எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகராட்சி பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப், ரெட்கிராஸ், தன்னார்வ அமைப்புகள் மூலம் 1000-க்கும் மேற்ப்பட்டவர்களை பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைத்து திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி நேற்று (29.10.2017) துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துக்கொண்டு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணியினை துவக்கி வைத்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி பகுதிகள் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இராசிபுரம், நாமக்கல் ஆகிய நகராட்சிகளை தொடர்ந்து இன்றைய தினம் திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1200-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஈடுபடுத்தப்பட்டு, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை முழுமையாக பெறவேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டினையும், சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இம்மாபெரும் தூய்மைப்பணியில் 25 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்செங்கோடு நகராட்சி முழுவதுமுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கட்டிடங்கள், சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்படுகின்றது. நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்கு லாரிகளும், சாக்கடைகள் மற்றும் நீர் போகும் பகுதிகளில் ஏதேனும் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை சரி செய்வதற்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும், தூய்மைப்பணியில் ஈடுபடும் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு நகராட்சி முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமசாமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் கோ.ரமேஷ்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர்(பொ) கே.சுகுமார், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன், திருச்செங்கோடு நகராட்சி, மருத்துவத்துறை, பொதுசுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தன்னார்வ அமைப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



