எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பதைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும், ஊரக வேலைவாய்ப்பை உருவாக்கி வறுமை ஒழிப்பிற்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்புத் தொழில் விளங்குகிறது. ஐரோப்பிய நாடுகளில் கைக்குழந்தைகளுக்கு பால் தரும் “செவிலித் தாய்” என்று அழைக்கப்படுகிறது. வெள்ளாடு வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். பசு, எருமைகள் வளர்க்க முடியாதவர்கள் கூட வெள்ளாடுகள் வளர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகப்படுத்தலாம். ஆடுகளைச் சாலை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், மலைச்சரிவுகளிலும் மேயவிட்டு வளர்க்கலாம்.
இதற்காக அதிக இடமோ, அதிக செலவோ தேவையில்லை. எல்லா வகையான புல், பூண்டுகளையும், இலைதழைகளையும், முலிகை கலந்த செடிகொடிகளையும் மற்ற கால்நடைகள் உண்ணாத பொருட்களைக் கூட உண்டு உயிர் வாழ கூடியவை. வெள்ளாடுகள் நம் நாட்டில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கும் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நிரந்தர வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விளங்குவதால் வெள்ளாடுகள் ஏழைகளின் நடமாடும் வங்கியாகக் கருதப்படுகிறன.
வெள்ளாட்டின் நன்மைகள்
• குறைவான முதலீடு, குறைந்த செலவில் தீவனம் கொடுத்து வளர்க்கவல்லது
• அதிக உற்பத்தி மற்றும் ஈனும் திறன், அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டவை.
• இறைச்சி அனைத்து தரப்பினராலும் உண்ணக்கூடியது
• கறிக்காகவும், பாலுக்காகவும், தோலுக்காகவும், உரத்திற்காகவும் வளர்க்கலாம்.
• அதிகமான அளவில் குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. ஒரு ஈற்றில் 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும்
• இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகளை ஈனும்
• வெள்ளாட்டு பால் சளி மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் மருத்துவ தன்மை கொண்டது.
வெள்ளாட்டு இனங்களைத் தேர்வு செய்தல்
இனங்களைத் தேர்வு செய்யும் போது எந்த முறையில் வெள்ளாடு வளர்ப்பு செய்கிறோம் என்பதனை கருத்தில் கொண்டு பண்ணை ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் இனங்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதிக பால் கொடுக்கும் இனங்கள்; : ஜமுனாபாரி, பார்பாரி, பீட்டல், தலைச்சேரி
அதிக இறைச்சி தரக்கூடியவை : ஜமுனாபாரி, போயர், சிரோகி
அதிக குட்டிகள் ஈனக்கூடியவை : தலைச்சேரி, பார்பாரி
தமிழ்நாட்டில் கொட்டில் முறை வளர்ப்பில் இறைச்சி உற்பத்தியை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் பண்ணைக்கு போயர், ஜமுனாபாரி, தலைச்சேரி, சிரோகி ஆகிய இனங்கள் ஏற்றவை.
இனப்பெருக்க பராமரிப்பு
வெள்ளாடு வளர்ப்பில் இனப்பெருக்க பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்க்க விரும்புவோர் நல்லதோர் இனச் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தல் அவசியம். ஏனெனில் அப்போதுதான் தரமான குட்டிகளை உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட முடியும்.
வெள்ளாடுகளின் பெட்டை ஆடுகள் 6-8 மாதத்திலும், கிடாக்கள் 8-10 மாதத்திலும் பருவம் அடையும். ஆனால் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுதியைப் பெட்டையாடுகள் 12-15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் அடைகின்றன. பொதுவாக வெள்ளாடுகள் மே, ஜனவரி மாதங்களில் சினை தருணத்திற்கு வரும். எனினும் ஆண்டின் எத்தருணத்திலும் இனவிருத்தியாவதுண்டு. பெட்டையாடுகள் 19-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வருகின்றன.
