எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக் குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிப்பட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போன்றவை செல்லும் போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்று வரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்கு கிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக மாகக் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய் கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனினும், ஒரு சில நேரங்களில் நோயின் தாக்கம் இருக்கும். அப்போது உரிய மருத்துவம் செய்து கொண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக் குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பத னையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.
நோயின் காரணங்கள் : நாம் சுவாசிக்கும் காற்று உட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது. சில பொருட்கள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தோற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள் : ஈழை நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் மிகச் சரியாக இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. சூழல் காரணிகளுடன் மரபியல் காரணிகளும் இணைந்தே இந்த ஈழை நோயை ஏற்படுத்துகிறது. இந்தக் காரணிகள் நோயின் தீவிரத் தன்மையையும் சிகிச்சைக்கான பலனையும் மாற்றுகின்றது. சில சூழல், மரபியல் காரணிகள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு பல காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன.
மிகவும் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நுரையீரலுக்கு ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் நுரையீரலுக்குச் செல்லும் காற்று வழியானது தற்காப்பு நோக்கில் சுருங்கி மூடிக் கொள்ளப் பார்ப்பதாகக் கருதப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் வேதியியல் மூலக்கூற்று உயிரியல் பிரிவிலிருந்த புரொஃப்பெட் (Pசழகநவ) என்பவர் மனித உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது ஒவ்வாமை ஊக்கிகளை (யடடநசபநளெ) தமக்கான அச்சுறுத்தலாகவே கருதுவதாகக் கூறினார்.
இதனால் ஈழை நோயானது கூர்ப்பின் வழி தோன்றிய உடலின் ஒரு தற்காப்பு இயங்கு முறையாகக் கொள்ளப்படலாம். இதன் வழி சுவாச வழிக்கான மாசுபடுத்திகள் அகற்றப்படும்போது அல்லது குறைக்கப்படும் போது இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகின்றது.
சூழலியல் காரணிகள் நோய்க்கான பொதுவான காரணங்கள் :
1. ஒவ்வாமை ஊக்கிகள் (யடடநசபநளெ) - தூசு, சிற்றுண்ணிகள், மகரந்தம், பூஞ்சை
2. புகைஇலையிலிருந்து வரும் புகை, குறிப்பாக, பெண்கள் கருத்தரித்து இருக்கும்போது சிகரெட் புகைத்தலுடன் இந்நோய் தொடர்புடையதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
3. வேலைத் தளங்களில் பயன்படும் வேதிப்பொருட்கள்
4. மாசடைந்த காற்று, வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு அல்லது அதிகமான ஓசோன் அளவுகள் ஆகியவற்றின் காரணத்தினால் காற்றின் தரம் குறைகிறது. காற்றின் தரம் குறைதல் இந்நோய் உருவாதலுடனும், இந்நோயின் பாதிப்பு அதிகமாவதுடனும் தொடர்புடையதாக உள்ளது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. காற்று மாசுப்படுத்திகளின் வெளியாக்கத்திற்கும்(எ.கா) வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு) குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஈழை நோய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஈழை நோய் ஏற்படுதல் மற்றும் குழந்தைப்பருவ ஈழைநோய் அதிகரித்தல் ஆகிய இரண்டுமே வெளியே உள்ள காற்று மாசுப்படுத்தி களினால் தான் ஏற்படுகிறது என்று இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
மேலும் இந்நோயைத் தீவிரப்படுத்தக் கூடிய ஏனைய காரணிகளாவன.
ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி : நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு, பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம், அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேக வைப்பது போல முள்ளங்கிப் பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும். தசிறுநீர் பிரச்சினை தீரும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது. சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்க லாம். முள்ளங்கி கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.
