எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழை பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் திருமாங்கல்ய தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 115 பயனாளிகளுக்கு 920 கிராம் தங்கம் மற்றும் ரூ.39.25 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நிதியுதவி வழங்கும் விழா
புரட்சித்தலைவி அம்மா தன்னலமில்லாமல் ஏழை பணக்காரர் வேறுபாடுயின்றி அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களுக்கு எவ்வித கவலையும் இருக்க கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்கள் நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவே படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அம்மா பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும், 10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. பின்பு புரட்சித் தலைவி அம்மா திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் ஏழைகள் தங்களின் குழந்தைகளின் திருமணத்திற்காக சிரமபடக் கூடாது என்பதற்காகவும் அம்மா இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். அம்மாவின் அரசு தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். அரசின் திட்டங்களை பெற்றுள்ள நீங்கள் இவைகளை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். என பேசினார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது:-திருநெல்வேலி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த பட்டப்படிப்பு படித்த 42 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.21.00 லட்சம் உதவிதொகையும், 10 ம் வகுப்பு படித்த 73 பயனாளிகளுக்கு தலா ரூ.25 வீதம் ரூ.18.25 லட்சம் உதவிதொகையும,;; அனைவருக்கும் தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 115 பயனாளிகளுக் ரூ.39.25 லட்சம் உதவித் தொகையும், 920 கிராம் தங்கமும் இன்று வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டம் பெண்களின் படிப்பை ஊக்கவிக்கும் திட்டமாகும். நமது மாவட்டத்திலும் ஒரு சில சமூகத்தில் குழந்தை திருமணங்கள் செய்யும் பழக்கம் உள்ளது. இது போன்ற திட்டங்களால் படிக்க வைக்க வேண்டும் என்ற என்னமும், சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு எற்படும். விதவை மருமணம், கலப்பு திருமணம் உள்ளிட்ட பல்வேறு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளது. இன்று உதவித்தொகை பெறும் நீங்கள் இத்திட்டம் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை படிக்க வைக்க ஊக்கப்படுத்திட வேண்டும். சங்கரன்கோவில் பகுதியில் இலவச வைபை வசதி மற்றும் பல்வேறு கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரப்படும் என பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் ராஜேந்திரன், டான்பெட் துணை தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் தலைவர் ரமேஷ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப்பையாபாண்டியன், முக்கிய பிரமுகர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.