முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, குரல் உத்தரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.
நிக்கும்பா வம்சத்தை சேர்ந்த சாந்த் மகாராஜாவால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்தியர்களின் கணிதவியல் வல்லமைக்கும், கட்டிடக்கலை நேர்த்திக்கும் இது சிறந்த சான்றாகும். பாலைவன பிரதேசமான இங்கு தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இந்த படிக்கிணறு கட்டப்பட்டிருக்கிறது. இது 100 அடி ஆழமும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீர் எப்போதுமே குளிர்ச்சியுடன் இருப்பது அதிசயம். இந்த படிக்கிணற்றில் மொத்தம் 3500 படிகள் இருக்கின்றன. பதிமூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இந்த படிகள் ஒவ்வொன்றும் அச்சுப்பிசகாமல் ஒரே போல அமைக்கப்பட்டிருப்பது நமக்கு பிரம்மிப்பை உண்டுபண்ணும்.
சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரிய ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். குறிப்பாக சூரியனை தவிர மற்ற எந்த கோள்களுக்கும் சுயமாக பிரகாசிக்கும் தன்மை கிடையாது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சூரிய ஒளியை பூமி பிரதிபலிக்கும் தன்மை சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள பிக் பியர் சோலார் அப்சரவேட்டரி ஆய்வகத்தைச் சேர்ந்த பிலிப் கூடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கடந்த 1998 முதல் 2017 வரையிலான பூமியின் பிரதிபலிப்பு திறன் குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வு செய்ததில் பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவிக்கின்றனர். அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் தான் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாகவும் அவர்களது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கிரோக் ஏ.ஐ. தள விவகாரம்: இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக எக்ஸ் நிறுவனம் உறுதி
11 Jan 2026புதுடெல்லி, எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன கிரோக் தளம் தொடர்பான புகாரில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ள
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
11 Jan 2026சென்னை, மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


