எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை, ஜெயலலிதா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது தொடர்பாக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது, வருவாய்த்துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்; அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் , ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
70 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள்
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவினை "நாட்டு மக்களின் நல்வாழ்வு தின" மாக, ஜெயலலிதா பேரவை சார்பில் ஆண்டு முழுவதும் கடைப்பிடித்து, அனைத்துப் பிரிவினருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம், இரத்ததானம், கண் தானம் போன்றவற்றை வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்த தின விழாவினை, உலகமே பாராட்டுகின்ற வகையில், அம்மா பேரவை சார்பில் கொண்டாடுவதோடு, அவரது திருப்பெயரால்70 வகையான சீர்வரிசைகளோடு, 70 திருமணங்களையும் நடத்துவதென தீர்மானிக்கிறது.
மேலும் ஒட்டு மொத்த இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 10,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கு கொள்கின்ற "மாபெரும் இளைஞர் பெருவிழா" வினையும்; கிராமப் பாரம்பரிய வீர விளையாட்டான "ரேக்ளா ரேசி" னையும், கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி உலகமே வியக்கின்ற வகையில், ஆண்டு முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த தின விழாவினைக் கொண்டாடிட அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.
5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தீவிரமாகக் கடைப்பிடித்து, கிராமம், கிராமமாகச் சென்று, 5 லட்சம் இளைஞர், இளம் பெண்களை அ.தி.மு.க கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்து, ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்கின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே அரசியல் இயக்கம் அ.தி.மு.க. ஒன்றுதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்ற வகையில், "புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை" நடத்திட, ஜெயலலிதா பேரவை இக்கூட்டத்தின் வாயிலாக உறுதியேற்கிறது.
சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஈடில்லா தியாகத்தினையும், அயராத உழைப்பினையும், வற்றாத அன்பினையும், வாழும் வரலாறாக, வருங்கால தலைமுறைக்கு வழங்கிடும் வகையில், அவரது முழு உருவப் படத்தை, வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைத்து, வரலாறு படைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவைத் தலைவர், ப.தனபால் ஆகியோருக்கு, ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வங்கக் கடலோரம், மிகப் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைத்து, வருகின்ற காலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கிச் செல்லும் "புனித வழிபாட்டுத் தலமாக" உருவாக்கித் தந்திட அயராது உழைத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு இணைந்து ஆதரவு அளித்து துணை நிற்கின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், அம்மா வாழ்ந்து வரலாறு படைத்திட்ட "போயஸ் தோட்ட இல்லத்தை", பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்ற வகையில் "நினைவு இல்லமாகவும்", அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவச் சிலையை நிறுவிட மிக விரைவாக நடவடிக்கை எடுத்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஜெயலலிதா பேரவை கோடானு கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி வணங்குகிறது.
பல்வேறு சோதனைகளை, சாதனைகளாக்கி, நெருப்பாற்றில் நீந்தி, சரித்திர சாதனை பல படைத்திட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால், அயராத உழைப்பால், உருவாக்கப்பட்ட இச்சீர்மிகு தலைமைக் கழக கட்டிடத்திற்கு "அம்மா அன்பு மாளிகை" என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டும் என்றும், அவரது முழு திருவுருவச் சிலையினை தமிழக சட்டமன்ற வளாகத்திலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும் திறந்திட வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாக வாழ்விற்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது திருவுருவப் படத்தினை திறந்திட வேண்டும் என்றும், இத்திருப்பணிகளை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிட அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா பேரவை வேண்டுகிறது. இவ்வாறு அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.
-
இந்தியா வணிக வர்த்தகத்தில் சுமார் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
25 Dec 2025வாஷிங்டன், இந்தியா வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்
25 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன.;
-
உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
25 Dec 2025புதுடெல்லி, உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.


