எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆட்டுக்குட்டிகளுக்கான தீவன பாராமரிப்பு முக்கியதுவம் வாய்ந்தாகும். தீவனமே ஆட்டுக்குட்டிகளை நோய் தாக்குதலிருந்து காப்பாற்றுவதோடு நல்ல நிலையில் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. தீவனம் பல வகைபட்டது. தானிய வகைத் தீவனப்பயிர்கள் இவ்வகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவு மாவுச்சத்தும், ஓரளவு புரதச்சத்தும் உள்ளன. இவ்வகையில் தீவனச்சோளம் கோ- எப்-எஸ்-29, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியன முக்கியமானது ஆகும்.
புல்வகைத் தீவனப்பயிர்கள் : இவ்வகைகளில் அதிக அளவு மாவுச்சத்தும் ஓரளவு புரதச்சத்தும் உள்ளன. இவ்வகையில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ-4), கொளுக்கட்டை புல், கினியாப்புல், மயில் கொண்டைப்புல் ஆகியன முக்கியமானது ஆகும். இவ்வகையில் புரதச்சத்து உலர்பொருள் அடிப்படையில் 5 லிருந்து 10 சதவீதம் வரை உள்ளது.
பயிர்வகைத் தீவனப்பயிர்கள் : இவ்வகையில் அதிக புரதச்சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. இவ்வகையில் வேலி மசால், குதிரைமசால், தீவனத் தட்டைப்பயறு, தீவன சோயா மொச்சை, கொள்ளு மற்றும் நரிப்பயறு ஆகியன முக்கியமானவை. பயறு வகைப் பசுந்தீவனங்களை புல் வகைத் தீவனங்களுடன் கலந்து ஆடுகளுக்குக் கொடுப்பது அடர் தீவனத்தை கொடுப்பதற்குச் சமமானது.
பசுந்தீவனம் கொடுக்கும் அளவு : வளரும் ஆட்டுக்குட்டிகளுக்குத் தினந்தோறும் ½ கிலோ முதல் 1 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும். சுமார் 20 லிருந்து 40 கிலோ எடையுள்ள வெள்ளாடுகளுக்குத் தினந்தோறும் 1 கிலோ முதல் 2 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும்.
அடர் தீவனக்கலவையை நாள் ஒன்றுக்கு, வளரும் இளம் ஆடுகளுக்கு 100 கிராமும், பெரிய ஆடு மற்றும் சினை ஆடுகளுக்கு 250 கிராமும், பொலி கிடாகளுக்கு 400 கிராமும் கொடுக்கவேண்டும்.
உலர் தீவனம் : வெள்ளாடுகளுக்கு உலர் தீவனமாக சோளத்தட்டு, கடலைக்கொடி, கொள்ளு மற்றும் நரிப்பயறு போன்ற காய்ந்த பயறு வகை தீவனங்களை அளித்திடலாம். இதனை மானாவாரி நிலங்களில் பருவ மழை காலங்களில் விதைத்து பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து உலர வைத்து சேகரித்து வைப்பதன் மூலம் மேய்ச்சல் குறைந்த கோடை காலங்களில் ஆடுகளுக்கு அளித்திடலாம்.
நோய்கள் பராமரிப்பு : வெள்ளாடுகளை, அடைப்பான், தொண்டை அடைப்பான், நிமோனியா, டெட்டானஸ் மற்றும் துள்ளுமாரி நோய் போன்ற நுண்ணுயிர் கிருமிகளால் உண்டாகும் நோய்களும், ஆட்டம்மை, கோமாரி, ஆட்டுக்கொல்லி நோய் மற்றும் நீல நாக்கு நோய் போன்ற நச்சுயிர் கிருமிகளால் உண்டாகும் நோய்களும் தாக்குகின்றன. இந்நோய்களை தடுக்க ஆண்டு தோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பும், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும்.
குடற்புழு தாக்கம் : ஆடுகளை தட்டைப்புழு, நாடாப்புழு மற்றும் உருண்டைப்புழு போன்ற மூன்று வகையான குடற்புழுக்கள் தாக்குகின்றன. இந்நோய் கண்ட ஆடுகளில் வயிற்றுப்போக்கு, இரத்தசோகை வளர்ச்சியின்மை மற்றும் தாடை வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த குடற்புழு தாக்கத்தை சாண பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.
குடற்புழு நீக்கம் : பொதுவாக மூன்று மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் அந்தந்த இடத்திற்கும் மற்றும் புழுக்களின் பாதிப்பிற்கேற்றவாறும் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும்.
1. பருவமழை தொடங்கும் முன்பு ஒரு முறையும் (ஏப்ரல் முதல் ஜீன்)
2. பருவமழையின் போது ஒரு முறையும் (ஜீலை முதல் செப்டம்பர்)
3. பருவமழைக்கு பின்னால் இரு முறையும் (அக்டோபர் முதல் டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் மார்ச்)
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கொடுக்க வேண்டும்.
ஜனவரி முதல் மார்ச் தட்டைப்புழுக்களுக்கான மருந்து
ஏப்ரல் முதல் ஜீன் உருண்டைஃநாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை முதல் செப்டம்பர் தட்டைப்புழுக்களுக்கான மருந்து
அக்டோபர் முதல் டிசம்பர் உருண்டைஃநாடாப்புழுக்களுக்கான மருந்து.
மேற்கூறிய வழிமுறைகளில் இனங்கள் தேர்வு செய்து, தொழில்நுட்ப ரீதியான இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை மற்றும் நோய்கயை கட்டுப்பாடுகளை கையாழுவதன் மூலம் அதிக குட்டிகள் பெற்று அதிக இலாபம் அடைய முடியும். மேலும் விவரங்களுக்கு உங்களது அருகில்லுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலும் வேளான் அறிவியல் மையங்களிலும் அல்லது உழவர் பயிற்சி மையங்களில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.சோ.யோகேஷ்பிரியா, மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சு.கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் ப. செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
டெல்லி கார் வெடி குண்டு விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
17 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடி குண்டு விபத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.


