முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கம்பீரமான விலங்கு

இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.

விபத்தை தடுக்க

ரயிலில் மட்டும் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியாது அதற்கு காரணம் உண்டு. நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது, எல்லா கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதற்கடுத்து இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். பர்த் பதிவுகளும் இப்படி தான். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனால் தான் ரயில்கள் வேகமாக பயனிக்கும் போது விபத்து ஏற்படாமல் பயணிக்க உதவுகிறது.

பிளாஸ்டிக்கை போலவே அச்சுறுத்தும் பொருள்கள்

பொதுவாக பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மட்கி போக பல நூறு ஆண்டுகள் ஆகும் என்பது நமக்கு தெரியும். ஆனால் கண்ணாடி பாட்டில் மட்கி போக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா.. ஆயிரம் ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக்கை குறை சொல்லும் நாம்... இன்னும் என்னென்ன செய்கிறோம் தெரியுமா... பில்டர் சிகரெட்டின் மொட்டு 10 ஆண்டுகள், மீன் பிடிக்கும் தூண்டில் நைலான் 600 ஆண்டுகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் ஆயிரம் ஆண்டுகள், குளிர்பானம் அருந்தும் ஸ்ட்ரா 200 ஆண்டுகள், தகர டின் 50 ஆண்டுகள், வாகன டயர்கள் 2 ஆயிரம் ஆண்டுகள், மீன் வலை 40 ஆண்டுகள், சிந்தெடிக் துணிகள் 100 ஆண்டுகள் காலம் பிடிக்கும் என்றால் யோசித்து பாருங்கள்...

சீனாவில் மம்மி கண்டுபிடிப்பு

மம்மி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது எகிப்தும், அதன் பிரமிடுகளும்தான். அங்குதான் பண்டைய காலங்களில் உடலை பதப்படுத்தி மம்மிக்களாக பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சீனாவிலும் மம்மிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் சீனாவின் தைஜோவில் சாலை தொழிலாளர்கள் ஒரு சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபொழுது வித்தியாசமான ஒன்றை கண்டார்கள். உடனே தொல்பொருள் ஆய்வாளர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அகழ்வாராய்ச்சி செய்து பாக்க அவர்களுக்கு கிடைத்தது சவப்பெட்டியுடன் கூடிய ஒரு சிறிய கல்லறை. உள்ளே கிட்டத்தட்ட சரியாக பாதுகாக்கப்பட்ட சீன மம்மி ஒன்று இருந்தது. அப்படி அரிதான கலைப்பொக்கிஷமான சீன மம்மியை சாலை தொழிலாளர்கள்தான் கண்டுபிடிச்சிருக்காங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும். அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும். புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள். விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும். பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.

'செவ்வாய்' போகலாம்

மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்த நிலையில், அங்கு கியூரியாசிட்டி என்ற விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து வசதிகளும் இருப்பதாக தெரிவித்தது.தற்போது, செவ்வாய் கிரகத்தில் உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை உள்ள ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, அங்கு இதற்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago