முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விரைவில் அறிமுகம்

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

'மொய் டெக்'

செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள புது செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.  'மொய் டெக்' எனும் இந்த செயலி வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர்.

பறவைகளைப்போல வலசை செல்லும் விலங்குகள் எது தெரியுமா?

பருவ காலத்தின் போது இனப்பெருக்கத்துக்காகவோ, இரை தேடியோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை வலசைக்கு போதல் என்று குறிப்பிடுகின்றனர். அதென்ன பறவைகள் மட்டும்தான் வலசை செல்லுமா, விலங்குகள், பூச்சிகள் செல்வதில்லையா என்று கேட்டால்... ஆம்.. அவற்றிலும் சில இது போல வலசை செல்கின்றன. சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை இரை மற்றும் இனப் பெருக்கத்துக்காக வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்கின்றன.

இந்தியர்களின் உலகம்

உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.

உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த கிரிக்கெட் மைதானம் எது தெரியுமா

 உலகிலேயே மிக ன இடத்தில் அமந்துள்ள கிரிக்கெட் மைதானம் எங்கு அமைந்துள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், நீங்கள் யூகித்ததைப் போலவே அது இந்தியாவில்தான் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள சையில் என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மைதானமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2444 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. Chail Cricket Ground என்று அழைக்கப்படும் இந்த மைதானம் கடந்த 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் என்ன ஒரு சந்தேகம் என்றால் சிக்ஸர் அடித்தால் பந்தை திரும்ப எடுக்க முடியுமா..

தண்ணீர் நல்லது

தண்ணீர் என்பது ஆக்சிஜன் மற்றும்  ஹைட்ரஜன் கலந்த கூட்டுக் கலவையாகும். தண்ணீரை அதிக அளவில் குடித்தால்  உடல் எடை குண்டாகாமல் சீரான உடலுடன் அழகாக இருக்க முடியும் என்கிறார்கள்  மருத்துவ நிபுணர்கள். தண்ணீரை அதிக அளவில் குடிப்பதால் யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுகள் விரைவில் சிறு நீர் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் உடல், மூளை செயல்பாட்டு திறன் மிகச்சிறப்பாக செயல்பட்டு சுறுசுறுப்பையும் தரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago