எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், மார்ச்.11 - தமிழகத்தில் அரசியல் மாற்றம் மற்றும் தமிழக மக்களின் நலனைக் காப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைவதற்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என மா.கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
திண்டுக்கல்லில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மா.கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் மணிக்கூண்டில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், சி.பி.எம். மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்.வரதராஜன், எம்.எல்.ஏ. பாலபாரதி, சி.பி.எம். மாவட்டச் செயலாளர் பாண்டி, சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் சி.பி.எம். அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், நம்முடைய தேசத்தில் மக்கள் இரண்டு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒன்று மிகப்பெரிய ஊழல், மற்றொன்று தொடர்ச்சியான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு. இதனை ஏற்படுத்தியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசும் தான். ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தேசத்தின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டு மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். நாட்டில் சுகாதாரம், கல்வி, வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய பணத்தை திட்டமிட்டு மறுவழியில் ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது காங்கிரஸ் அதனை மறுத்தது. கூட்டுக்குழுவை அமைக்க தயாராக இல்லை. ஏனெனில் விசாரணை நடத்தினால் பல உண்மைகள் அம்பலப்பட்டு விடும் என்பதற்காகத் தான். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்பு தான் சி.பி.ஐ. முழுமையாக விசாரணை நடத்தி வருகிறது. பிரதமரும், தமிழக முதல்வர் கருணாநிதியும் ஒன்றுமே நடக்கவில்லையெய தொடர்ந்து கூறி வந்தனர். 192 நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக லைசன்ஸ் வழங்கியதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி இதனை தடுக்க பிரதமரிடம் வலியுறுத்திய போதும் பிரதமர் ராசாவிற்கு கடிதம் மட்டுமே எழுதினார். அதன்பின்னர் தான் போலி நிறுவனங்களுக்கும், கள்ள நிறுவனங்களுக்கும் ராசா 2008 ஜனவரியில் அனுமதி வழங்கினார். இதனைத் தடுக்காத பிரதமர் பரிசுத்தமானவரா?
ராசாவின் அறிவாற்றல் காரணமாகவும், திறமையின் காரணமாகவும் தான் இன்று கிராம மக்கள் முதற்கொண்டு செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், அதுவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல. நாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகத் தான் இவ்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்குவதற்கு தனியார் கம்பெனிகள் தயாராக இருந்தன. ஆனால் அவைகளுக்கு எல்லாம் வழங்காமல் மிகக்குறைந்த விலையில் சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளனர். அதன்மூலம் அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பது தான் உண்மை. இத்தொகை தேசத்திற்கு ஒரு ஆண்டிற்கு சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம். கல்வித்தேவைக்கு ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். சுகாதாரம், கல்வி, நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லப்படவேண்டிய பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். ராசா கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டும் போதாது.
முறைகேடாக வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்து மறு ஏலம் விடப்பட்டு எந்த நிறுவனம் அதிகமாக வாங்க முன்வருகிறதோ அவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்மூலம் தான் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால் காங்கிரஸும், பங்காளியான தி.மு.க. அரசும் இதனை செய்ய முன்வராது. ஏனெனில் அலைக்கற்றை பெற்ற பல ஆயிரம் கோடி ஊழல் பணம் அம்பலமாகி விடும் என்பதற்காகத் தான்.
மத்திய அமைச்சரவையில் உள்ள ஆறு தி.மு.க. அமைச்சர்கள் மட்டும் இவ்வளவு பெரிய தொகையைக் கொள்ளையடித்தார்கள் என்றால், 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்? தி.மு.க. ஊழலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டு கால மிகப்பெரிய ஊழல் ஆட்சியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டை தனது குடும்ப சொத்தாக மாற்றியுள்ளனர். ஒரே குடும்பமே அத்தனை துறையிலும் ஆதிக்கம் வைத்திருப்பதை எத்தனை காலம் தான் பொறுக்க முடியும் என்பதை முடிவு கட்டும் காலம் வந்து விட்டது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காததாலும், தகுதிக்கேற்ற பணி கிடைக்காததாலும் அல்லல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை. நெசவாளர்கள், கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய நல்ல அரசை எதிர்பார்த்திருக்கின்றனர். தி.மு.க. அரசால் அதை நிறைவேற்ற முடியாது. இந்த அரசு தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளவே ஆட்சி செய்கிறது. எனவே ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் மா.கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்திட தமிழக மக்கள் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
மதுராந்தகத்தில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
17 Jul 2025சென்னை, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மதுராந்தகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள