எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.25 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் துரைமுருகன் வீடு, உறவினர் வீடுகள், கல்லூரி உட்பட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கொத்து கொத்தாக சாவிகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி விபரம் வருமாறு:-
தி.மு.க.வில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருப்பவர் துரைமுருகன். கருணாநிதி குடும்ப பிரச்சினைகளில் ஆலோசனை கூறும் அளவுக்கு நெருக்கமானவர். அவர் 1989-ம் ஆண்டு முதல் கருணாநிதி அமைச்சரவையில் தொடர்ந்து அமைச்சராக இருந்து வருபவர். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்பு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
புதிய தலைமை செயலகம் கட்ட ஆரம்பித்த புதில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் மீது புகார்கள் வந்ததாகவும், அதிக அளவில் கமிஷன் கேட்டு முறையாக அதை மேலிடத்தில் தராமல் வைத்து கொண்டதாகவும், அதனால் அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கருணாநிதி கழற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
துரைமுருகன் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தாக புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததின் பேரில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
சென்னை கோட்டூர்புரத்தில் துரைமுருகன் வசிக்கும் வீட்டிற்கு நேற்று காலை 6.45 மணிக்கு நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டிலிருந்து துரைமுருகனிடம் காரணத்தை கூறி சோதனை மேற்கொண்டனர். துரைமுருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவது தெரிந்தவுடன் தி.மு.க.வினர் ஏராளமானோர் வீட்டு முன் திரண்டனர். முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்ரமண்யம், ஆர்.எஸ்.பாரதி, வெங்கடபதி ஆகியோர் வந்தனர். பொன்முடி, மா.சுப்ரமண்யம் ஆகியோரை போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
நேற்று காலை சென்னையில் உள்ள துரைமுருகனின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரம் துரைமுருகனின் மகன் வீடு, வணிக வளாகம், சகோதரர் வீடு உட்பட 14 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
போலீசாரின் சோதனை மாலை வரை நீடித்தது. இதில் வேலூரில் உள்ள வீட்டில் சோதனையிட்டதில் ஏராளமான ஆவணங்களும், கொத்து சாவிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசாரின் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களும், சொத்து விபரங்கள் குறித்த கம்ப்யூட்டர் ஆவணங்களும், தஸ்தா வேஜூகளையும் போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.துரைமுருகன் மேல் 13 (2), 13 (1) ஆகிய பிரிவிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடுகளிலும் சோதனை:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடுகள் தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை 7மணிக்கு லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீடு தொழிற்சாலை இன்ஜினரிங் கல்லூரி அவரது தம்பி சிங்காரம் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர். வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் உள்ள வீட்டுலும் சோதனை நடைபெற்றது. மேலும் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி நூற்பாலை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மினரல் வாட்டர் நிறுவனத்திலும் ஐடிசி குடோனிலும் திவிர சோதனை நடத்தினர். இதை போல காட்பாடியில் உள்ள கிங்ஸடன் இன்ஜீனரிங் கல்லூரிதுரைமுருகன் பண்ணை விடுகளிலும் சோதனை நடைபெற்றது. இச்சோதனை குறித்து லஞ்ச ஓழிப்பு போலீஸ்சார் கூறியதாவது முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீதும் அவரது மனைவி மற்றும் தம்பி சிங்காரம் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். சோதனையின் போது போதிய அதராங்கள் கிடைத்துள்ளதாகவும் இதன் படி குற்றம் எண்-17/2011 பிரிவு 13(2) ஆர் டபிள்யூ 13(1 )(இ) ஆகிய ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தனர். மேலும் சோதனையின் போது சென்னை லஞ்ச ஓழிப்பு டி.எஸ்.பி.அல்லிபாஷா வேலூர் டி.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் கொண்ட போலீஸ்சார் சோதனையில் ஈடுப்பட்டனர். இச்சோதனை 4மணி நேரம் நிடித்தது. காட்பாடி துரைமுருகன் வீட்டில் அவரது மனைவி சாந்தகுமாரி அவரது மகன் கதீர்ஆனந்த ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். இதை தொடர்ந்து சித்தூர் ரோட்டில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் சோதனை நடைபெற்றது.
ரெய்டு நடைபெற்ற இடங்கள்
1. சென்னை காந்தி மண்டபம் சாலை கோட்டூர் புரத்திலுள்ள துரைமுருகன் வசிக்கும் இல்லம்.
2. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகர் எண்.7-ல் உள்ள துரைமுருகன் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
3. வேலூர் ஈஸ்ட் காஸ்ட் ரோடு காந்திநகரில் எண்.6-ல் உள்ள துரைமுருகனுடைய மனைவியின் பெயரிலுள்ள வீடு.
4. வேலூர் காட்பாடி காந்திநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள துரைமுருகனின் சகோதரர் துரைசிங்கத்தின் வீடு.
5. வேலூர் காட்பாடி கண்டிப்பேடு கசம் கிராமத்தில் உள்ள துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமான மினரல் வாட்டர் கம்பெனி.
6. வேலூர் காட்பாடி 2-வது பிரதான சாலையில் உள்ள மினரல் வாட்டர் கொடவுன். இது துரைமுருகன் குடும்பத்திற்கு சொந்தமானது.
7. வேலூர் காட்பாடியில் துரைமுருகன் மகன் பெயரில் இயங்கும் ஐ.டி.சி. சிகரெட் கம்பெனி கொடவுன்.
8. வேலூர் காட்பாடி மேட்டுக்குளம் சித்தூர் பிரதான சாலையில் உள்ள கிங்ஸ்டன் இன்ஜினியரிங் காலேஜ் இது துரைமுருகன் பெயரில் உள்ள கல்வி அறக்கட்டளை பெயரில் இயங்குகிறது.
9. ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் மகன் ஆனந்த் பெயரில் உள்ள காட்டேஜ்.
10. திருப்பத்தூர் ஏலகிரி ஆதனாவூர் மஞ்சு கொல்லை புதூரில் உள்ள ஸ்பின்னிங் மில் காட்டேஜ் (இது கதிர் மில்லுக்கு சொந்தமான காட்டேஜ்).
11. காஞ்சிபுரம் மேல் கோட்டையூர் கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் உள்ள ராஜம்மா எக்ஸ்போர்ட் கம்பெனி.
12. அடையாரில் உள்ள துரை முருகனுக்கு சொந்தமான தேவ் ரெஸிடென்ஸியில் உள்ள 2ஏ, 2சி, 3டி எண்ணுள்ள 3 அபார்மெண்ட் பிளாட்டுகள்.
துரைமுருகனின் சொத்து மதிப்பு:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஜினியரிங் காலேஜ், ஸ்பின்னிங் மில், கோட்டூர்புரத்தின் வீடு, அடையாரில் 3 பிளாட்டுகள், ஏலகிரியில் காட்டேஜ் என்று சொத்து குவித்துள்ள துரைமுருகன் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தனது சொத்துமதிப்பு ரூ.3 கோடியே 39 லட்சம் என்றும், தனக்கு ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்தமாக ஒரு கார் கூட அவரிடம் இல்லையாம். ஆனால் 3 விலையுயர்ந்த சொகுசு கார்கள் எப்போதும் துரைமுருகன் வீட்டு வாசல் முன்பு நிற்க்கும்.
துரைமுருகன் 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் தனக்கும் தனது மனைவி பெயரிலும் ரூ.6 கோடியே 20 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும், தனது தனிப்பட்ட சொத்து ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துக்கள் உள்ளது என்றும் தனது மனைவி பெயரில் ரூ.3 கோடியே 39 லட்சம் அசையா சொத்துகளும், 2 கோடியே 80 லட்சம் அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், மனைவி பெயரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளதாகவும், ரூ.1 கோடியே 85 லட்சம் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டூர்புரத்தில் துரைமுருகனின் வசிக்கும் வீடு பலகோடி பெறும் அடையாரில் உள்ள 3 பிளாட்டுகள் பல கோடி பெறும் பஸ்பின்னிங் மில்லும், என்ஜினியரிங் கல்லூரியும் கட்ட எவ்வளவு கோடி செலவாகும் என்று கூறவே வேண்டாம்.
ஆனால் இவைகளை அறக்கட்டளை பெயரில் பதவி செய்து ஊரையும், நாட்டையும் ஏமாற்றி வருகின்றனர்.
படிப்பு செலவுக்கும் காசில்லாமல் எம்.ஜி.ஆர். உதவியால் படித்த துரைமுருகன்:
துரைமுருகன் ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சிலர் மூலம் எம்.ஜி.ஆரை அணுகினாராம். அவரது நிலையை கேட்ட எம்.ஜி.ஆர். நன்றாக படி என்று அனுப்பி வைத்தாராம்.
படிக்க செலவுக்கு பணமில்லை என்று எம்.ஜி.ஆரிடம் போய் நின்றபோது துரைமுருகன் சட்டம் பயில எம்.ஜி.ஆர். பண உதவி செய்தாராம். (அதன் பிறகு கட்சியிலும் மாணவர் அணியில் இருந்த துரைமுருகன் தனது மகன் கல்லூரிக்கு செல்லும் மாணவனாக இருக்கும் வரை மாணவரணி நிர்வாகியாக இருந்தது தனிக்கதை.)
எம்.ஜி.ஆர். உதவியால் படித்து ஆளான துரைமுருகன் 1977-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்தபோது நன்றி மறந்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் பண்ணினார். இதுபோல் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆர்ரை சட்டசபையில் விமர்சித்உத கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி சட்டசபைக்குள் விழுந்துவிட்டார் துரைமுருகன் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவரை வளர்த்து படிக்க வைத்த பாசத்தில், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஓடிவந்து துரை முருகனை தூக்கி தாங்கிபிடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து மயக்கம் தெளிய வைத்து தாயன்புடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்பதும், அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியும் அப்போது சட்டசபையில் இருந்தார். (மெளனமாக பார்த்துக்கொண்டு) அன்று படிப்பு செலவுக்கே பணமில்லாதவர் இன்று பல கோடிக்கு அதிபதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.


