எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும், ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்பிற்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தைகளுக்கு பால் தரும் “செவிலித் தாய்” என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாடு வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். பசு, எருமைகள் வளர்க்க முடியாதவர்கள் கூட வெள்ளாடுகள் வளர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகப்படுத்தலாம். ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச்சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம்.
இதற்காக அதிக இடமோ, அதிக செலவோ தேவையில்லை. எல்லா வகையான புல், பூண்டுகளையும், இலைதழைகளையும், முலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருட்களைக் கூட உண்டு உயிர் வாழ கூடியவை. வெள்ளாடுகள் நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நிரந்தர வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குவதால் வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகிறன.
வெள்ளாட்டின் நன்மைகள்
• குறைவான முதலீடு, குறைந்த செலவில் தீவனம் கொடுத்து வளர்க்கவல்லது
• அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டவை.
• இறைச்சி அனைத்து தரப்பினராலும் உண்ணக்கூடியது
• கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்திற்காகவும் வளர்க்கலாம்.
• அதிகமான அளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்
• இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்
• வெள்ளாட்டு பால் சளி மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டது.
வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்
இனங்களைத் தேர்வு செய்யும் போது எந்த முறையில் வெள்ளாடு வளர்ப்பு செய்கிறோம் என்பதனை கருத்தில் கொண்டு பண்ணை ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இனங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதிக பால் கொடுக்கும் இனங்கள்; : ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி
அதிக இறைச்சி தரக்கூடியவை : ஜமுனாபாரி, போயர், சிரோகி
அதிக குட்டிகள் ஈனக்கூடியவை : தலைச்சேரி, பார்பாரி
தமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில் இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.
இனப்பெருக்க பராமரிப்பு
வெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்க பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம். ஏனெனில் அப்போதுதான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.
வெள்ளாடுகளின் பெட்டை ஆடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவம் அடையும். ஆனால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் அடைகின்றன. பொதுவாக வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினை தருணத்திற்கு வரும். எனினும் ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்தியாவதுண்டு. பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வருகின்றன.
சினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும். பெட்டைகளைச் சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நல்ல தரமான கிடாவுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிகிடா போதுமானது. பெரிய மந்தையாக இருப்பின் இதே விகிதத்தில் அதிக கிடாக்கள் தேவைப்படும். இனச்சேர்க்கை செய்த 21 நாட்களுக்கு பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு பருவத்திற்கு வரும் சினைப்பிடிக்காத ஆடுகளை மீண்டும் கிடாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்
• சினைப்பருத்திலுள்ள ஆடுகள் அடிக்கடி கத்திக் கொண்டு நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் இல்லாமலும் காணப்படும்.
• மற்ற ஆடுகள் மேல் தாவும், பிற ஆடுகளைத் தம் மேல் தாவ அனுமதிக்கும்.
• பால் உற்பத்தி அளவு குறையும்
• இனப்பெருக்க பிறப்புறுப்புத் தடித்துக் காணப்படும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிப்படும்.
• வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது. எனவே, பொலி கிடாவைக் காலை, மாலை அருகில் விட்டு சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும். சினையுற்ற ஆடுகள் கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் வயிறு பெரிதாக காணப்படும். காலை நேரங்களில் சினை ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில் காலை நேரத்தில் வெறும் வயிராக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையான ஆடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும். அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒரு புறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம் குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
குட்டி ஈனுதல்
குட்டி ஈனும் தருணத்தில் ஆடு அமைதியுற்று கத்திக் கொண்டிருப்பதுடன் வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையை காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் குட்டியை ஈன்றுவிடும். ஈனும் குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை காலின் மேல் வைத்த வண்ணம் வெளியில் வரும். இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும். அதாவது முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம். மேலும், தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.
குட்டி ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்திற்குள்ளாக வெளித்தள்ளப்பட்டுவிடும். குட்டி ஈன்ற ஆடுகளுக்கு சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம் அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் பருவ சுழற்சி ஏற்படும். இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்கு பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.