எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.
வருவாய்த்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்கு சென்று ஆய்வு நடத்தினர். கடந்த 17ம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ நினைவு இல்லமாக ஆக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜெயலலிதாவின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் ஜெயலலிதா சிறப்பாக வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ‘வேதா இல்லம்’ அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு மிக மும்முரமாக பணிகளை தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் போயஸ் கார்டன் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டனர். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டின் அருகிலேயே போலீசார் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த பகுதிக்கு வருபவர்களையும் அந்த பகுதியில்தான் வசிக்கிறார்களா? என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் வீட்டிற்குள் நுழைய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு பணியாற்றுபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கும் பணி நேற்று தொடங்கியது. மயிலாப்பூர் தாசில்தார் சைலேந்திரன், அதிகாரிகளுடன் ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்தார். அந்த பகுதி முழுவதையும் அந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீட்டின் அமைப்பு, அளவுகள் போன்ற பல அம்சங்களை அதிகாரிகள் வெகு நேரம் ஆய்வு செய்தனர். இதுமட்டுமல்லாமல் வீட்டின் பகுதிகளை அளவெடுத்து குறித்துக்கொண்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு முடிந்தபிறகு பொதுப்பணித்துறையினரும் வந்து ஆய்வு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும்போது அவர் பயன்படுத்திய பொருட்கள், கார்கள், அவருக்கு கிடைத்த பரிசு பொருட்கள், புகைப்படங்கள், அவருடைய பெரிய நூலகம் போன்றவை காட்சிக்காக வைக்கப்படும். மேலும் அவருடைய பேச்சுகள் ஒலிபரப்பவும், அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையில் அவருடைய பங்களிப்புகள், பொதுமக்கள் அறியும் வகையில் காட்டப்படவும், என்னென்ன செய்யலாம் என்று அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ


