எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், உலக மீனவர் தினம், குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21-ம் தேதி அன்று உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மீனவர் தின விழா
அதன்படி இவ்வாண்டும் மீன்வளத்துறை மூலம் ‘உலக மீனவர் தினத்தை’ சிறப்பித்திடும்படியும், துறையின் மீனவர் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மீனவ மக்களுக்கு பறைசாற்றிடும் விதமான நிகழ்ச்சிகள், குளச்சல், மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மீனவ, மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியும், மீனவ மகளிருக்கான கடல் உணவு தயாரித்தல் போட்டியும், மீனவ இளைஞர்களுக்கான நீச்சல் போட்டியும் நடைபெற்றது.மேலும், மக்கள் பயன்பெறும் வகையில் மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கான உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பம் விநியோகம், தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் சேர விண்ணப்பம் விநியோகம், குளிர்காப்பு பெட்டிகள் மானியத்தில் பெற விண்ணப்பம் விநியோகம், 1 ஹெக்டேர் பரப்பில் புதிதாக குளம் மானியத்தில் அமைத்திட விண்ணப்பம் விநியோகம், உள்நாட்டு மீனவர்களுக்கான 50 சதவீதம் மானியத்தில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கும் திட்டத்தின் விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், மீன்வளத்துறை திட்டங்கள், சுகாதாரத்துறை மூலமாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் மருத்துவ முகாம் மற்றும் கடலோர காவல் குழுமத்துடன் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீன்வளத்துறை சார்பாக, கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்வளத்துறை, கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய அரசு சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ மகளிரால் தயாரிக்கப்பட்ட தேங்காய் சிறட்டையில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க அலங்கார பொருள்கள், ர்pலையன்ஸ் குழுமம்இ சுகாதார துறை - மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், உலக விவசாய மேம்பாட்டு நிதி - முகாம் (ஐகுயுனு)இ பெஜான்சிங் மருத்துவமனையின் கண் பரிசோதனை மருத்துவ முகாம் ஆகிய கண்காட்சி அரங்கத்தினை, கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து, ‘மீனவ தின விழா’ நிகழ்ச்சியில், மீனவர்களுக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரியை சார்ந்த டேனியல்தாஸ் என்பவருக்கு முதல் பரிசுதொகையாக ரூ. 5 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், ஆன்றோ ஜெரோனிக் என்பவருக்கு இரண்டாம் பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், மீனவ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டியில் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை) இணையம்புத்தன்துறை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோசப் ஸ்டெபி என்பவருக்கு முதல் பரிசுதொகையாக ரூ.2 ஆயிரத்து 500ஃ-மும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், சின்னவிளை, புனித ஜோசப் தொடக்கப்பள்ளி மாணவி ஆன்லின் லெனிஷா என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) கடியப்பட்டணம், புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி மாணவன் சகாய சாபின்ரோகர் என்ற மாணவனுக்கு முதல் பரிசுதொகையாக ரூ.2,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், இரண்டாம் பரிசுதொகையாக பள்ளம், புனித ஜூட் ததேயூஸ் மேல்நிலைப்பள்ளி ஆன்றோ வின்சி என்ற மாணவிக்கு ரூ.1,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், மீனவ மகளிருக்கான சமையல் போட்டியில் வெற்றி பெற்ற கோடிமுனையை சார்ந்த லிட்டில் பிளவர், மெர்லின் பாமா மற்றும் செலீன் ஆகியோர்களுக்கு முதல் பரிசுதொகையாக ரூ. 5 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், குளச்சலை சார்ந்த யூஜின் மேரி மற்றும் சுஜா ஆகிய மீனவ மகளிர்களுக்கு இரண்டாம் பரிசுதொகையாக ரூ. 3 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி. பிரின்ஸ், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையதலைவர் எம். சேவியர் மனோகரன், துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லேமக் ஜெயகுமார், உதவி இயக்குநர்கள் (மீன்துறை) த. நடராஜன் (நாகர்கோவில்), வே. தீபா (கன்னியாகுமரி), ஜெ.லை. அஜீத் ஸ்டாலின் (குளச்சல்), மானிய ஒருங்கிணைப்பாளர் வினோத் இரவீந்திரன், கடலோர காவல் குழுமம் ஆய்வாளர் நவின் மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி நாளை திறந்து வைக்கிறார்
28 Dec 2025கோவை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (30-ம் தேதி) திறந்து வைக்கிறார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
28 Dec 2025சென்னை, சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.



