எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த பொருட்செலவில் அதிக பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர்களுக்கான மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி பயனாளிகள் அமைத்துள்ள தோட்டக்கலைப் பயிர் தோட்டங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தோட்டக்கலைப் பயிர்களாக மிளகாய், கொத்தமல்லி, கத்தரி, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறன. வறட்சியான சூழ்நிலையிலும், குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்திடும் விதமாக தோட்டக்கலைத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குவதோடு, விவசாயிகளுக்கு பசுமைக்குடில், பந்தல் தோட்டம், சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றிற்கு மானிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குத்தரவை கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பாக உயர்தொழில்நுட்பத்துடன் பசுமைக்குடில் அமைப்பதற்கு மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்துள்ளார். இந்த பசுமைக் குடிலானது அரசு மானியமாக ரூ.4.75 லட்சம் மற்றும் விவசாயியின் பங்களிப்பாக ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் விளைச்சல் ரக வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பசுமைக் குடிலில் சொட்டு நீர் பாசன வசதியும்; இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பசுமைக்குடிலில் ஒவ்வொரு இலைக் கொத்திலும் சுமார் 6 முதல் 10 வரை வெள்ளரிக்காய் மகசூல் கிடைக்கிறது. மேலும் ஒவ்வொரு அறுவடைக்கும் சுமார் 500 முதல் 750 கிலோ வரை வெள்ளரி விளைச்சல் செய்து பயனடைந்து வருவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அதேபோல கடலாடி வட்டம் கடுகுசந்தை கிராமத்தை சார்ந்த நாகலிங்கம் மனைவி இந்துராணி என்பவர் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்படும் மானிய உதவித்தொகையினைப் பயன்படுத்தி 4.00 எக்டர் பரப்பளவில் தரமான பந்தல் அமைத்து பீர்க்கு, பாகல், புடல், சுரை மற்றும் வீரிய ஒட்டு தக்காளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இப்பந்தல் தோட்டம் அமைப்பதற்கு அரசு மானியமாக ஏக்கருக்கு ரூ.80ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன வசதியும்; அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும் வசதியும் உள்ளது. இப்பந்தல் தோட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை வருமானம் பெற்று பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு கலெக்டர்; முனைவர்.ச.நடராஜன் மேற்குறிப்பிட்டுள்ள பசுமைக்குடில் மற்றும் பந்தல் தோட்டம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயிர்சாகுபடிக்காக தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர். பயிர் சாகுபடியில் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் பொருட்செலவில் அதிக மகசூல் பெற்றிடும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என கலெக்டர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார். மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற மானிய உதவி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களிடத்தில் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் ச.தமிழ் வேந்தன், வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: