முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      தமிழகம்
mettur 2024-12-03

Source: provided

மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக கூடிக்கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 290 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரத்து 892 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்திருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 73,452 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

நேற்று முன்தினம் மாலை 113.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 114 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 115 அடியாக உயர்ந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்தது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடி அதிகரித்து.

அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் தண்ணீரின் (வினாடிக்கு 22 ஆயிரத்து 500 அடி) அளவு இருந்தால் அணை இன்னும் 3 நாட்களில் நிரம்ப வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் அணை முன்னதாக நிரம்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து