எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை. டிச.30- சென்னைக்கு 250 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள கடுமையான சூறாவளி புயலான தானே' நாளை காலை நாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், மிக அதிகபட்சமாக 25 செ.மீ. வரை பலத்த மழை கொட்டும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான மிகக் கடுமையான சூறாவளி புயலான தானே' மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் சென்னைக்கு 250 கிலோ மீட்டர் கிழக்கு மற்றும் தென்கிழக்கிலும் புதுச்சேரிக்கு 270 கிலோ மீட்டர் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த தானே' புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு கடற்கரையை நாகப்பட்டினத்திற்கும் சென்னைக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று அதிகாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தானே புயல் கரையை நெருங்கும்போது லேசாக பலவீனமடையும் என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறி உள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேச கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும். மாலையில் மழை மேலும் வலுவடைந்து சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். 25 செ.மீட்டர் அளவுக்கு கூட மழை இருக்கலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் மிக அபாயம் என்று கருதப்படும் 10ம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் எச்சரிக்கை கொடியும் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் எச்சரிக்கை கொடியும் ஏற்றப்பட்டுள்ளன.
சூரைக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் வீசும். இது படிப்படியாக உயர்ந்து 110 கிலோ மீட்டர் முதல் 135 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல் அலைகள் 4 அடி உயரத்திற்கு எழும்பியது. இதன் காரணமாக கடற் கரையை ஒட்டி உள்ள தாழ்வான பகுதியில் வெள்ள நீர் புகுவதற்கான அபாயம் உள்ளது. கடல் கொந்தளிப்பு தொடர்ந்து நீடித்தது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி தெற்கு ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கன மழை நீடிக்கும் என்றும்மரங்கள் வேரோடு சாயக்கூடும், மின் சப்ளை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் நெல்லூர் பிரகாசம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் 8 முதல் 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் வீசுகிறது. இதன் காரணமாக கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில இடங்களில் அடித்துச் செல்லப்பட்டன. வேறு சில இடங்களிலும் படகுகள் சேதம் அடைந்தன. நேற்று காலை முதலே குளிர் காற்றுடன் மழை நீடித்தது.
தயார் நிலையில் தமிழக அரசு.
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள புயலின் தாக்கத்தால் மாநகர மக்கள் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு நிர்வாகமும், மாநகராட்சியும் செய்து வருகின்றன..
மழை வெள்ள பாதிப்பிலிருந்து உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை தொடங்குவதற்கும் அரசு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னைக்கு அருகே வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருப்பதால் கடந்த 3 நாட்களாக கடற்பகுதி மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்றிரவு முதல் வடசென்னை கடற்கரை பகுதியில் உள்ள எண்ணூர், அன்னை சிவகாமிநகர், இந்திராகாந்தி நகர், பாரதிநகர், மேட்டுக்குப்பம், காசி கோயில் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல்சீற்றத்தின் காரணமாக தடுப்பு கற்களையும் தாண்டி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 150 வீடுகள் பாதிப்புக்குள்ளாகின. அவர்கள் எல்லாம் தங்கள் உடைமைகளுடன் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகரித்ததை முன்னிட்டு ராயபுரம், காசிமேடு பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் அதிகமாகி உள்ளது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பதால் அரசுத்துறை அதிகாரிகளும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 15 மண்டல அதிகாரிகளும், பணியாளர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு வாகனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு ராட்சத மோட்டார் இயந்திரங்களும் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூகநலக்கூடங்கள், மருத்துவக்குழுக்கள், உணவு வழங்குவதற்கான சமையற் கூடங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
ஏரிகளில் தண்ணீர் திறப்பு:
தானே புயலின் விளைவாக கடும் மழை பெய்வதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி பொதுப்பணித்துறை செயலாளர் காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரித்துள்ளார். இதையொட்டி ஏரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தேவைப்பட்டால் ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றும்படி பொதுப்பணித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். நீர்வரத்தை பொறுத்து 200 கன அடியிலிருந்து 2,500 கன அடி நீர் வரை வெளியேற்றுவதற்கும், அதையொட்டி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்படுவதற்கும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
புயல் கரையை கடக்கும் சூழலில் நீர்வரத்து அதிகமாகும் நிலையையொட்டி கடலோர பகுதி மற்றும் ஏரி, குளம் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ் சாட்டர்ஜி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.