எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவு தானிய உற்பத்தியை தன்னிறைவு அடைய செயல்படுத்தப்படும் திட்டமான உணவு தானிய உற்பத்தி இயக்கம் தொடர்பாக, வேளாண்மை இயக்குநர் லி.தஷ்ணாமூர்த்தி, தலைமையில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
இக்கூட்டத்தில் உணவு தானிய உற்பத்தி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அளவில் 100 இலட்சம் மெ.டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துதல், விதைகள் மற்றும் உரங்கள் ஆகிய இடுபொருட்களை பயன்படுத்துதல், பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை உயர்த்தி உற்பத்தியினை அதிகரித்தல் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி பரப்பு இலக்கான 156100 எக்டேரில், இதுவரை 159681 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15100 எக்டேர் பரப்பில் நடப்பு நவரை பருவத்தில் சாகுபடிக்கு கொண்டு வரப்படும் எனவும், இதன்மூலம் நடப்பாண்டில் 174781 எக்டேர் சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டு 8.32 லட்சம் மெ.டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும், சிறுதானியங்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்களில் நடப்பாண்டு 61632 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதன் மூலம் 3.314 இலட்சம் மெ.டன் உற்பத்தி செய்யப்படும் எனவும், பயறுவகை பயிர்களில் 87700 எக்டேர் பரப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை சுமார் ஒரு லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் 89600 மெ.டன் பயறுவகைகள் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் தமிழக அளவிலான உணவு உற்பத்தி இலக்கான 100 இலட்சம் மெ.டன் உற்பத்தியில் 12.5 இலட்சம் மெ.டன் சாதனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநில உற்பத்தியில் 12.5 சதவீத பங்களிப்பாகும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.இதுவரை உணவு தானிய பயிர்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறன், உற்பத்தி குறித்து வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், சிக்கன நீர்பாசனம், சீரிய இடுபொருட்களை பயன்படுத்துதல், நெல் வரப்பில் பயறு சாகுபடி செய்தல், கரும்பில் ஊடுபயிர் செய்தல் போன்ற உத்திகளை கையாள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு வேளாண்மை இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, அறிவுரை வழங்கினார்.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்தியினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பாக 13 பயனாளிகளுக்கு அரசு மானியத்தில் பவர் டில்லர்கள், ரொட்டாவேட்டர்கள், பாசனகுழாய்கள், விசைத்தெளிப்பான்கள், மழைத்தூவுவான்கள், சூரிய ஒளி விளக்குப்பொறி ஆகியவற்றை வழங்கினார்கள்.தொடர்ந்து, முகையூர் வட்டம் டி.கீரனூர் ஊராட்சியில், நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் மழைத்தூவுவான் மூலம் பாசனம் செய்யப்பட்டுள்ள மணிலா பயிரையும், வேங்கூர் ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கிழங்கு வகை மலைப்பயிர் - சம்மங்கி பயிரினையும், பன்னாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட்., யூனிட் சர்க்கரை ஆலையில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக்கூடம் மற்றும் கரும்பு நாற்று உற்பத்தியினையும் வேளாண் இயக்குநர் தஷ்ணாமூர்த்தி, மற்றும் கலெக்டர் இல.சுப்பிரமணியன், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிகழ்ச்சிகளில், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, கூடுதல் வேளாண்மை இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ், வேளாண்மை துணை இயக்குநர்கள் சண்முகம், மோகன்தாஸ், மு.செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண் அலுவலர் பி.சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குநர்கள் சுப்பிரமணியன், கருணாநிதி, கனகலிங்கம் மற்றும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சேலம் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.