எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மூன்றாண்டுகளில் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டங்கள் அடியோடு மாற்றியமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாற்றியமைக்கப்படும் இந்த பாடத்திட்டம் குறித்த அரசாணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
அதன் விபரம் வருமாறு:
தமிழக கல்வி வரலாற்றில் இடைநிலைக்கல்வி பல்வேறு மாற்றங்களை கடந்து வந்துள்ளது.. தமிழகத்தில் 1989 - 90 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1 பாடத்திட்டமும், 1990-91 ஆம் ஆண்டு பிளஸ் 2 பாடத்திட்டமும், 1995-96 ஆம் ஆண்டு பிளஸ் 1 பாடத்திட்டமும், அதைத்தொடர்ந்து 1996-97 ஆம் ஆண்டு பிளஸ்2 , 2003-4 ஆம் ஆண்டு பிளஸ் 1, 2004-5 ஆம் ஆண்டில் பிளஸ் 2 பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை நான்கு பாடவாரியங்கள் தனித்தனியாக இயங்கி வந்தன, பொதுப்படவாரியம் என்ற முறையில் இவை ஒருமுகப்படுத்தப்பட்ட 2010-11 ஆம் ஆண்டு ஒன்று முதல் 6 ஆம் வகுப்பு வரையும் 2011-12 ஆம் ஆண்டில் 2,3,4,5.7,9 மற்றும் பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு,ஸ 7 ஆண்டுகளும் பிளஸ் 1,மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளும் ஆகியுள்ளன .பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகளில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் கல்வி அமைப்புகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள் அடங்கிய வல்லுநர் குழு அமைத்து பரிந்துரை வழங்க கோரப்பட்டது,. இந்த வல்லுநர் குழு விரிவாக ஆலோசித்து மூன்று துணைக்குழுக்களை அமைத்து அதன் ஆலோசனைகளை பெற்றது. இந்த குழு சென்ற 11 ம்தேதி கூடி பள்ளிக்கல்வியில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஒரு மனதான தீர்மானங்களை நிறைவேற்றின அதன் விபரம் வருமாறு:
தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளுக்கு முன்பும் பிளஸ் 1,2 பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்டது. உலகல அளவில் வளர்ந்து வரும் அறிவியல், சமூக பொருளாதார வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும், மேலும் தமிழக மாணவர்கள் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெறத்தக்க வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டியது. பள்ளிக்கல்வித்துறையின் மிகப்பெரிய கடமையாகும், இதனை செயற்படுத்த ஏதுவாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தற்போதுள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரலாம்,. அப்பாடத்திட்டம் தரமானதாகவும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சிபிஎஸ்சி உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்திற்கு மேலானதாகவும் இருக்கும்படி வடிவமைக்கலாம், அதே நேரத்தில் மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் பாடங்களில் தமிழகத்தின் மொழி, வரலாறு,.பண்பாடு ஆகியவற்றிற்கு மு்ககியத்துவம் அளித்து பாடத்திட்டத்தை உருவாக்கலாம், என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு தீர்மானத்தில், தமிழகத்தில் 12 வகையான தொழிற்கல்வி பாடங்கள் மேல்நிலை வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன, தொழிற்கல்வி பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லவும் வேலைவாய்ப்பினை பெறவும் வாய்ப்புகள் உள்ளன, இந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் அதற்கான திறன்களை முழுமையாக பெற வேணடியதும் வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி சூழலுக்கு ஏற்றவகையில் தொழிற்கல்விக்கான பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியதும் அவசியமானதாகும்,. பாடத்திட்டம் மாற்றம் செய்யும்போது தொழில்கல்வி மாணவர்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெறும் வண்ணம் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும், இந்த பணியினை மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , அண்ணா பல்கலைக்கழகம்,மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற தொழிற்சார்ந்த பல்கலைக்கழகங்களின் உதவியோடு மேற்கொள்ளலாம் .
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளிகளில் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் கணினிப்பாடத்தை பயில்வது அவசியமானதாகும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தற்போதய பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல், கணினிப்பாடம் சேர்க்கப்படாமல்,உள்ளது. புதிய வரைவுப்பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் கணினி பாடத்தை ஒரு பிரிவாக சேர்த்து கற்பிப்பது சார்ந்து பரிசீலிக்கலாம், மேற்கண்ட தீர்மானங்களின் அடிப்படையில் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், பாடத்திட்டங்களை மாற்ற அரசுக்கு கருத்துருக்களை சமர்பித்துள்ளது. பொதுக்கல்வித்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை வகுப்பு வாரியாக மற்றும் பாடவாரியாக வல்லுநர் குழுக்களை அமைத்து பின்வரும் ஆண்டுகளில் மாற்றி அமைக்கலாம், 2018-19 கல்வியாண்டுகளில் 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் 2019- 20 கல்வியாண்டுகளில் 2,7.10 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கும் 2020 - 21 ஆம் கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8 ஆம் கல்வியாண்டுகளிலும் படிப்படியாக மாற்றியமைக்கப்படும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாடத்தோடு தகவல் தொழிற்நுட்பவியல், கணினி பாடத்தை இணைத்து கற்பிக்கும் வண்ணம் அதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கலாம், தொழிற்கல்வியை பொறுத்தவரை தமிழக சூழலுக்கு எவை ஏற்றது என்பதை கண்டறிய வல்லுனர் குழு அமைத்து அதற்கான பாடநூல் தயாரிக்கவும் இதில் 2017-18 ஆம் கல்வியாண்டில் கண்டறியப்படும் இனங்களில் ஐந்து இனங்களுக்கு 2018-19 கல்வியாண்டு முதல் செயல்படுத்திடவும் மீதமுள்ள இனங்களில் பாதி 2019-20 கல்வியாண்டு மற்றும் 2020-21 ஆம் கல்வியாண்டியிலும் செயல்படுத்திடவும் இன்த பணியினை மாநிலக்கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளலாம்.
