எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் போதை மருந்து துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோத கடத்தல் தொடர்பான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் (வுhநஅந) “குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல்; மற்றும் ஆரோக்கியமான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கு உதவுதல்” என்பன ஆகும்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 3.6 முதல் 6.6 சதவிதம் பேர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் 1987ல் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தேசிய போதை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் இயற்கையாகவே மனநிலை பாதிக்கும் பொழுது ஏதாவது ஒரு வகையில் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். எனவே போதை பழக்கத்தை ஒழிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் போதைக்கு அடிமையானவர்களை அவற்றிலிருந்து காப்பாற்ற நாம் முன்வர வேண்டும். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது ஒருவனுடைய நற்பண்புகள் அழித்து விடுகிறது. அதனால் சமுக சேவை மற்றும் மாணவர்கள் ஆலோசனை மையங்கள் மூலம் போதைக்கு அடிமையானவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி போதைப் பழக்கத்திலிருந்து அவர்களை காப்பாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் துணைத் தலைவரும் மற்றும் காரைக்குடி தேவகி மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான டாக்டர் சுஏளு.சுரேந்திரன் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில் ஆண்டுதோறும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம்; பேர் போதைப் பழக்கத்தால் உயிர் இழக்கிறார்கள். 15 வயதிலிருந்து 35 வயது வரையுள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். மருத்துவருடைய மருந்துக் குறிப்புகளை தவறாக புரிந்து கொள்ளாமல் குறிப்பில் உள்ளபடி முறையாக மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். நோய் இருக்கும்வரையே மருந்துகளை உபயோகிக்க வேண்டும் தொடர்ந்து மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் கிட்னி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். போதைக்கு அடிமையாவதால் இளைஞர்கள் இலக்கு இல்லாமல் இருக்கிறார்கள். இலக்கு நிர்ணயிக்கும் தன்மையை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். போதைக்கு அடிமையாவதால் ஒரு தனி மனிதனுடைய எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு அவரோடு தொடர்புடைய குடும்பமும் நாடும் பாதிக்கப்படுகிறது. போதை மருந்து ஆசையை தூண்டுகிறது அதனால் அவர்கள் பல குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். போதைப் பொருள்களால் எவ்வித நன்மைகளும் கிடையாது. போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் உடல் உறுப்புகளில் கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைகிறது. புகைப்பிடிப்பதன் மூலம் 40 சதவிதம் நுரையீரல் சம்பந்தமான புற்றுநோய் உண்டாகிறது என்றும் குறிப்பிட்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தன்னைப் போல பிறரையும் குடிக்க வைத்து மகிழ்வார்கள். போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி அவர்கள் வாழ்வு சிறக்க நாம் அனைவரும் சமுதாய கடமையை ஆற்றவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பதிவாளர் பேரா. ஹா.குருமல்லேஷ் பிரபு வரவேற்புரை ஆற்றினார். பேரா. வெ.பழனிச்சாமி, முதன்மையர், மாணவர் நலன் நன்றி கூறினார். அழகப்பா பல்கலைக்கழக கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர்கள் கி.மகேஷ், பெ.ஈஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். அதனைத் தொடர்ந்து 150க்கும் மேற்பட்;ட பல்கலைக்கழகத் திறன் மேம்பாட்டு மைய மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழக முகப்பு வளைவு வரை சென்று முடிவுற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார
-
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை
16 Oct 2025புதுடெல்லி: பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வந்தார்.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்..!
16 Oct 2025சென்னை, தமிழக சட்டசபையில் கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
16 Oct 2025ஜகர்த்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.