முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிகம் உற்பத்தி

உலக கம்பளி உற்பத்தியில் 2 சதவீதம் இந்தியாவில்  உற்பத்தியாகிறது.ராஜஸ்தான், ஜெய்சால்மர் நகரத்தில்தான் இந்தியாவில் கம்பளி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, கோடைகாலத்தில் உடலை வருத்தி எடுக்கும் கடும் வெயிலும், குளிர்காலத்தில்  உடலை துளைத்தெடுக்கும் கடும் பனிக்காற்றும் வீசும்.

முகத்தை செல்போனால் ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பது தெரிந்து விடும்

உலகதத்திலேயே முதன் முறையாக செல்போனால் முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் உள்ள கண்டறியப்படும் நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

புதிய வசதி

சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளது. இந்தநிலையில் தற்போது மெஜஞ்சர் டே எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அடுத்ததாக தாம் செய்யவிருக்கும் விடயங்களை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பரிமாறிக்கொள்ள முடியும்.

தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து முதன்முறையாக அறிமுகம்

ஜப்பான் நாட்டில் முதன் முறையாக தரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதற்காக பிரத்யேக வடிவில் வாகனங்களை வடிவமைத்துள்ளது. இந்த ரயில் பஸ் பேருந்து சேவை கடந்த மாதம் ஜப்பானில் உள்ள கையோ நகரில் தொடங்கப்பட்டது. சாலையில் ஓடும் போது ரப்பர் டயரிலும், தண்டவாளத்தில் ஓடும் போது இரும்பு சக்கரத்திலும் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு சக்கரங்களின் செயல்பாடுகளையும் 15 விநாடிகளுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

புகழ்பெற்ற கால்வாய்

78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடைய உலக புகழ்பெற்ற பனாமா கால்வாய், கட்டுமானப்பணி 1900களில் தொடங்கி, 1914 -ல் நிறைவடைந்தது. ட்ராபிக்கல் நோய் காரணமாக பனாமா கால்வாய் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த  27,500 தொழிலாளர் இறந்தனராம்.

ஆண்டுக்கு ரூ.1 கோடி கல்வி கட்டணம் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஹோட்டல், வாகனங்கள், நகைகள் இப்படி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..ஆம் அப்படி ஒரு பள்ளி, சுவிஸ் நாட்டில் உள்ளது. இன்ஸ்டிடியூட் லே ரோசாய் என்ற பள்ளிதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. உலகின் அரசியல் தலைவர்கள், அரசர்கள் ஆகியோரின் வாரிசுகள் இங்கு தான் படிக்கின்றனர். இப்பள்ளி 1880 இல் நிறுவப்பட்டது. உலகில் உள்ள சகல வசதிகளும், சகல பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago