எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், அறநூத்துமலை மலைப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (07.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் பின் கலெக்டர் தெரிவித்ததாவது.
கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்திலுள்ள மலைக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக தற்பொழுது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அறநூத்துமலை பகுதியில் ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, ஆலடிப்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளி, தங்கும் விடுதி, சமையல் கூடம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் குறைவான புத்தங்கங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நூலகத்தில் அதிக புத்தங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு புதியதாக வாங்கி வைத்திட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணி பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் தனிநபர் இல்லக்கழிவறை கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் தனியாக கழிவறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் இங்கு வந்து, தனிநபர் இல்லக்கழிவறை கட்டப்பட்டதை உறுதி செய்ய உள்ளேன்.இங்கு உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மருத்துவ வசதி கோரி கோரிக்கை வைத்தனர். அறநூத்துமலைப்பகுதியில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கூடுதலாக மருத்துவ வசதிக்குக்காக நடமாடும் மருத்துவ வசதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வம், திட்ட அலுவலர் (ஆதிதிராவிடர் நலன்) பி.டி.சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.சரவணகுமார், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


