எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோபி டிசம்பர் 10, ஈரோடு மாவட்டத்தில் பெய்ய வேண்டிய ஆண்டு மழையளவான 700 மி.மீட்டரில் மூன்றில் ஒருபங்கு கூட பெய்யாததால், மாவட்ட விவசாயிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர். மொத்த சாகுபடிப் பரப்பில் சரிபாதி மானாவாரிப் பகுதியாக இருப்பதால் , மழையை நம்பி சாகுபடி செய்யப்படும் விவசாயப் பயிர்கள் போதிய மழையின்மையால் காய்ந்து வரும் அவல நிலை உள்ளது. கீழ்பவானிப் பாசனப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் , பாசனத்திற்கு நீர் திறந்துவிடப் படாததால் , ஆயிரம் அடிக்குக் கீழ் போய்விட்டன. கிணறுகளில் நீர் வற்றி வெகுகாலம் ஆகிவிட்டது. மானாவாரிப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் அதல பாதாலத்திற்குச் சென்றுவிட்டது.
இந்த நிலையில் நவீன தொழில்நுட்ப வரவான சொட்டுநீர்ப் பாசனமும் , தெளிப்புநீர் பாசனமும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. சாதாரணமாக வாய்க்கால்கள் மூலம் ஒரு ஏக்கருக்கு நீர் பாய்ச்சினால் , அதே வயலில் சொட்டு நீர்ப்பாசனம் அமைந்தால் மூன்று ஏக்கர்கள் வரை விவசாயம் செய்ய இயலும். அதே போல் ‘ஸ்பிரிங்லர்” எனப்படும் தெளிப்புநீர்ப்பாசனத்தால் வறட்சியில் கருகும் பயிர்களைக் காப்பாற்றி, மகசூல் குறைவு படாமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும் வேளாண்மைத்துறையின் சார்பில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப்பாசனத்திற்கும் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் மத்தியில் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடப்பு மானாவாரிப் பருவத்தில் தெளிப்பு நீர்பாசனம் மூலம் பலனடைந்து நிலக்கடலையில் அமோக மகசூல் பெற்ற நம்பியூரை அடுத்த அஞ்சானூர் ஊராட்சி சின்னாக்கவுண்டன் பாளையம் வெளாங்காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தெரிவித்ததாவது.
‘எனக்கு சொந்தமாக 4 1ஃ2 ஏக்கர் நிலம் உள்ளது. மிகவும் வறட்சிப் பகுதியான நம்பியூர் வட்டாரம் , அஞ்சானூரில் எனது பூமி இருக்கிறது. நான் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கடலை சாகுபடி செய்வேன் இந்த ஆண்டில் இரண்டரை ஏக்கரில் ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தேன் மானாவாரியாக விதைத்திருந்ததால் போதிய மழை பெய்யாமல் கருகும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் வேளாண்மைத்துறை சார்பில் தெளிப்புநீர்ப் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக அறிந்து அதற்கு விண்ணப்பித்து ஈ.பி.சி நிறுவனம் மூலம் ரூ19 ஆயிரத்து அறுநூறு ரூபாய் மானியத்தில் தெளிப்பு நீர்க்கருவிகளைப் பெற்றேன். கடுமையான வறட்சி நிலவியபோது எனது போர் கிணற்றில் இருந்த சிறிது தண்ணீரைப் பயன்படுத்தி தெளிப்பு நீர்க்கருவி மூலம் நன்றாக தண்ணீர் தெளித்தேன். மழைக்குப் பதிலாக இந்தக்கருவி எனக்கு நன்கு உதவியது. அறுவடையின் போது ஒரு செடிக்கு 58 காய்கள் வரை இருந்தது ஏக்கருக்கு 820 கிலோ மகசூல் கிடைத்தது. அக்கம் பக்கத்தில் உள்ள வயல்கள் எல்லாம் காய்ந்து சருகாகிப் போன நிலையில், 100 சத மானியத்தில் வேளாண்மைத்துறை மூலம்; கிடைத்த இந்த தெளிப்புநீர்ப்பாசனம் என் பயிரைக் காப்பாற்ற உதவியது. ஒரு ஏக்கருக்கு சாகுபடிச் செலவு 15 ஆயிரம் ரூபாய் ஆனது. மொத்தம் நிலக்கடலை விற்பனை செய்ததில்; 40 ஆயிரம் வருமானம் கிடைத்ததில் நிகர லாபமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் கிடைத்தது. இந்தப் பருவத்தில் மக்காச்சோளம் விதைத்துள்ளேன் இதற்கும் தெளிப்பு நீர்ப்பாசனக் கருவிகளைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறுவேன் “ என்றார்.
‘இது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவிக்கும் போது , நம்பியூர் வட்டாரத்தில் கடந்த ஆண்டு நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் அறுபது விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டு 37 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறு ஃ குறு விவசாயிக்கு 5 ஏக்கர் வரையில் அதிக பட்சம் ஒரு லட்சம் ரூபாய் மானியமும் , 5 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கு அதிகபட்சம் 5 எக்டர் வரையில் 75 சத மானியமும் வழங்கப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சொட்டுநீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப் பாசனம் வேண்டியும் வேளாண்மைத்துறைப் பதிவேட்டில் முன்பதிவு செய்துள்ள விவசாயிகள் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்” என்றார்
மொத்தத்தில் கடும் வறட்சி நிலவும் இந்தத் தருணத்தில் குறைந்த நீர்த்தேவையில் நல்ல மகசூல் கொடுக்கவும் , வாடுகின்ற நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றவும் விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கும் , தெளிப்பு நீர்ப் பாசனத்திற்கும் மாறவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.