எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்,ஜன.- 17 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. நாட்டில் குறிப்பாக வட மாநிலங்களில் அதுவும் ஜம்மு-காஷ்மீர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அதுவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும். அதனால் சாலைகளில் பனிக்கட்டிகள் விழுந்து கிடக்கும் இதனால் போக்குவரத்து தடைபடும். கடந்த பல நாட்களாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் கிடக்கின்றன. இதனால் மோட்டார் வாகனங்கள் செல்லமுடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கார், டூரிஸ்ட் பஸ்கள், கார்கள் ,ஜீப்கள் ஆயிரக்கணக்கில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், ஜம்மு நகர் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள இதர பகுதிகளில் தங்கியுள்ளனர். நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள குவாஜிகுந்த், பனிஹால், ஜவஹர் குகை வழி, ஷாந்தன் நல்லாஹ் ஆகிய பகுதிகளில் 4 அடி உயரம் வரை பனிக்கட்டிகள் கிடக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு,உத்ம்பூர், படோதே ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், கியாஸ் லாரிகள் செல்ல முடியாமல் இருக்கின்றன. இதனால் ஸ்ரீநகர் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஸ்ரீநகருக்கு செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் ஜம்மு மற்றும் இதர பகுதிகளில் தங்கியுள்ளனர். டன்னலுக்கு அந்த பகுதியில் உள்ள ஸ்ரீநகர், குவாஜிகுண்டு, அனந்த்நாக் பகுதியிலும் பழங்கள், கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரிகள் மற்றும் காலி சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிற்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


