எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரதான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை புதிய பொலிவுடன் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் என தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழக விளம்பரம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் நேற்று வந்தார். அவரை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்கு சென்று அவர் பயபக்திடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இணை ஆணையர் பாரதி ஆகியோர் கோயில் பகுதியில் கிரி பிரகாரம் மண்டபம் இடித்த பகுதிகள், தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் அகற்றப்பட்ட கடைகள், மேலும் வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கட்டப்படுவதற்காக அனுகிரக மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி வளாகம், நாழிகிணறு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தன. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:2018ம் ஆண்டு புத்தாண்டில் தமிழக மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தோம். இக்கோயிலில் கோயில் கிரி பிரகாரம் மண்டபம் இடிவதற்கு முன்பே அதனை இடிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் கோயில் நிர்வாகம் தீர்மானமாக போட்டு அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில் உடனடியா பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே எதிர்பாராமல் அசம்பாவிதம் நடந்து விட்டது. உடனடியாக தமிழக முதல்வர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அமைச்சரை அனுப்பி அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த பெண்ணிற்கு ரூ.5 லட்சம் வழங்கி, அவர்களின் வாரிசுகளுக்கு அவர்கள் படித்து முடிந்த பிறகு அறநிலையத்துறையில் பணி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கையாக கட்டிடங்களில் தன்மைகளை, ஆராய்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அப்படி இடிக்கும் போது, வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அப்படி அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை மாற்றி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நானும், அறநிலையதத்துறை இணை ஆணையர், தக்கார், மாவட்ட செலாளர் ஆகியோர் வியாபாரிகள் கூறி இடங்களில் நேரில் பார்த்து ஆய்வு செய்தோம். பல இடங்களை பார்த்துள்ளோம். ஜெயந்திநாதர் விடுதி வளாகத்தில் 21 கடைகளும், மேலும் அனுக்கிர மண்டபம், நாழிகிணறு பக்கத்தில் நிரந்தரமாக பஸ் ஸ்டாண்டாக செயல்பட துவங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியிலும் தேவஸ்தான கேண்டின் பகுதியிலும், அனுகிரக மண்டபத்திலும், நாழிகிணற்றிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் பாதைகளை நாங்கள் மட்டுமல்ல, வியாபாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். கோயில் கிரி பிரகார மண்டபத்தை கட்டுவதற்கு உபயதாரர் தயாராக இருக்கின்றனர். கல் மண்டபமாக தான் கட்டப்பட வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாராகவில்லை. விரைவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் வந்து திட்ட மதிப்பீடு தயார் அரசு, கோயில் நிர்வாகமும் செய்யும். இந்தியாவில் முக்கியமான கும்பகோணம் மகாமகத்தை சிறப்பாக நடத்தியதற்கு மத்திய அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. அதே போது இந்தியாவில் பஞ்சாப் பொற்கோயில் எல்லாம் உள்ள போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பழமை மாறாமல் பாதுகாப்பதற்காக மத்திய அரசு சிறப்பு விருது வழங்கியுள்ள கௌரவித்துள்ளது. அதே போல் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழா ஆகியவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் 6 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்தியுள்ளோம். அதே போல அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தியுள்ளோம். இந்தியாவில் தமிழகம் தான் முன்னோடி துறையாக அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயிலில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய பொலிவுடன் கோயிலை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக விரைவில் அதிகாரிகள் வர உள்ளனர். தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணிக்கு கோயிலுக்கு அடுத்தப்படியாக அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் கோயில் உள்ளது. பிரதான கோயிலான இக்கோயிலில் நிரந்த திட்டங்கள் நடக்க உள்ளது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 31ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பேசுகையில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். இது என்னுடைய துறையில் வருகிறது. இதனால் மணி மண்டபம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அதற்குரிய இடத்தை வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசி ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் செல்லப்பாண்டியன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்பாபு, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
25 Oct 2025ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
-
கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி
-
சாதனையை சமன் செய்த ராணா
25 Oct 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது.
-
காசா ஒப்பந்தம் தொடர்பான அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
25 Oct 2025நியூயார்க்: அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி அளித்தது.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி
25 Oct 2025சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
25 Oct 2025கோவை: ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் 45 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
25 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் சோகம்: துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் பலி
25 Oct 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
-
வங்கியில் லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் புதிய விதி அமல்
25 Oct 2025சென்னை: வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதி அமல் படுத்தப்பட உள்ளது.
-
11 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 819 ஆக அதிகரித்துள்ளது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேச்சு
25 Oct 2025புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 819 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
-
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
25 Oct 2025சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்
25 Oct 2025சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி...
-
ஆதாயத்திற்காக செயல்படாது தி.மு.க.: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
25 Oct 2025காஞ்சிபுரம்: தி.மு.க.
-
ரோகித் - கோலி அபாரம்: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி
25 Oct 2025சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


