எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி- தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கம்மவார் பொறியியல் கல்லூரியில், கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்ட பயிற்சி வகுப்பினை அரசு முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து அரசு முதன்மைச் செயலர் பேசியதாவது,
தமிழக அரசு உத்தரவின்படி, நிதி மேலாண்மை தொடர்பான அரசுப்பணிகள் திறம்பட செயல்பட மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலை தள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வுதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு ரூ.288.91 கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட தனியார் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தினை செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்சமயம் நிறைவுற்றுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இத்திட்டம் அக்டோபர் 2018 முதல் நடைமுறைப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப்பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக கணினிமயமாகிறது.
இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 16,403 அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்திட நான்கு நாட்கள் பயிற்சி குறிப்பிட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக இரண்டு நாட்கள் பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும் நடத்தப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து, அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், சம்பளம் மற்றும் சம்பளம் சாரா பட்டியல்கள் தயாரித்தல், மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் தொடர்பாகவும், கருவூத்துறை அலுவலர்களுக்கு பட்டியல் கடவு செய்தல், காப்பறை செயல்பாடுகள், முத்திரைத்தாட்கள் மேலாண்மை, மின் அலுவலகம், ஓய்வூதியம் வழங்கல் மற்றும இதர இனங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் தேனி மாவட்டத்தில் ரூ.436 கோடி ஓய்வூதியாமகவும், அரசு ஊழியர்களுக்கு ரூ.921 கோடி ஊதியமும், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் வரவினமாக இந்நிதியாண்டில் மட்டும் ரூ.845 கோடி அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என அரசு முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரினக்காப்பாளர் கலாநிதி, சென்னை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் மகாபாரதி, மதுரை மண்டல இணை இயக்குநர் முனைவர் முத்துப்பாண்டியன் , தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வசந்தி , வருவாய் கோட்டாட்சியர்கள் சென்னியப்பன் , ஜெயப்ரிதா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் , மாவட்ட கருவூல அலுவலர் சீதாராமன் உள்ளிட்ட பலரும்கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 128 விமானங்கள் ரத்து
29 Dec 2025டெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: உடனே கட்டுக்குள் கொண்டு வர அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
29 Dec 2025சென்னை, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது தொடா்பான 20 அம்ச ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
29 Dec 2025நியூயார்க், அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன்
-
உன்னாவ் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கருக்கான தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
29 Dec 2025புதுடெல்லி, செங்கரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி ஐகோர்ட் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



