எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் வீடு, உறவினர் வீடுகள், கல்லூரி உட்பட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கொத்து கொத்தாக சாவிகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி விபரம் வருமாறு:-
தி.மு.க.வில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருப்பவர் துரைமுருகன். கருணாநிதி குடும்ப பிரச்சினைகளில் ஆலோசனை கூறும் அளவுக்கு நெருக்கமானவர். அவர் 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி அமைச்சரவையில் தொடர்ந்து அமைச்சராக இருந்து வருபவர். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்பு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
புதிய தலைமை செயலகம் கட்ட ஆரம்பித்த புதில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மீது புகார்கள் வந்ததாகவும், அதிக அளவில் கமிஷன் கேட்டு முறையாக அதை மேலிடத்தில் தராமல் வைத்து கொண்டதாகவும், அதனால் அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கருணாநிதி கழற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
துரைமுருகன் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தாக புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததின் பேரில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சென்னை கோட்டூர்புரத்தில் துரைமுருகன் வசிக்கும் வீட்டிற்கு நேற்று காலை 6.45 மணிக்கு நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டிலிருந்து துரைமுருகனிடம் காரணத்தை கூறி சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவது தெரிந்தவுடன் தி.மு.க.வினர் ஏராளமானோர் வீட்டு முன் திரண்டனர். முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்ரமண்யம், ஆர்.எஸ்.பாரதி, வெங்கடபதி ஆகியோர் வந்தனர். பொன்முடி, மா.சுப்ரமண்யம் ஆகியோரை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
நேற்று காலை சென்னையில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரம் துரைமுருகனின் மகன் வீடு, வணிக வளாகம், சகோதரர் வீடு உட்பட 14 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசாரின் சோதனை மாலை வரை நீடித்தது. இதில் வேலூரில் உள்ள வீட்டில் சோதனையிட்டதில் ஏராளமான ஆவணங்களும், கொத்து சாவிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரின் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களும், சொத்து விபரங்கள் குறித்த கம்ப்யூட்டர் ஆவணங்களும், தஸ்தா வேஜூகளையும் போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.துரைமுருகன் மேல் 13 (2), 13 (1) ஆகிய பிரிவிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடுகளிலும் சோதனை:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடுகள் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 7மணிக்கு லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடு தொழிற்சாலை இன்ஜினரிங் கல்லூரி அவரது தம்பி சிங்காரம் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள வீட்டுலும் சோதனை நடைபெற்றது. மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி நூற்பாலை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மினரல் வாட்டர் நிறுவனத்திலும் ஐடிசி குடோனிலும் திவிர சோதனை நடத்தினர். இதை போல காட்பாடியில் உள்ள கிங்ஸடன் இன்ஜீனரிங் கல்லூரிதுரைமுருகன் பண்ணை விடுகளிலும் சோதனை நடைபெற்றது. இச்சோதனை குறித்து லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் கூறியதாவது முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும் அவரது மனைவி மற்றும் தம்பி சிங்காரம் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். சோதனையின் போது போதிய அதராங்கள் கிடைத்துள்ளதாகவும் இதன் படி குற்றம் எண்-17/2011 பிரிவு 13(2) ஆர் டபிள்யூ 13(1 )(இ) ஆகிய ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தனர். மேலும் சோதனையின் போது சென்னை லஞ்ச ஓழிப்பு டி.எஸ்.பி.அல்லிபாஷா வேலூர் டி.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் கொண்ட போலீஸ்சார் சோதனையில் ஈடுப்பட்டனர். இச்சோதனை 4மணி நேரம் நிடித்தது. காட்பாடி துரைமுருகன் வீட்டில் அவரது மனைவி சாந்தகுமாரி அவரது மகன் கதீர்ஆனந்த ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். இதை தொடர்ந்து சித்தூர் ரோட்டில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடைபெற்றது.
ரெய்டு நடைபெற்ற இடங்கள்
1. சென்னை காந்தி மண்டபம் சாலை கோட்டூர் புரத்திலுள்ள துரைமுருகன் வசிக்கும் இல்லம்.
2. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகர் எண்.7-ல் உள்ள துரைமுருகன் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
3. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகரில் எண்.6-ல் உள்ள துரைமுருகனுடைய மனைவியின் பெயரிலுள்ள வீடு.
4. வேலூர் காட்பாடி காந்திநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள துரைமுருகனின் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
5. வேலூர் காட்பாடி கண்டிப்பேடு கசம் கிராமத்தில் உள்ள துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி.
6. வேலூர் காட்பாடி 2-வது பிரதான சாலையில் உள்ள மினரல் வாட்டர் கொடவுன். இது துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமானது.