புதிய பாடத்திட்டமா் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்கும்போது கற்றலை மனனத்தின் திசையில் இருந்து படைப்பின்பாதையில் பயணிக்க வைக்க வேண்டும், தோல்விபயம் மற்றும் மன அழுத்தத்தை உற்பத்தி செய்யும் தேர்வுகளை உருமாற்றி கற்றலின் இனிமையை உறுதி செய்யும் தருணமாய் அமைத்தல், தமிழர்களின் தொன்மை வரலாறு, வரலாறு பண்பாடு மற்றும் கலை, இலக்கியம்ஸ குறித்த பெருமித உணர்வை மாணவர்கள் பெறுவதுடன், அவர்கள் தன்னம்பி்க்கையோடு அறிவியல் தொழிற்நுட்பம் கைக்கொண்டு நவீன உலகில் வெற்றி நடை பயில்வதை உறுதி செய்ய வேண்டும், அறிவுத்தேடலை வெறும் ஏட்டறிவாய்க்குறைத்து மதிப்பிடாமல் அறிவுச்சாளரமாய் புத்தகமாய் விரிந்து பரவி வழிகாட்டுதல்,புதுமையான கற்றல், கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர் கையேடுகளையும் மாணவர்களுக்கு செய்முறை கையேடுகளையும் தயாரித்து வழங்கிட வேண்டும்.
இணைய வழிக்கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவித்திடும் வகையில் விரிவான கற்றல் மேலாண்மைத்தளம் ஒன்றினை உருவாக்கிடவும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதில் பயன்படுத்தக்கூடிய அலைபேசி செயலிகளை உருவாக்கி செயல்படுத்திடவும் அனுமதி வழங்கப்படுகிறது. பாடத்திட்ட மாற்றத்திற்கு ஏற்றவகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உரிய தொடர்பயிற்சிகள் வழங்கவும் அதற்குரிய விரிவான பயிற்சி கால அட்டவணை மற்றும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு கோரும் கருத்துவருவினை உடன் அரசுக்கு அனுப்புமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இந்த பணிகள் அனைத்தும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளுமாறும், இந்தபணிகளை மேற்கொள்வதற்குரிய நிதி ஒதுக்கீடு, அறிவுசார் தேவைகள் தொடர்பாக தனியானதொரு கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறும், பாடத்திட்ட மாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்குமாறும் பொதுக்கல்வி வாரியத்தின் ஒப்புதலை பெற்று பாடத்திட்ட மாற்ற பணிகளை 6 மாதத்தில் முடிக்குமாறும் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார், இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 day ago |
-
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Jun 2025சென்னை : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
-
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்: 10 மாவட்டங்களில் தொடங்க அரசு முடிவு
28 Jun 2025சென்னை, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
-
குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு..!
28 Jun 2025தென்காசி, குற்றால அருவியில் திடீரென அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பால் பெண்கள் பயந்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் 3 மாவட்ட தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
28 Jun 2025சென்னை : 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் மேட்டுப்பாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு
28 Jun 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை: இஸ்ரேல் மீது ஈரான் காட்டம்
28 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி : புதுச்சேரி முதல்வர் பேட்டி
28 Jun 2025புதுச்சேரி : பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார்.
-
ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம்: ஜூலை 1 முதல் தொடங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 Jun 2025சென்னை, ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
28 Jun 2025சென்னை, எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவை அடுத்து வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: வரும் 1-ம் தேதி யாகசாலை பூஜை
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், வரும் 1-ம்தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது.
-
தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு : மாற்றுத்திறனாளி விவரம் சேகரிப்பு
28 Jun 2025சென்னை : அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது.
-
சிறு, குறு நிறுவனங்களின் புகாருக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி திரெளபதி முர்மு பேச்சு
28 Jun 2025புதுடெல்லி : சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்க திட்டமா..? மத்திய அரசு விளக்கம்
28 Jun 2025புதுடெல்லி, விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஈரான் உச்ச தலைவர் கமேனியை காப்பாற்றியது நான்தான்: அதிபர் ட்ரம்ப்
28 Jun 2025வாஷிங்டன், ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருநது காப்பாற்றினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
'இனி 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்' மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு
28 Jun 2025புதுடெல்லி : புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம் வழங்க மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை
28 Jun 2025சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 400 குறைந்துள்ளது.
-
அந்தமானில் நிலநடுக்கம்
28 Jun 2025புதுடெல்லி : அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
-
இனி கனடாவுடன் வர்த்தக பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்
28 Jun 2025வாஷிங்டன், கனடாவுடன் வர்த்தகம் இனி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
தற்கொலைப்படை தாக்குதல்: 16 பாக். ராணுவ வீரர்கள் பலி
28 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-06-2025.
28 Jun 2025 -
பாகிஸ்தானியர்கள் 40 பேர் தமிழகத்தில் தங்கியுள்ளனர் : மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
28 Jun 2025மதுரை : தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
-
புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்
28 Jun 2025புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்கு இன்று காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது.
-
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்