உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக் கொள்ளும் புதிய வகை தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஒக்சைட் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதை மூலப் பொருளாக பயன்படுத்தி, 3டி பிரிண்டரில் புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம். இதனால் உருவாக்கப்படும் பொருட்களை கொண்டு நீண்ட தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்ளலாமாம்.
கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதே போல கம்போடியா நாட்டில் கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கிறது.
ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று தெரிவித்துள்ளது.
மலைச்சாலைகள் எப்போதும் நம்மை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்துபவைதான். ஆனால் அதே நேரத்தில் மிக அபாயகரமான இடங்களில் கூட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை கண்டால் யாருக்கும் லேசாக ஜெர்க் ஆகும் தானே.. ஆனால் சீனாவில் உள்ள சாங்சி மாகாணத்தில் உள்ள Shenlongwan என்ற பகுதிக்குச் செல்லும் மலைச்சாலை சற்றே வித்தியாசமானது. அது என்ன என்கிறீர்களா.. 1526 மீட்டர் நீளமே கொண்ட இந்த மலைச் சாலையை அப்பகுதி கிராம மக்களே சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளாக மலையை குடைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த 1985 இல் தொடங்கிய பணிகள், இதன் இறுதி கட்ட பணிகள் கடந்த 2000 இல்தான் முடிவடைந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே போல கலைக் கண்ணோடு பார்த்தால் எந்த பொருளையும் தங்களுடைய படைப்பாற்றலால் மேஜிக் போல மாற்றி விடும் வித்தை படைத்தவர்கள் படைப்பாளிகள். அப்படித்தான் பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் கலைஞர்கள் தனது அசத்தலான முடி வெட்டுதல் மூலம் சிறப்பான உருவங்களை உருவாக்கி அசத்துகின்றனர். அவர்களது கைவண்ணத்தில் வாடிக்கையாளர்களின் தலையே கேன்வாசாக, தலையில் மைக்கேல் ஜாக்சன், மிக்கி மவுஸ் என விதவிதமான உருவங்கள் ஜொலிக்கின்றன. பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் தொழில் செய்து வரும் சகோதரர்களான Dabwali என்ற பகுதியைச் சேர்ந்த Rajwinder Singh Sidhu மற்றும் Gurwinder Singh Sidhu ஆகியோர்தான் இந்த சாதனையை படைத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை ஹேர்கட் மூலம் செய்து தருகிறோம் என்கின்றனர் ஸ்டைலாக அவர்கள் தங்களது கேசத்தை ஒதுக்கியபடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


