எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, பரமத்தி சாலை, அண்ணா நகர் காலனி பி.எஸ்.ஏ பெட்ரோல் பங்க் எதிரில் நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியின் தொடக்க விழா நேற்று (21.01.2018) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமைவகித்தார். இவ்விழாவிற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு நாமக்கல் நகராட்சிக்கான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்ட பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
குடிநீர் திட்டம்
நாமக்கல் நகராட்சி, நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்நகராட்சியானது 64.24 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. நாமக்கல் நகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள சின்ன முதலைப்பட்டி, முதலைப்பட்டி, கொசவம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, காவெட்டிப்பட்டி, நல்லிப்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் தும்மங்குறிச்சி ஆகிய 9 ஊராட்சிகள் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 39 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நகராட்சியில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் இருந்து 3 தனித்தனி திட்டங்களின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கிடுவதற்காக தற்போது ஜேடர்பாளையம் காவிரி ஆற்று அணைக்கட்டு பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கபிலர் குறிச்சியில் 17.66 எம்.எல்.டி சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதிலிருந்து நீர் உந்து குழாய்கள் மூலம் சுமார் 24.60 கி.மீ தூரத்தில் உள்ள தும்மங்குறிச்சியில் 9.15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைத்து அதிலிருந்து சுமார் 31.30 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் நாமக்கல் நகராட்சியில் புதியதாக 9 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைத்து, புதிதாக நீர் பகீர்மான குழாய்கள் பதித்து குடிநீர் இணைப்புகள் அமைத்து குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன் நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு சுமார் 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேற்றப்படும்.
துவக்கி வைத்தனர்
நாமக்கல் நகராட்சிக்கு ஜேடர் பாளையம், காவிரி ஆற்றிலிருந்து ரூ.185.24 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணியினை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் பூமி பூஜையிட்டு பணியினை தொடங்கி வைத்தார்கள்.
கபிலக்குறிச்சியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய கிரீன் பார்க் பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அசோகன் ஆகியோருக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, நாமக்கல் சார் கலெக்டர் சு.கிராந்தி குமார் பதி , நாமக்கல் நகராட்சி ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியம், நகராட்சி பொறியாளர் என்.கமலநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை, நிர்வாக பொறியாளர்கள்; என்.ஆர்.தங்கவேல், கண்ணன், மணிவண்ணன், உதவி நிர்வாக பொறியாளர் சி.மதியழகன், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேலம்-நாமக்கல் மாவட்ட ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழக்கறிஞர்கள் தனசேகர், சந்திரசேகர், நாமக்கல் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேகர் உட்பட முன்னாள் நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் போலீசார் குவிப்பு
30 Dec 2025சென்னை, இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி? அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு
30 Dec 2025கீவ், ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் படைகளால் 91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்பட்ட நிலையில் உக்ரைன
-
தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
30 Dec 2025சென்னை, தமிழக மக்களுக்கு தொடர்ந்து உழைக்க திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோவையில் 11 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் துணை முதல்வர் உதயநி
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்
30 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பான பிரத்யேக செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
30 Dec 2025சென்னை, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
-
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டக்கோரிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு: ஐ.ஏ.எஸ். தலைமையிலான 3 பேர் கொண்ட குழு வழங்கியது
30 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.ஏ.எஸ்.
-
அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்: வீரபாண்டியில் ஜனவரி 4-ம் தேதி எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
30 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
-
அதிபர் புதின் வீட்டின் மீதான தாக்குதலுக்கு மோடி வருத்தம் பகையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
30 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினின் வீட்டைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் பயணம்
30 Dec 2025டெல்லி, 3 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-ம் தேதி அந்தமான் செல்கிறார்.
-
துருக்கியில் போலீசார் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
30 Dec 2025அங்காரா, துருக்கியில் 6 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். பேச்சு
30 Dec 2025திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
-
பிரியங்காவின் மகன் ரைஹானுக்கு இன்று ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் டெல்லி பெண்ணை மணக்கிறார்
30 Dec 2025ஜெயப்பூர், காங்கிரஸ் எம்.பி.
-
பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பு பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் குறித்து கருத்துகளை கேட்டறிய புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம்
30 Dec 2025சென்னை, யு.பி.ஐ. சேவையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம்: நாளை முதல் அதிகரிப்பு
30 Dec 2025சென்னை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Dec 2025- திருப்பதி நவநதி மகாதீர்த்தம்.
- ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.
- திருவிண்ணாழி பிரதட்சணம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Dec 2025 -
இன்றைய ராசிபலன்
30 Dec 2025