உணவு கட்டுப்பாடு மற்றும் சேர்க்கைகள் : குறைந்த அளவு வைட்டமின் சி நுரையீரல் செயலிழப்போடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது மற்றும் வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பத னால் ஆஸ்துமா நோயுடைய மக்களின் நுரையீரல் செயல்பாடு அதிகரிக் கிறது. இது உடற்பயிற்சி மூலம் ஏற்படும் ஆஸ்துமாவை தடுக்க உதவு கின்றது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. டெக்லென்பர்க் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் அஸ்கோர்பிக் அமிலம் எனும் அடிப்படையில் 2 வாரங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பொதுவான (-14.3+1.6மூ) மற்றும் பிளாசிபோ உணவு கட்டுப்பாடோடு (-12.9+2.4மூ) ஒப்பிடும் போது உடற்பயிற்சிக்கு பின்னான கநஎ1(-6.4+2.4மூ) அதிகப்படியாகக் குறைக்க உதவுகின்றது என ஆராய்ச்சியின் முடிவு காண்பிக்கின்றது.
பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாடு, ஆஸ்துமா அறிகுறிகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர் செய்கிறது உடற்பயிற்சிக்கு பின்னான குநுNழுஇ டுவுஊ4-நு4 மற்றும் 9யஇ 11டீ-Pபுகு2 அளவுகள் பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக (pஈ0.05) இருந்தது. முடிவுகள் சாதகமாக இருந்த போதும் ஆஸ்துமா தாக்கத்தின் வீரியத்தை வைட்டமின் சி மட்டும் குறைக்கும் என்று கூறிவிட முடியாது. ஆஸ்துமா உள்ள மக்களுக்கு வைட்டமின் சி பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பெரிய மற்றும் வலுவான ஆய்வுகள் தேவைப்படுகின்றது.
ஆஸ்துமா சிகிச்சையில் மெக்னீசியம் மற்றும் செலினியம் சேர்க்கை களில் பங்கு பற்றி அறிய மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மிகத் தீவிரமான ஆஸ்துமா நோயாளிகளில் மரபு சார்ந்த சிகிச்சையோடு கூட கூடுதலாக மெக்னீசியம் சல்ஃபேட் நரம்பு வழி சிகிச்சை அளிக்கப்படும் போது மூச்சுக் குழாய் தளர்ச்சி அடையும் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை : அறிகுறிகளை சமாளிக்கவும் வருமுன் கண்காணிக்கவும் அதற்கேற்ற குறிப்பிட்ட திட்டங்களை வகுக்கும் வகையில் மருத்துவர் மற்றும் நோயாளி (குழந்தை அல்லது வயது வந்தவராக இருந்தாலும்0 ஆகியோரி டையே உறவு முறையை உருவாக்குவது ஆஸ்துமாவை கட்டுப்படுத்து வதில் உள்ள மிக முக்கியமான படியாகும். எதை அடைய வேண்டும் என்பதை ஆஸ்துமா உள்ள ஒரு நபர் புரிந்து கொண்டுள்ளார். (மற்றும் முடிவெடுப்பதில் சரியான பங்கு எடுக்கிறார்) என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். அடைய வேண்டியவற்றில் ஒவ்வாமை உருவாக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவதை குறைத்தல் அறிகுறிகளின் தீவிரத்தை அறிந்து கொள்ள மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்வது மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் கூட உள்ளடங்கும். சிகிச்சை திட்டம் எழுதப்பட்டும் ஒவ்வொரு வருகையின் போதும் ஆலோசனை செய்யப்பட்டு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து மாற்றப்பட வேண்டும்.
செல்ல பிராணிகள் அல்லது ஆஸ்பிரின் போன்ற தூண்டும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வெளிப்படுதலை குறைத்தல் அல்லது தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமாவிற்கு அளிக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையாகும். தூண்டுதலை தவிர்த்தல் போதுமான அளவிற்கு இல்லாமல் இருந்ததானால், மருத்துவ சிகிச்சையை நாடலாம். உணர்ச்சி நீக்கம் குணமாக்கக் கூடியதாக இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக சில நோயாளிகள் புடேகோ முறையின் மூலம் தங்கள் சுவாச பழக்கங்களை மாற்றி அமைத்து தங்களது அறிகுறிகளைப் போக்கியுள்ளனர்.
நிவாரண மருந்து, அதிக நேரம் செயல்படக் கூடிய டீ2- இயக்கிகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை மற்ற சிகிச்சை முறைகளாகும்.
தொகுப்பு: டாக்டர் ஆர்.பாலாஜி, தொடர்புக்கு : செல் : 94871 61797. விக்னேஷ் மருத்துவமனை,
220ஃ135. 2-வது அக்ரஹாரம், சேலம் - 636001.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.