முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உண்மை சீட்டா அழிந்தது யந்திர சீட்டா உயிர் பெற்றது

நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது.  தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

ஏலக்காய் மகிமை

தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்ய வல்லதும், ஜலதோஷத்தை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காய். இது, நுரையீரலை செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறுகளை போக்கி ஜீரண உறுப்புகளை முறையாக செயல்பட வைக்கிறது. இதய ஓட்டத்தை சீராக்குகிறது. சிறுநீரை பெருக்குகிறது. ஏலக்காயை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, தலைவலி, குமட்டலை சரிசெய்யலாம்.

lightning, மின்னல்

பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் உயரமான மலைச் சிகரம்

உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் எது என்று கேட்டால் எல்லோரும் டக்கென்று எவரெஸ்ட் என்றுதான் சொல்வோம். ஆனால் கொஞ்சம் புவியியல் பற்றி தெரிந்தவர்கள் சற்றே யோசிப்பார்கள்.. ஏன் தெரியுமா... எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் தான்.. ஆனால் மெளனா கீ என்ற மலை இருக்கிறதல்லவா அது எவரெஸ்டை காட்டிலும் 3 ஆயிரம் அடி உயரம்.. ஆனால் என்ன பிரச்னை தெரியுமா பசிபிக் கடலில் இருக்கும் இந்த மலை நீர்மட்டத்துக்கு வெளியே வெறும் 13 ஆயிரத்து 796 அடி மட்டுமே தெரிகிறது. ஆனால் கடலுக்கு அடியிலிருந்து அதன் உயரத்தை அளந்தால் 32, 808 அடி உயரம் கொண்டதாகும். இதன் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியிருப்பதால் நம்மால் இதன் பிரம்மாண்டத்தை உணர முடியவில்லை அவ்வளவுதான்..

தங்கத் தகடு பொருத்திய கார், பைக்கில் வலம் வரும் இளைஞன்

தங்க ஆபரணங்களை அணிவதில் பெரும்பாலானோருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் அதே வேளையில் உடலில் யாரும் கிலோ கணக்கில் தங்கத்தை நகைகளாக செய்து அணிந்து கொண்டு வலம் வருவதில்லை. வியட்நாமைச் சேர்ந்த 39 வயது இளைஞர் இதில் சற்று வேறு ரகம். இவர் தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். இவரது உடலில் இவர் அணிந்திருக்கும் தங்க நகை மட்டும் எவ்வளவு தெரியுமா 2 கிலோ.  ஆன் ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் டிரான் டக் லோய் என்ற இளம் தொழில் முனைவோர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்.  இவருக்கு விதவிதமான உருவங்களை தங்க ஆபரணங்களாக செய்து அணிந்து கொள்வதில் தீராத ஆர்வம் உடையவர். ஆப்பிரிக்க பல்லி, டிராகன் போன்ற பல்வேறு உருவங்களை தங்கத்தால் செய்து விரலில் மோதிரமாகவும், கழுத்தில் சங்கிலியாகவும் அணிந்துள்ளார். அது மட்டுமா, தனது காரை முழுக்க முழுக்க தங்கத் தகடுகளால்  வேய்ந்துள்ளார். காரின் டயரில் இருக்கும் இரும்பு பிளேட்களுக்கு பதிலாக தங்கத்தில் செய்து பொருத்தியுள்ளார். அது மட்டுமா தங்கத் தகடுகளால் வேயப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் இவர் வைத்துள்ளார். இதற்காக அந்நாட்டு பணத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago