நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல் பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய - சுவிஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும். இங்கு குண்டலா ஏரி உள்ளது. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம். மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இடம் உள்ளது. இங்கு வரையாடு அரிய விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக உள்ளது.
வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதை அதிகமாக சாப்பிட்டு வந்தால், புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.
வவ்வால்கள் குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக எகிப்து நாட்டு வவ்வால்கள் காதலுக்காக பழங்களை பரிசாக பெறுவது தெரியவந்துள்ளது. பெண் வவ்வால்கள் தங்களது காதலின் போது ஆண் வவ்வால்களின் வாயிலிருந்து பழங்களை கவ்வி எடுத்து உண்ணும் என்பை இஸ்ரேல் நாட்டு டெல் அவிவ் பல்கலை கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் மிக எளிதாக போட்காஸ்டிங் (Podcasting) எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். பிளாக்கை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று போட்காஸ்டிங் வானொலியையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு போட்காஸ்டிங் எனப்படும் சேவை இணையதளத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளன. எனவே ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்காஸ்டிங் எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், அரசின் ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே போட்காஸ்டிங் எனப்படும்ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.
தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை ’ஒம்சின்’, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டது. பின் இதனை சோதனை செய்து பார்த்ததில் இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அறுவைசிகிச்சை மூலம் ஆமையின் வயிற்றில் இருந்த சுமார் 5 கிலோ அளவு நாணயங்கள் எடுக்கப்பட்டன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை வயிற்றில் சுமந்துகொண்டுதான் அந்த ஆமை வாழ்ந்து வந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய மத சடங்கிற்காக விட்டெறிந்த நாணயங்களை இந்த ஆமை முழுங்கியதுதான் இதற்கு காரணம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 5 days ago |
-
ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் : பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவு
05 Sep 2025நியூயார்க் : ரஷ்யா, சீனாவை எதிர்கொள்ள ராணுவத்தை தயார் செய்யுங்கள் என்று பென்டகனுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-09-2025.
05 Sep 2025 -
இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஜேக் சல்லிவன், கர்ட் எம் கேம்ப்பெல் வலியுறுத்தல்
05 Sep 2025வாஷிங்டன், இந்தியா உடனான நல்லுறவை அமெரிக்கா மீட்டெடுக்க முடியும் என்றும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் ச
-
தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்: மும்பையில் உச்சகட்ட கண்காணிப்பு
05 Sep 2025மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
05 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
செங்கோட்டையன் இன்னும் முழுதும் மனம் திறக்கவில்லை: திருமாவளவன்
05 Sep 2025மதுரை, செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இருவர் உள்ளிட்ட ஆசிரியர்கள் 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது : ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
05 Sep 2025டெல்லி : தமிழகத்தில் இருவர் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
-
தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமனம்
05 Sep 2025சென்னை : தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் சங்குமணி, கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓய்வு பெற்றார்.
-
அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம் : பிரதமர் வெட்கித் தலைகுனிய வேண்டும்
05 Sep 2025போபால் : அரசு மருத்துவமனையில் எலி கடித்து 2 குழந்தைகள் பலியான விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வெட்கித் தலைகுனிய வே
-
மீண்டும் புதினுடன் பேச உள்ளேன் - டிரம்ப் கூறுகிறார்
05 Sep 2025வாஷிங்டன், உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
-
மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் அதிகரிப்பு : காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
05 Sep 2025மேட்டூர் : 16 கண் மதகு வழியாக மேட்டூர் அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அறியாமை இருளை நீக்குபவர்கள்: விஜய் ஆசிரியர் தின வாழ்த்து
05 Sep 2025சென்னை, அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள் என்று ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் தினத்தில் த.வெ.க. தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
05 Sep 2025திருவனந்தபுரம் : வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது.
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் வருகை
05 Sep 2025லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே நேற்று வருகை தந்தார்.
-
பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு
05 Sep 2025கோபி : அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி: நயினார் வரவேற்பு
05 Sep 2025ஈரோடு, அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி ஒரு நல்ல முயற்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகாவில் வாக்குச்சீட்டுகள் மூலம் இனி உள்ளாட்சி தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு அமைச்சரவை பரிந்துரை
05 Sep 2025பெங்களூரு : உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது.
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை
05 Sep 2025வாஷிங்டன், ஜோ பைடனுக்கு தோல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். முடிவே எங்கள் முடிவு: செங்கோட்டையன் விவகாரத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
05 Sep 2025திண்டுக்கல், செங்கோட்டையன் கருத்து குறித்து, அ.தி.மு.க.
-
கச்சத்தீவு விவகாரம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து
05 Sep 2025சிவகங்கை, கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
-
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: கூடுதலாக 2,500 பேருக்கு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
05 Sep 2025சென்னை : நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
05 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. ஒரு உடைந்த கண்ணாடி, அதை மீண்டும் ஒட்ட வைப்பது மிகவும் கடினம் : சி.பி.எம். பாலகிருஷ்ணன் கருத்து
05 Sep 2025புதுச்சேரி : “ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், சசிகலா இணைந்தால் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் அதை அவர் ஏற்க மாட்டார். அ.தி.மு.க.
-
5.8, 5.4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
05 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 160 கிமீ தூரத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய அதிபர் அறிவிப்பு
05 Sep 2025மாஸ்கோ : ஜெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது. ஆனால், ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.