பெரும்பாலும் அருவி நீர் நிறமற்ற வேகத்தில் கொட்டும். சற்று அடர்த்தியாகவும், வேகமாகவும் பாய்கிற போது அதன் குமிழிகள் பொங்குவதால் வெள்ளை நிறத்தில் இருப்பதை நம்மால் காண முடியும். உலகம் முழுவதுமே அருவிகள் வெள்ளை நிறத்திலேயே பொங்கி பிரவகிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இடத்தை தவிர. அது கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள விக்டோரியா நிலம் எனப்படும் McMurdo Dry Valleys என்ற பள்ளத்தாக்கில்தான் அருவி ரத்த நிறத்தில் பாய்ந்தோடுகிறது. இந்த ரத்த நதி டெய்லர் பனிப்பாறையின் நாக்கு போன்ற பகுதியிலிருந்து டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள வெஸ்ட் லேக் போனியின் பனி மூடிய மேற்பரப்பில் பாய்கிறது. ஏன் சிவப்பாக, ரத்த நிறத்தில் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பூமியில் உள்ள இரும்பு ஆக்சைடு இந்த நீர் பரப்பில் கலந்து வருவதால் சிவப்பு நிறத்தில பாய்கிறது பனிக்காலங்களில் சிவப்பு நிற பனிப்பாளங்களாக உறைந்து கிடப்பதை பார்க்க பேரதிசயமாக விளங்குகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து போன்ற பாறை தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே இருக்கிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக அறியப்படும் இது இயற்கையாக வந்ததா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது.
உலக வரலாற்றில் 1945 ஆகஸ்ட் 9 ஐ மக்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே போல மறுநாள் ஆகஸ்ட் 10. ஏன்? கொடிய அமெரிக்கா உலகையே உலுக்கும் வகையில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அணுகுண்டை இனி பயன்படுத்தினால் உலகம் என்னவாகும் என்பதற்கு துயர சாட்சியாக நின்ற நாள். சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்தனர். தலைமுறை தலைமுறையாக அதன் கதிர்வீச்சு பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் ஒரு அதிசயம் நடந்தது. அணுகுண்டு வெடித்த போது சற்று தொலைவில் இருந்த ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் தனது 93 வயது வரை வாழ்ந்து அந்த துயர சம்பவத்தின் உயிர் சாட்சியாக விளங்கினார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி. அணுகுண்டு வெடித்த போது அவருக்கு வயது 29. கடந்த 2009 இல் தனது 93 வயதில் சிறுநீரக மற்றும் வயிற்று புற்றுநோயால் மறைந்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.
எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.
இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.
பண்டைய காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை எகிப்து நாட்டின் மம்மிக்கள். தற்போது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் மூலம் பண்டைய எகிப்து மம்மிக்களின் முகங்களை விஞ்ஞானிகள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மார்க்ஸ் பிளாங் இன்டிடியூட் ஆஃப் சையின்ஸ் ஆஃப் ஹியூமன் ஹிஸ்டரி மையமும் துபின்சென் பல்கலை கழகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன. இதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிக்களின் உடலிலிருந்து டிஎன்ஏ சாம்பிள்கள் தொகுக்கப்பட்டு முக மாதிரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சி இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் பண்டைய எகிப்து நாகரிகத்தின் அசலான முகங்களை நம்மால் இனம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


