எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 புதிய நீதிமன்றங்கள் மற்றும் இரணியலில் கூடுதல் உரிமையியல் நீதிபதி குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் இந்திராபானர்ஜி சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் திறந்து வைத்தார். இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நீதிமன்றங்கள் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் இன்று ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவுநீதிமன்றம்), ஒரு குடும்பநல நீதிமன்றம், ஒரு கூடுதல் மகளிர் நீதிமன்றம், பத்மநாபபுரம் நகரில் இரண்டாவது குற்றவியர் நடுவர் நீதிமன்றம், இரணியல் நகரில் ஒருவிரைவு நீதிமன்றம் ஆகிய 5 புதிய நீதிமன்றங்கள் துவக்க விழா மற்றும் இரணியல் கூடுதல் உரிமையியல் நீதிபதிக்கான புதிய குடியிருப்பு திறந்து வைக்கப்படும் விழாஆகிய 6 விழாக்களும் ஒன்று சேர நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத தொடரில் புரட்சித்தலைவி அம்மா 25.09.2015 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்பட 10 இடங்களில் மாவட்ட நீதிபதி பதவி தரத்தில், 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5.32 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், பத்மநாபபுரத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.இவ்வறிவிப்புகளை தொடர்ந்து 28.12.2015 அன்று நாகர்கோவிலில் ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 9 பணியாளர்களுடன் ரூ.103.6 இலட்சம் செலவில் உருவாக்கவும், அதுபோன்று 23.12.2015 அன்று பத்மநாபபுரத்தில் ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் ரூ.67.66 இலட்சம் செலவில் உருவாக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த 26.12.2016 அன்று 4 கட்டங்களாக 15 குடும்ப நல நீதிமன்றங்களை ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 23 பணியாளர்களுடன் ரூ.19.46 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிடப்பட்டது.கடந்த 05.04.2017 அன்று 22 கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை 2 கட்டங்களாக ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 7 பணியாளர்களுடன் ரூ.6.61 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக நாகர்கோவில் உட்பட 11 இடங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிட்டது. அதுபோன்று கடந்த 22.04.2016 ஆம் ஆண்டு இரணியல் நகரில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நிதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேங்கியிருப்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் அமையவிருந்த இரண்டாவது விரைவு நீதிமன்றத்தை இரணியலுக்கு மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டது. இவ்வாணைகளை தொடர்ந்து இன்று இந்த 5 நீதிமன்றங்களும் தொடங்கி வைக்கப்படுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், 25.05.2015 அன்று இரணியலில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களுக்கு ரூ.14.11 இலட்சம் செலவில் குடியிருப்பு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையை தொடர்ந்து அந்த குடியிருப்பு கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டதிலும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமில்லாமல் இப்புதிய 5 நீதிமன்றங்களும் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மற்றும் நீதிபதிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை. இதற்காக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களுக்கும், மாண்புமிக தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர் நீதிமன்றத்திற்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 15 நீதிமன்றங்கள் நாகர்கோவிலிலும், 6 நீதிமன்றங்கள் குழித்துறையிலும், 4 நீதிமன்றங்கள் பத்மநாபபுரத்திலும், 2 நீதிமன்றங்கள் இரணியலிலும், 1 நீதிமன்றங்கள் பூதப்பாண்டியிலும் இயங்கி வருகின்றன. இந்த 28 நீதிமன்றங்களும் சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும், தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் நீதி நிர்வாகத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து 2 வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தற்பொழுது அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வரசு தமிழகத்தில் பல புதிய நீதிமன்றங்கள் உருவாக்கவும், நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கவும், புதிய பணியிடங்கள் உருவாக்கவும், நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.659.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாகும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் மொத்தம் 223 புதிய நீதிமன்றங்களை ரூ.72.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உருவாக்க ஆணை பிறப்பித்தார்கள். இவ்வாறு உருவாக்க ஆணையிடப்பட்டுள்ள 223 நீதிமன்றங்களில் 150 நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 5 நீதிமன்றங்கள் தொடங்க அம்மா ஆணையிட்டிருந்தார்கள். அம்மாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் இந்த அரசு இதுவரை 197 புதிய நீதிமன்றங்களை ரூ.122.63 கோடி செலவில் உருவாக்குவதற்கு ஆணை பிறப்பித்து சாதனையை புரிந்துள்ளது. இவைகளில் 4 நீதிமன்றங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடங்கும். அதில் 2 நீதிமன்றங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சார்பு நீதிமன்றங்கள் 18 (நாகர்கோவில்), கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் 11, கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் 18, மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் 6, மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் 20 (நாகர்கோவில்), குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 15 (நாகர்கோவில்), தாலுக்கா நீதிமன்றங்கள் 51 மற்றும் 54 சிறப்பு நீதிமன்றங்களும் அடங்கும்.மிழகத்தில் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களான, 4 விடுமுறைகால குடும்பநல நீதிமன்றங்களும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு அசல் மனு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் மொத்தம் 32 உள்ளது. ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க அமைந்துள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்களும், மகளிர் நீதிமன்றங்கள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றங்களில் நாமக்கல் உட்பட 22 நீதிமன்றங்களும், சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களையும் மகளிர் நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளதால், இத்தகைய குற்றங்கள் உடனடியாக தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது. சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.7 கோடிசெலவில் நிறுவப்பட்டது.இன்று தமிழகத்தில் 88 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றது. புதிய நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பது, நீதிபதிகளக்கான குடியிருப்புகள், கூடுதல் கட்டிடங்கள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த ஆட்சியில் ரூ.636.36 கோடி மதிப்பிலான 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை அம்மா செயல்படுத்தியுள்ளார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்க வேண்டும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு மிக விரைவில் நனவாகும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசினார்.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் முனைவர் விமலா, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிஷா பானு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சேஷசாயி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கருப்பையா, கூடுதல் ஆட்சியர் ராஹ_ல்நாத் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (திருநெல்வேலி) ஆசை தம்பி, வருவாய் கோட்டாட்சியர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.