LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த பொருட்செலவில் அதிக பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர்களுக்கான மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி பயனாளிகள் அமைத்துள்ள தோட்டக்கலைப் பயிர் தோட்டங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தோட்டக்கலைப் பயிர்களாக மிளகாய், கொத்தமல்லி, கத்தரி, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறன. வறட்சியான சூழ்நிலையிலும், குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்திடும் விதமாக தோட்டக்கலைத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குவதோடு, விவசாயிகளுக்கு பசுமைக்குடில், பந்தல் தோட்டம், சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றிற்கு மானிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குத்தரவை கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பாக உயர்தொழில்நுட்பத்துடன் பசுமைக்குடில் அமைப்பதற்கு மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்துள்ளார். இந்த பசுமைக் குடிலானது அரசு மானியமாக ரூ.4.75 லட்சம் மற்றும் விவசாயியின் பங்களிப்பாக ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் விளைச்சல் ரக வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பசுமைக் குடிலில் சொட்டு நீர் பாசன வசதியும்; இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பசுமைக்குடிலில் ஒவ்வொரு இலைக் கொத்திலும் சுமார் 6 முதல் 10 வரை வெள்ளரிக்காய் மகசூல் கிடைக்கிறது. மேலும் ஒவ்வொரு அறுவடைக்கும் சுமார் 500 முதல் 750 கிலோ வரை வெள்ளரி விளைச்சல் செய்து பயனடைந்து வருவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அதேபோல கடலாடி வட்டம் கடுகுசந்தை கிராமத்தை சார்ந்த நாகலிங்கம் மனைவி இந்துராணி என்பவர் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்படும் மானிய உதவித்தொகையினைப் பயன்படுத்தி 4.00 எக்டர் பரப்பளவில் தரமான பந்தல் அமைத்து பீர்க்கு, பாகல், புடல், சுரை மற்றும் வீரிய ஒட்டு தக்காளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இப்பந்தல் தோட்டம் அமைப்பதற்கு அரசு மானியமாக ஏக்கருக்கு ரூ.80ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன வசதியும்; அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும் வசதியும் உள்ளது. இப்பந்தல் தோட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை வருமானம் பெற்று பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு கலெக்டர்; முனைவர்.ச.நடராஜன் மேற்குறிப்பிட்டுள்ள பசுமைக்குடில் மற்றும் பந்தல் தோட்டம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயிர்சாகுபடிக்காக தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர். பயிர் சாகுபடியில் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் பொருட்செலவில் அதிக மகசூல் பெற்றிடும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என கலெக்டர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார். மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற மானிய உதவி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களிடத்தில் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் ச.தமிழ் வேந்தன், வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி
17 Aug 2022கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
17 Aug 2022புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது
17 Aug 2022கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.