எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வருகின்ற 25.03.2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு விமான நிலைய வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு இன்று (18.03.2018) கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் , மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை , ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வெற்றிவேல் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது.
முதல்வர் வருகை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை துவங்கப்படவுள்ளது. இப்பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 25.03.2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்கள். இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் இன்று நேரில்ஆய்வு செய்யப்பட்டது. இந்த பயணிகள் விமான சேவையானது ட்ரூஜெட் மூலமாக வருகின்ற 25.03.2018 முதல் துவங்குகிறது. தோராயமாக நாள்தோறும் சென்னையிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு சேலம் வந்தடையவுள்ளதாகவும், அதேபோல் சேலத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் (ருனுஹசூ ) திட்டத்தின் படி மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.1499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பணயிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயணிகள் விமான சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடவடிக்கை
இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிலங்கள் இருக்கின்றன. மேலும், தனியார்நிலங்கள்கையகப்படுத்தும் போது அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது விரிவாக்கப்பணிக்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் பொதுமக்கள் விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் விமான நிலைய அலுவலர் சித்தானந்தன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் இராமதுரைமுருகன், ஓமலூர் வட்டாட்சியர் அறிவுடை நம்பி, ட்ரூஜெட் வணிக அலுவலர் செந்தில் ராஜா, மேலாளர் பிரசன்ன குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
12 Jan 2026


