எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 68 பயனாளிகளுக்கு ரூ. 2.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.ரவி வழங்கினார்.
அம்மா திட்ட முகாம்
திருவண்ணாமலை வட்டம் பவித்திரம் கிராமத்தில் ஆர்.சி.எம். தொடக்கப் பள்ளியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு தாசில்தார் ஆர்.ரவி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் முருகன் , மண்டல துணை தாசில்தார் ப.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, வருவாய் ஆய்வாளர் ஆர்.விஜயகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், சிறு குறு விவசாய சான்று, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை நிலப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் 65 பேருக்கு சிறுகுறு விவசாய சான்றும், 3 பேருக்கு பட்டா மாற்றம் சான்றும் உள்ளிட்ட 68 பேருக்கு ரூ. 2.60 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ஆர்.ரவி வழங்கினார்.
இந்த முகாமையட்டி கால்நடை துறை சார்பில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் (வெறையூர்) ராஜேஸ்வரி, தனிவருவாய் ஆய்வாளர் ச.விஜயரங்கன், கிராம நிர்வாக அலுவலர்கள் பி.ரூபா, வி.வித்யா உள்பட அரசு அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் எம்.மாதவன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


