எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 9 - அ.தி.மு.க கொள்கைபரப்பு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. முருகையா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிடுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பழ.கருப்பையா எம்.எல்.ஏ. இன்று (நேற்) முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும் திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.முருகையாபாண்டியன் இன்று (நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில், ஆர்.முருகையா பாண்டியன் (அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) இன்று (நேற்று) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


