முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

திண்டுக்கல், ஜன.11 - தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மாநில தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் நேற்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டுமுன்பே படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் திண்டுக்கல் நகரில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையை செய்தது யார்? கொலை நடந்தது எதற்காக? முன்விரோதம் காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதும் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டதாக பின்னர் வந்த தகவல்கள் தெரிவித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago