் என்றால், 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்? தி.மு.க. ஊழலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டு கால மிகப்பெரிய ஊழல் ஆட்சியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளனர். ஒரே குடும்பமே அத்தனை துறையிலும் ஆதிக்கம் வைத்திருப்பதை எத்தனை காலம் தான் பொறுக்க முடியும் என்பதை முடிவு கட்டும் காலம் வந்து விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காததாலும், தகுதிக்கேற்ற பணி கிடைக்காததாலும் அல்லல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை. நெசவாளர்கள், கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நல்ல அரசை எதிர்பார்த்திருக்கின்றனர். தி.மு.க. அரசால் அதை நிறைவேற்ற முடியாது. இந்த அரசு தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளவே ஆட்சி செய்கிறது. எனவே ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மா.கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்திட தமிழக மக்கள் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
02 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 2-ம் கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன. 6-ல் புதிய புயல் சின்னம் உருவாகிறது
02 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
02 Jan 2026சென்னை, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் திருச்சியில் வைகோவின் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
02 Jan 2026சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தி.மு.க.
-
மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jan 2026சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை பல்கலை. இணையத்தில் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தை பதிவேற்ற இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jan 2026சென்னை, தஞ்சை தமிழ்ப்பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
இனி நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது: வைகோவிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்
02 Jan 2026திருச்சி, மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
02 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
02 Jan 2026சென்னை, முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
-
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
02 Jan 2026கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் தோரட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது.


