எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018-19-ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரைநிகழ்த்தினார். அவர் தமது உரையில், இந்த புத்தாக்கப் பயிற்சியின் நோக்கம் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை அறிந்து கொண்டு அதன் மூலம் தங்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்வதே ஆகும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழகம் தேசியத் தர நிர்ணயக் குழுவின் மூன்றாவது சுற்று தர மதிப்பீட்டில் அதிக புள்ளிகள் பெற்று தமிழகப் பல்கலைக்கழகங்களில் முன்னோடி பல்கலைக்கழகமாக இருப்பதோடு அகில இந்திய அளவில் அரசுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் மிகவும் பின்தங்கிய பகுதியில் அமையப்பெற்றிருந்தாலும் உயர்கல்வியில் இந்திய அளவில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
ஒரு கல்வி நிறுவனம் சிறந்த நிறுவனமாக எப்போது கருதப்படும் என்றால் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தரத்தைப் பொறுத்தே கருதப்படும்; என்றார். அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணி செய்தால் அந்த நிறுவனம் நிச்சயம் உயர்ந்த நிலையை அடையும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை என்றார்.
அழகப்பா பல்கலைக்கழகம் ஏற்கனவே பெற்றுள்ள யூ தகுதியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இயற்கையாகவே மாணவர்களிடம் பல்வேறு திறன்கள் பொதிந்து கிடக்கிறது. அவற்றை வெளிக்கொணர ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார்.
படிப்பு என்பது தேர்வுக்காக படிப்பது ஆகும், கற்றல் என்பது வாழ்க்கைக்காக படிப்பது ஆகும் என்றார். மாணவர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக தொடர்ந்து கற்க வேண்டும். பாடம் சார்ந்த மற்றும் பாடத்தோடு தொடர்புடைய பிற செயல்பாடுகளிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மாணவர்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் தங்களது உடல் நலமும் மன நலமும் சீராக இருப்பதோடு கல்வியை சிறப்பாக கற்க முடியும் என்றார். மாணவர்கள் தாங்கள் ஒரு கல்வி கற்ற சமுதாயத்திலும் மற்றும் படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு தங்களை அதற்குத் தகுந்தார்போர் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழக பதிவாளர் பேரா. ஹா.குருமல்லே~;பிரபு தமது வரவேற்புரையில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை நிகழ்த்திய பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கி கூறினார்.
கலைப்புல முதன்மையர் பேரா. க.மணிமேகலை, அறிவியல் புல முதன்மையர் பேரா. ஜி.பரிதிமாற்கலைஞன், கல்வியியல் புல முதன்மையர் பூ. தர்மலிங்கம், மைய நூலகர் முனைவர் எ.திருநாவுக்கரசு, தன்னார்வ பயிலும் வட்ட இயக்குநர் பி.சுரே~;குமார், முனைவர் பி.மதன், முனைவர் கே.மகே~;, முனைவர் சரோஜா, முனைவர் சி.பாஸ்கரன் ஆகியோர் தத்தம் துறைகளில் உள்ள வசதிகள் குறித்து விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் 677-க்கும் மேற்பட்ட முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்;. முனைவர் வி. பழனிச்சாமி, முதன்மையர் (மாணவர் நலன்) நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


