எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.- 18 - மத்திய அரசு தொடங்க உள்ள பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்றாயக், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இணைந்துள்ளனர். உ,பி.முதல்வர் மாயாவதியின் கருத்து இதுவரை வெளிப்படவில்லை. இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் கூறியுள்ளதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1ந்தேதி தொடங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிப்பது போல் இருக்கிறது. அதனால் இத்திட்டத்தை கைவிடும்படி கடந்த பிப்.14ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தகவலை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இந்த அமைப்புக்கு எதிரான மம்தாவின் கருத்தை தான் ஆதரிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் ஆலோனையும் நடத்தியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, நிதீஷ்குமார், மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய 4 மாநில முதல்வர்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு என்றும் பறிக்காது. மம்தா எழுதியாக கூறும் எதிர்ப்பு கடிதம் இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு வந்து சேரவில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு செய்தி குறிப்பிப்பை வெளியிட்டுள்ளது. பயங்கர வாதத் தடுப்பு மையம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலிதா பிரதமர்மன் மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பாற்றி உயர்த்திப் பிடிப்பதிலும், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டை ஆதரிப்பதிலும் எனக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வை நீங்கள் அறிவீர்கள். எத்தகைய ஒரு சூழலிலும் இந்தியாவின் பாதுகாப்பு எத்தகைய சமரசத்திற்கும் உட்பட்டதல்ல என்ற நிலையில் சில விசயங்கள் குறித்து உங்களின் கவனத்தைச் செலுத்த விழைகிறேன். உள்துறை அமைச்சகம் கடந்த 3ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் மத்திய புலனாய்வுத் துறையின் கீழ், தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் என்.சி.டி.சி ஒன்றை மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் என்.சி.டி.சி. யாரையும் கைது செய்யவோ, அவர்களின் இடத்தை சோதனை இடவோ முடியும்.மேலும் மாநிலத்திற்குள் தனி புலனாய்வுக் குழுவையும் அமைக்கும் அதிகாரம் அதற்குள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் என்.சி.டி.சி அறிக்கைகள், ஆவணங்கள், சான்றாதாரங்கள், எந்தவிதமானதாலும், அத் தகவல்கள், எந்தஒரு நிறுவனத்திடமிருந்தும், அமைப்பிடமிருந்தும் இதற்குத் தேவையான தகவல்களை பெறும் அதிகாரத்தைப் பெறுகிறது.
இத்தகைய சூழலில், சில விஷயங்களில் உள்ள ரகசிய மாக வைத்திருக்க வேண்டிய தகவல்களை கூட அதற்கு அளிக்க வேண்டியதும் இருக்கும்.
இந்த சட்டப்பிரிவு, எந்தவிதமான பொதுப்புகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அதிகாரத்தை அது பெறுகிறது.
யாரையும் கைது செய்வது, சோதனை செய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பலவிதமான செயல் முறைகள் இது வரை மாநில அரசின் உள்துறை செயலகத்திடம் இருந்தது. என்.சி.டி.சி.யின் இந்த விசேஷ அதிகாரத்தின் மூலம், மாநில உள்துறை செயலகத்திடம் இருந்த அதிகாரங்கள் இனி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் வசமும் என்.சி.டி.சி.யில் உள்ள மத்திய புலனாய்வு அதிகாரிகள் வசமும் கை மாறுகிறது, சுருக்கமாகச் சொல்லப்போனால் மத்திய மாநில இணைப்புப் புலனாய்வுக் குழுக்களை என்.சி.டி.சி அமைப்பானது, அமைப்பதின் மூலம் மாநில அரசின் உரிமைகளில் அது தலையிடுகிறது.
மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், அதை யொட்டி எடுக்கும் நடவடிக் கைகளும் தமிழ்நாடு அரசு சிறப்பான சாதனைப் பட்டியலைக் கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எந்தவித மான பின்வாங்குதலும் இல்லாமல் முன்னோக்கி செய்கிறது.
என்னுடைய அனுபவத்தில் மாநில காவல் துறையும் புலனாய்வு அமைப்பும் எப்போதுமே தீவிரவாதிகளையும் அவர்களின் அமைப்புகளையும் ஒடுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மாநில காவல் துறையானது. நவீனப் படுத்தப்பட்டு செயல் படுகிறது. பல அசம்பாவித சம்பவங்களையும் தடுத்துள்ளது.
வெறும் ஒரு மையத்தை அமைப்பதும், தகவல்களைப் பெறு வது மட்டுமே அதனுடைய நோக்கத்தை அடைய முடியாது. அகையால் என்.சி.டி.சி. அமைப்பது குறித்த மாநிலங்களின் வேறுபாடுகளை நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இவ்விஷயத்தில் பிறமாநில முதல்வர்களின் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்.
இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகளுடனும், மாநில போலீஸ் உயரதிகாரிகளுடனும் உடனடியாக கலந்து பேச வேண்டும் பயங்கவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற மிகுந்த முக்கியத்துவமுள்ள இவ்விஷயத்தில் மாநிலங்களில் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல், தேசிய பயங்கரவாத தடுப்பு நடைமுறைகள் எப்படி செயல்பட முடியும்.
ஆகையால் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் உள்துறை அமைச்சகத்தின் அந்த அதிகார நடவடிக்கை, குறித்து உரிய நடவடிக்கையை தாங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
வடமாநில குடும்பம் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Jan 2026சென்னை: சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் வெளியிட்ட ஐந்து அறிவிப்புகள்
28 Jan 2026சென்னை: கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 Jan 2026சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பிரச்சாரத்திற்கு சென்று போது நிகழ்ந்த சோகம்: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
28 Jan 2026மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு விமானத்தில் சென்ற போது விமானம் விபதுக்குள்ளானதில் உயிரிழந்தார்.
-
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்: தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது இ.யூ.மு.லீக் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Jan 2026சென்னை: இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறு
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


