Idhayam Matrimony

கடன் வாங்கி தருவதாக மோசடி- ரூ.15 லட்சத்துடன் தப்பிய வாலிபர் கைது

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      சென்னை

பெரம்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சத்துடன் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் பெரியார்நகரை சேர்ந்தவர் குமார். குடிநீர் சுத்திகரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.25 லட்சம் தேவைப்பட்டது.

கைது

 அவரிடம் ரூ.15 லட்சம் இருந்ததால் மீதி தொகை ரூ.10 லட்சத்தை கடனாக வாங்கி தரும்படி தனது நண்பர் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தை சேர்ந்த லோகேசிடம் கூறினார். அவர் அம்பத்தூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும், ஆனால் ரூ.15 லட்சத்தை அவரிடம் காட்டினால்தான் கடன் தருவார் என்று லோகேஷ் கூறினார். இதையடுத்து நேற்று மூன்தினம் இரவு ரூ.15 லட்சத்துடன் குமார் அம்பத்தூர் சூரப்பட்டுக்கு சென்றார்.

அவரிடம், லோகேஷ் ரூ.15 லட்சத்தை வாங்கி கடன் கொடுப்பவரிடம் காட்டி விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் பணத்துடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து குமார் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். லோகேசின் செல்போன் சிக்னல் வைத்து செங்கல்பட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து