சினைப்பருவம் 24-28 மணி நேரம் நீடித்திருக்கும். பெட்டைகளைச் சினைப்பருவ அறிகுறிகள் ஆரம்பித்த பிறகு 12 முதல் 24 மணி நேரத்திற்குள் நல்ல தரமான கிடாவுடன் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்காக சுமார் 20 முதல் 30 ஆடுகளுக்கு ஒரு பொலிகிடா போதுமானது. பெரிய மந்தையாக இருப்பின் இதே விகிதத்தில் அதிக கிடாக்கள் தேவைப்படும். இனச்சேர்க்கை செய்த 21 நாட்களுக்கு பிறகு பெட்டைகளில் சினைப்பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு பருவத்திற்கு வரும் சினைப்பிடிக்காத ஆடுகளை மீண்டும் கிடாவுடன் சேர்த்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
சினைப்பருவ அறிகுறிகள்
• சினைப்பருத்திலுள்ள ஆடுகள் அடிக்கடி கத்திக் கொண்டு நிதானமின்றியும், வாலை ஆட்டிக் கொண்டும், தீவனத்தில் விருப்பம் இல்லாமலும் காணப்படும்.
• மற்ற ஆடுகள் மேல் தாவும், பிற ஆடுகளைத் தம் மேல் தாவ அனுமதிக்கும்.
• பால் உற்பத்தி அளவு குறையும்
• இனப்பெருக்க பிறப்புறுப்புத் தடித்துக் காணப்படும். அதிலிருந்து வழவழப்பான திரவம் வெளிப்படும்.
• வெள்ளாடுகள் சினைத் தருணத்தை மிகுந்த வெளிப்படையாகக் காட்டாது. எனவே, பொலி கிடாவைக் காலை, மாலை அருகில் விட்டு சினைத் தருணத்தை அறிந்து, தக்கபடி இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆடுகளின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்களாகும். சினையுற்ற ஆடுகள் கருவூட்டல் செய்த இரண்டு மாதத்தில் வயிறு பெரிதாக காணப்படும். காலை நேரங்களில் சினை ஆடுகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம். ஏனெனில் காலை நேரத்தில் வெறும் வயிராக இருக்கும் பொழுது சினையில்லா ஆடுகள் வயிறு ஒட்டியும், சினையான ஆடுகளின் வயிறு பெரிதாகவும் காணப்படும். அதோடு வயிற்றின் கீழ்ப்பகுதியின் ஒரு புறத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு மறுபுறம் இருந்து மறு கையின் உதவியால் மென்மையாக அழுத்திப் பார்ப்பதன் மூலம் குட்டியின் இருப்புத் தன்மையை அறிந்து கொள்ளலாம்.
குட்டி ஈனுதல்
குட்டி ஈனும் தருணத்தில் ஆடு அமைதியுற்று கத்திக் கொண்டிருப்பதுடன் வயிறு சுருங்கி விரிதல், அடிக்கடி உட்கார்ந்து எழுதல், மூச்சுத் திணறல், தரையை காலால் பிராண்டுதல் போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் குட்டியை ஈன்றுவிடும். ஈனும் குட்டியானது முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை காலின் மேல் வைத்த வண்ணம் வெளியில் வரும். இரண்டு குட்டிகளை ஈனும் நேரமானது சற்றே வேறுபடும். அதாவது முதலாவது குட்டிக்கும், இரண்டாவது குட்டிக்கும் இடையே உள்ள ஈனும் நேரமானது சில நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும் ஆகலாம். மேலும், தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.
குட்டி ஈன்றபின் நஞ்சுக் கொடியானது 30 நிமிடம் முதல் 8 மணி நேரத்திற்குள்ளாக வெளித்தள்ளப்பட்டுவிடும். குட்டி ஈன்ற ஆடுகளுக்கு சரியான முறையில் அடர் தீவனமும், பசுந்தீவனமும் கொடுப்பதன் மூலம் அதன் கருப்பை சுருங்கி 45 நாட்களில் மீண்டும் பருவ சுழற்சி ஏற்படும். இல்லையெனில் 7 முதல் 9 மாதங்களுக்கு பின்பே பருவச் சுழற்சி ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
டெல்லி கார் வெடி குண்டு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
17 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடி குண்டு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


