எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வருகின்ற 25.03.2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு விமான நிலைய வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு இன்று (18.03.2018) கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் , மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை , ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வெற்றிவேல் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது.
முதல்வர் வருகை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை துவங்கப்படவுள்ளது. இப்பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 25.03.2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்கள். இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் இன்று நேரில்ஆய்வு செய்யப்பட்டது. இந்த பயணிகள் விமான சேவையானது ட்ரூஜெட் மூலமாக வருகின்ற 25.03.2018 முதல் துவங்குகிறது. தோராயமாக நாள்தோறும் சென்னையிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு சேலம் வந்தடையவுள்ளதாகவும், அதேபோல் சேலத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் (ருனுஹசூ ) திட்டத்தின் படி மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.1499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பணயிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயணிகள் விமான சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடவடிக்கை
இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிலங்கள் இருக்கின்றன. மேலும், தனியார்நிலங்கள்கையகப்படுத்தும் போது அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது விரிவாக்கப்பணிக்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் பொதுமக்கள் விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் விமான நிலைய அலுவலர் சித்தானந்தன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் இராமதுரைமுருகன், ஓமலூர் வட்டாட்சியர் அறிவுடை நம்பி, ட்ரூஜெட் வணிக அலுவலர் செந்தில் ராஜா, மேலாளர் பிரசன்ன குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026


