Idhayam Matrimony

ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் உலக மகளிர் தின விழா

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      தூத்துக்குடி
Image Unavailable

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட உலக மகளிர் தினவிழா நடைபெற்றது

உலக மகளிர் தினவிழா

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தனது சமுதாய வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கல்வி,சுகாதாரம், மருத்துவம், பெண் கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது ஸ்டெர்லைட் காப்பர் கடந்த 2005ம் ஆண்டு முதல் மகளிர்  மேம்பாட்டு திட்டமான சகி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மகளிர் மேம்பாட்டுக்காக சகி என்ற திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறுதொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தொழில் தொடங்க செய்து பொருளாதாரரீதியாக அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. சகி திட்டத்தின் மூலம்  இரண்டாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அதன் மூலம்  சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாகி பயன்பெற்று வருகின்றனர். பெல் கல்வி மற்றும் பெண்கள் நலக்கழகம், துளசி சமூக அறக்கட்டளை மற்றும் தாயகம் சமூக நல அறக்கட்டளை  ஆகிய தொண்டு நிறுனங்களுடன் இணைந்து சகி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.சகி திட்டத்திலுள்ள மகளிர் சுயஉதவி குழு பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், அவர்களில் சிறந்த தொழில் முனைவோர்களை உற்சாகபடுத்தும் வகையில் ஆண்டு தோறும் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டின் உலக மகளிர் தினவிழா ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் தலைமை வகித்தார். சென்னையிலுள்ள சிசில் அன் எவால்வ் அமைப்பின் நிறுவன தலைவர் தொலைக்காட்சி பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்டெர்லைட் நிறுவன மனிதவளத்துறை தலைவர் கேப்டன் சோனிகா முரளீதரன்  ஸ்டெர்லைட் நிறுவன இணை துணை தலைவர் எ. சுமதி  அரசின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பி.ரேவதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக தொழில் செய்த மகளிர்குழுக்கள் மற்றும்  குழுவை சார்ந்த தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  சில்வியா ஜாண்,பி.எஸ்.எஸ் குழும இயக்குநர் வெயிலா கே.ராஜா, டி.எஸ.எப் குழுமத்தின் மேலாண் இயக்குநர் மல்கிஜா திவ்யா, பியர்ல் ஷிப்பிங் ஏஜன்சி நிதித்துறை தலைவர் நிவேதிதா ஈ.ராபின் போன்ற மகளிர் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் கைலாசம், மேலாளர் சுகந்தி செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து