எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் ரூ.12.0435 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்படுகிறது.
ஒரு தொகுப்பானது 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலப்பரப்பு உடையதாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகள் தொகுப்பில் அடங்கும். முதலாண்டில் 15 தொகுப்புகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 30 தொகுப்புகளிலும், ஆக மொத்தம் 75 தொகுப்புகளில், நிலப்பரப்பு மொத்தம் 1.875 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் 7 வட்டாரங்களில் 15 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் சேகரித்து, முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், மானாவாரி தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.
வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பில் உழவு மானியம் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 37500 ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பயிர்கள் 26,390 ஏக்கரிலும், பயறு வகை 10855 ஏக்கரிலும், எண்ணெய்வித்துக்கள் 225 ஏக்கரிலும், சாகுபடி செய்யப்பட உள்ளது. விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் வழகாட்டுதல்படி பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்க இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் அமைக்கலாம். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்காக கால்நடை துறையின் வழிகாட்டுதல் மூலம் விவசாய குழு உறுப்பினர்களுக்கு அரசு நிதியில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி : மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி முக்கியமானது. மாவட்ட அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மானாவாரி தொகுப்பிலிருந்தும் ஐந்து அலுவலர்கள் வீதம் 75 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு மற்றும் வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய அறிஞர்கள் மூலம் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வட்டார அளவிலும், பின்னர், கிராம அளவிலும் திட்ட செயலாக்கக்குழு விவசாய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய வேளாண்மை இணை இயக்குநர் - 9597251659, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வேப்பனப்பள்ளி-9443207504, மத்தூர்-9787508300, ஊத்தங்கரை-9486755252, சூளகிரி-9444685112, ஓசூர்-97508215656, கெலமங்கலம் மற்றும் தளி-9442630246, மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தில் ஏறத்தாழ 16000 சிறுவிவசாயிகள், குறு விவசாயிகள், மகளிர், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெற உள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மானாவாரி கிராம விவசாயிகள், மழைநீரை நன்கு பயன்படுத்தி, நவீன வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல், கூடுதல் வருமானம் பெற அனைத்து விவசாயிகளும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
06 Jan 2026சென்னை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-01-2026
06 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறது தமிழ்நாடு அரசு: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
06 Jan 2026சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச
-
தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு புதிய சாதனை: மாநில திட்டக்குழு ஆய்வறிக்கையில் தகவல்
06 Jan 2026சென்னை, சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக மாநில திட்டக் கு
-
தமிழகத்தில் வருகிற 9, 10-ம் தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் வருகிற 9. 10- மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
06 Jan 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 12-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) சம்மன் அ
-
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
06 Jan 2026சென்னை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை நேற்று (ஜன. 6) ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்
06 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ரயில் டிக்கெட் முன்பதிவில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் நடைமுறை வரும் 12-ம் தேதி முதல் அமல்
06 Jan 2026சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும்: மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை தீர்ப்பு
06 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்றும் அரசின் மேல் முறையீட்டு மனுவை
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Jan 2026சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
06 Jan 2026லக்னோ, தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.
-
4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்..!
06 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெரம்பலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா? விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்
06 Jan 2026சென்னை, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ


