எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 புதிய நீதிமன்றங்கள் மற்றும் இரணியலில் கூடுதல் உரிமையியல் நீதிபதி குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் இந்திராபானர்ஜி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திறந்து வைத்தார். இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நீதிமன்றங்கள் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் இன்று ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவுநீதிமன்றம்), ஒரு குடும்பநல நீதிமன்றம், ஒரு கூடுதல் மகளிர் நீதிமன்றம், பத்மநாபபுரம் நகரில் இரண்டாவது குற்றவியர் நடுவர் நீதிமன்றம், இரணியல் நகரில் ஒருவிரைவு நீதிமன்றம் ஆகிய 5 புதிய நீதிமன்றங்கள் துவக்க விழா மற்றும் இரணியல் கூடுதல் உரிமையியல் நீதிபதிக்கான புதிய குடியிருப்பு திறந்து வைக்கப்படும் விழாஆகிய 6 விழாக்களும் ஒன்று சேர நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத தொடரில் புரட்சித்தலைவி அம்மா 25.09.2015 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்பட 10 இடங்களில் மாவட்ட நீதிபதி பதவி தரத்தில், 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5.32 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், பத்மநாபபுரத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.இவ்வறிவிப்புகளை தொடர்ந்து 28.12.2015 அன்று நாகர்கோவிலில் ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 9 பணியாளர்களுடன் ரூ.103.6 இலட்சம் செலவில் உருவாக்கவும், அதுபோன்று 23.12.2015 அன்று பத்மநாபபுரத்தில் ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் ரூ.67.66 இலட்சம் செலவில் உருவாக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த 26.12.2016 அன்று 4 கட்டங்களாக 15 குடும்ப நல நீதிமன்றங்களை ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 23 பணியாளர்களுடன் ரூ.19.46 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிடப்பட்டது.கடந்த 05.04.2017 அன்று 22 கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை 2 கட்டங்களாக ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 7 பணியாளர்களுடன் ரூ.6.61 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக நாகர்கோவில் உட்பட 11 இடங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிட்டது. அதுபோன்று கடந்த 22.04.2016 ஆம் ஆண்டு இரணியல் நகரில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நிதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேங்கியிருப்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் அமையவிருந்த இரண்டாவது விரைவு நீதிமன்றத்தை இரணியலுக்கு மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டது. இவ்வாணைகளை தொடர்ந்து இன்று இந்த 5 நீதிமன்றங்களும் தொடங்கி வைக்கப்படுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், 25.05.2015 அன்று இரணியலில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களுக்கு ரூ.14.11 இலட்சம் செலவில் குடியிருப்பு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையை தொடர்ந்து அந்த குடியிருப்பு கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டதிலும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமில்லாமல் இப்புதிய 5 நீதிமன்றங்களும் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மற்றும் நீதிபதிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை. இதற்காக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களுக்கும், மாண்புமிக தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 15 நீதிமன்றங்கள் நாகர்கோவிலிலும், 6 நீதிமன்றங்கள் குழித்துறையிலும், 4 நீதிமன்றங்கள் பத்மநாபபுரத்திலும், 2 நீதிமன்றங்கள் இரணியலிலும், 1 நீதிமன்றங்கள் பூதப்பாண்டியிலும் இயங்கி வருகின்றன. இந்த 28 நீதிமன்றங்களும் சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும், தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் நீதி நிர்வாகத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து 2 வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தற்பொழுது அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வரசு தமிழகத்தில் பல புதிய நீதிமன்றங்கள் உருவாக்கவும், நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கவும், புதிய பணியிடங்கள் உருவாக்கவும், நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.659.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாகும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் மொத்தம் 223 புதிய நீதிமன்றங்களை ரூ.72.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உருவாக்க ஆணை பிறப்பித்தார்கள். இவ்வாறு உருவாக்க ஆணையிடப்பட்டுள்ள 223 நீதிமன்றங்களில் 150 நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 5 நீதிமன்றங்கள் தொடங்க அம்மா ஆணையிட்டிருந்தார்கள். அம்மாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் இந்த அரசு இதுவரை 197 புதிய நீதிமன்றங்களை ரூ.122.63 கோடி செலவில் உருவாக்குவதற்கு ஆணை பிறப்பித்து சாதனையை புரிந்துள்ளது. இவைகளில் 4 நீதிமன்றங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடங்கும். அதில் 2 நீதிமன்றங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சார்பு நீதிமன்றங்கள் 18 (நாகர்கோவில்), கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் 11, கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் 18, மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் 6, மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் 20 (நாகர்கோவில்), குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 15 (நாகர்கோவில்), தாலுக்கா நீதிமன்றங்கள் 51 மற்றும் 54 சிறப்பு நீதிமன்றங்களும் அடங்கும்.மிழகத்தில் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களான, 4 விடுமுறைகால குடும்பநல நீதிமன்றங்களும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு அசல் மனு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் மொத்தம் 32 உள்ளது. ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க அமைந்துள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்களும், மகளிர் நீதிமன்றங்கள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றங்களில் நாமக்கல் உட்பட 22 நீதிமன்றங்களும், சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களையும் மகளிர் நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளதால், இத்தகைய குற்றங்கள் உடனடியாக தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது. சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.7 கோடிசெலவில் நிறுவப்பட்டது.இன்று தமிழகத்தில் 88 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றது. புதிய நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பது, நீதிபதிகளக்கான குடியிருப்புகள், கூடுதல் கட்டிடங்கள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த ஆட்சியில் ரூ.636.36 கோடி மதிப்பிலான 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை அம்மா செயல்படுத்தியுள்ளார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்க வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு மிக விரைவில் நனவாகும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசினார்.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் முனைவர் விமலா, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிஷா பானு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சேஷசாயி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கருப்பையா, கூடுதல் ஆட்சியர் ராஹ_ல்நாத் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (திருநெல்வேலி) ஆசை தம்பி, வருவாய் கோட்டாட்சியர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு நாளை ஆலோசனைக் கூட்டம்
18 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு நாளை (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில்
-
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் விஜய்
18 Jan 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் நேரில் ஆஜராகிறார்.
-
ஓசூர் விமான நிலைய திட்டம்: ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுப்பு
18 Jan 2026டெல்லி, ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரு
-
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Jan 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் சிலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
18 Jan 2026அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர
-
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
18 Jan 2026சென்னை, உடல்நல குறைவு ஏற்பட்டதால் அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –18-01-2026
18 Jan 2026 -
நீலகிரியில் சோக சம்பவம்: மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலி
18 Jan 2026நீலகிரி, நீலகிரியில் மண் சரிவில் சிக்கிய 3 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானதை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்க படைகள் தாக்குதல்: சிரியாவில் அல் கொய்தா முக்கிய தலைவர் கொலை
18 Jan 2026டமாஸ்கஸ், சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் ம
-
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
18 Jan 2026தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் வரும் 24-ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
யாரையும் கஷ்டப்படுத்த சொல்லவில்லை: தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
18 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான்: அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
18 Jan 2026சென்னை, மக்கள் நலத்திட்டங்களுக்கு எப்பவுமே ஒரிஜினல் சொந்தக்காரங்க நாங்கதான் என்று தி.மு.க. அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு பதிலளக்கும் விதமாக அ.இ.அ.தி.மு.க.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப்பின் கேரளாவில் தலைமை தேர்தல் அதிகாரி கேல்கர் பெயர் நீக்கப்பட்டதால் அதிர்ச்சி!
18 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்திற்கான உரிய நிதியை வழங்குவதில்லை: மத்திய அரசு மீது நிதியமைச்சர் : தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
18 Jan 2026மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க.
-
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் முடிவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
18 Jan 2026பிரஸ்ஸல்ஸ், கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: லக்னோவில் இண்டிகோ விமானம் தரையிறக்கம்
18 Jan 2026லக்னோ, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து இண்டிகோ விமானம் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பிற இந்திய மொழிகளின் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு விருது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
18 Jan 2026சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்
-
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுப்பு
18 Jan 2026சண்டிகர், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப தமிழ்நாடு முழுவதும் 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Jan 2026சென்னை, பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக நேற்று 5,192 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு
18 Jan 2026சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
போட்டியின்றி தேர்வாகிறார்: பா.ஜ.க. தேசிய தலைவராக நிதின் நபினுக்கு வாய்ப்பு
18 Jan 2026டெல்லி, பா.ஜ.க. தேசிய தலைவராக போட்டியின்றி தேர்வாக நிதின் நபினுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. கூட்டணியை யாராலும், ஒருபோதும் உடைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி மீண்டும் திட்டவட்டம்
18 Jan 2026புதுக்கோட்டை, தி.மு.க.
-
11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
18 Jan 2026சென்னை, “தி.மு.க.
-
1,500 குழந்தைகளை காப்பாற்றிய பெண் ரயில்வே காவல் அதிகாரிக்கு மிக உயரிய சேவை விருது அறிவிப்பு
18 Jan 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கவுரவ
-
குடியரசு தினம் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமல்
18 Jan 2026சென்னை, இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


