எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.10 - மதுபானம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின்கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை விஷயத்தில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.3800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளார்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் தலைமையில், பல்வேறு மாநிலங்களின் நிதி வரிவிதிப்பு அமைச்சர்களின் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச நிதியமைச்சர் செய்திருந்தார். இம்மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
சேவைவரியில் எதிர்மறை பட்டியில் தயாரிப்பது குறித்தான மத்திய அரசின் கருத்துருவைப் பொறுத்தமட்டில், இந்நேர்வில் பல மாநில அரசுகளை சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை நாங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். சேவைவரியில் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிதிப்பு இனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்திய அரசியல் சட்டத்தின் மத்திய பட்டியலில் வரிசை எண்.97-ல் உள்ள எஞ்சிய அதிகாரங்களைக் கொண்டு மாநில அரசுகளின் வரிவிதிப்பு வரம்பிற்குள் மத்திய அரசு பலமுறை தலையிட்டுள்ளது. இந்நேர்வில், விரிவான கலந்தாலோசிப்பிற்கு பின்னும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ன் வல்லுநர்களின் ஆலோசனைகளின் படியும் எங்களுடைய குறிப்பு விரைந்து அனுப்பி வைக்கப்படும்.
சென்ற கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் விரிவிதிப்பதற்கான கோரிக்கையின் மீது மாநில அரசுகளின் குறிப்புகள் கோரப்பட்டுள்ளது. சிறிய விநியோக சங்கிலி தொடர் கொண்ட பொருட்களில் வரி ஏய்ப்பு மிக அதிக அளவில் நடைபெறுகிறது என்பது கடந்த கால அனுபவங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் தற்போது உள்ள வரி விகிதத்தின் அடிப்படையில் ஈட்டப்படும் வருவாயினை காத்திட மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியானது, சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்படுத்தப்படும் வரியைவிட அதிகமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். இதுபோன்ற பல காரணங்களுக்காக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசிற்கு ஏற்புடையதல்ல. இது தொடர்பாக எங்களுடைய கருத்துக்களை அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான இழப்பீட்டுத் தொகையை பொறுத்தமட்டில், நிலுவையில் உள்ள தொகையினை விரைந்து வழங்கிட மத்திய அரசின் நிதியமைச்சகத்திடம் அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம். பலமுறை கேட்டு கொண்டதற்கு பின்பும் தமிழ்நாட்டிற்கு வரப்பெற வேண்டிய தொகையான ரூ.3,800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச மதிப்புக் கூட்டுவரியானது 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக அதிகரிக்கப்படவில்லை என்ற அற்ப காரணத்தைக் காட்டி 2010-2011-ம் ஆண்டிற்கு மட்டும் ரூ.2,000 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான முத்திரைத் தீர்வை விதிக்க விளையும் மத்திய அரசின் கருத்துரு குறித்து மாநில அரசுகளின் கருத்தினை அதிகாரமளிக்கப்பட்ட குழு கோரியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு முத்திரைத் தீர்வை விகிதத்தை முடிவு செய்யும் முன் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டு இக்கருத்துருவிற்கு தமிழக அரசின் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டை ஏற்று நடத்தும் நான் மீண்டும் ஒருமுறை மத்திய பிரதேச அரசின் நிதியமைச்சர் மற்றும் அவருடைய அணியினை சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
12 Jan 2026