7. வேலூர் காட்பாடியில் துரைமுருகன் மகன் பெயரில் இயங்கும் ஐ.டி.சி. சிகரெட் கம்பெனி கொடவுன்.
8. வேலூர் காட்பாடி மேட்டுக்குளம் சித்தூர் பிரதான சாலையில் உள்ள கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜ் இது துரைமுருகன் பெயரில் உள்ள கல்வி அறக்கட்டளை பெயரில் இயங்குகிறது.
9. ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் மகன் ஆனந்த் பெயரில் உள்ள காட்டேஜ்.
10. திருப்பத்தூர் ஏலகிரி ஆதனாவூர் மஞ்சு கொல்லை புதூரில் உள்ள ஸ்பின்னிங் மில் காட்டேஜ் (இது கதிர் மில்லுக்கு சொந்தமான காட்டேஜ்).
11. காஞ்சிபுரம் மேல் கோட்டையூர் கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் உள்ள ராஜம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி.
12. அடையாரில் உள்ள துரை முருகனுக்கு சொந்தமான தேவ் ரெஸிடென்ஸியில் உள்ள 2ஏ, 2சி, 3டி எண்ணுள்ள 3 அபார்மெண்ட் பிளாட்டுகள்.
துரைமுருகனின் சொத்து மதிப்பு:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஜினியரிங் காலேஜ், ஸ்பின்னிங் மில், கோட்டூர்புரத்தின் வீடு, அடையாரில் 3 பிளாட்டுகள், ஏலகிரியில் காட்டேஜ் என்று சொத்து குவித்துள்ள துரைமுருகன் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தனது சொத்துமதிப்பு ரூ.3 கோடியே 39 லட்சம் என்றும், தனக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக ஒரு கார் கூட அவரிடம் இல்லையாம். ஆனால் 3 விலையுயர்ந்த சொகுசு கார்கள் எப்போதும் துரைமுருகன் வீட்டு வாசல் முன்பு நிற்க்கும்.
துரைமுருகன் 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் தனக்கும் தனது மனைவி பெயரிலும் ரூ.6 கோடியே 20 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும், தனது தனிப்பட்ட சொத்து ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும் தனது மனைவி பெயரில் ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துகளும், 2 கோடியே 80 லட்சம் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும், ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டூர்புரத்தில் துரைமுருகனின் வசிக்கும் வீடு பலகோடி பெறும் அடையாரில் உள்ள 3 பிளாட்டுகள் பல கோடி பெறும் பஸ்பின்னிங் மில்லும், என்ஜினியரிங் கல்லூரியும் கட்ட எவ்வளவு கோடி செலவாகும் என்று கூறவே வேண்டாம்.
ஆனால் இவைகளை அறக்கட்டளை பெயரில் பதவி செய்து ஊரையும், நாட்டையும் ஏமாற்றி வருகின்றனர்.
படிப்பு செலவுக்கும் காசில்லாமல் எம்.ஜி.ஆர். உதவியால் படித்த துரைமுருகன்:
துரைமுருகன் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சிலர் மூலம் எம்.ஜி.ஆரை அணுகினாராம். அவரது நிலையை கேட்ட எம்.ஜி.ஆர். நன்றாக படி என்று அனுப்பி வைத்தாராம்.
படிக்க செலவுக்கு பணமில்லை என்று எம்.ஜி.ஆரிடம் போய் நின்றபோது துரைமுருகன் சட்டம் பயில எம்.ஜி.ஆர். பண உதவி செய்தாராம். (அதன் பிறகு கட்சியிலும் மாணவர் அணியில் இருந்த துரைமுருகன் தனது மகன் கல்லூரிக்கு செல்லும் மாணவனாக இருக்கும் வரை மாணவரணி நிர்வாகியாக இருந்தது தனிக்கதை.)
எம்.ஜி.ஆர். உதவியால் படித்து ஆளான துரைமுருகன் 1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்தபோது நன்றி மறந்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் பண்ணினார். இதுபோல் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆர்ரை சட்டசபையில் விமர்சித்உத கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி சட்டசபைக்குள் விழுந்துவிட்டார் துரைமுருகன் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவரை வளர்த்து படிக்க வைத்த பாசத்தில், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஓடிவந்து துரை முருகனை தூக்கி தாங்கிபிடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய வைத்து தாயன்புடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் அப்போது சட்டசபையில் இருந்தார். (மெளனமாக பார்த்துக்கொண்டு) அன்று படிப்பு செலவுக்கே பணமில்லாதவர் இன்று பல கோடிக்கு அதிபதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


