எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, மஞ்சள் கலந்ததாக இருக்கும். ஆரஞ்சுப்பழத்தில் சிலவகை நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பும் புளிப்பும் கலந்ததாகவும், சிலவகை வெறும் புளிப்பு சுவையுடன் இருக்கும். பல நோய்களை முன் கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும், அனைத்து வயதினரும் தைரியமாகச் சாப்பிடக் கூடியதும், உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு சீராக்கும் ஆற்றல் உடைய பழம் ஆரஞ்சு.
ஆரஞ்சுப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, மற்றும் சி போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப்பழச்சாறு இரத்தத்தில் பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கும். உடல் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும், உடல் பலம் பெறும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும். மலச்சிக்கலை நீக்கும், நன்கு ஜீரணமாகும், கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், ஆரஞ்சுப்பழச்சாற்றை அரை டம்ளர் அளவு எடுத்து, அத்துடன் தேக்கரண்டி அளவு தேன் கலந்து படுக்கைக்குச்செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து குடித்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஆரஞ்சுப்பழச்சாறு உடலை புத்துணர்வுடன் இருக்க வைக்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்படவும் உடலுக்கு முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும். பல் வலி, ஈறு வீக்கம், ஈறில் இரத்தம் வருதல் போன்ற கோளாறுகளை குணமாக்கும். ஆரஞ்சுப்பழம் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு முதலியவற்றை குணமாக்கும் வலிமை கொண்டது. ஆரஞ்சுப்பழத்தை முகத்தில் தேய்த்துவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். பசும்பாலில் ஓரிரு சொட்டு ஆரஞ்சுப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவிவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சில் பல வைட்டமின்களோடு, சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து இருக்கிறது. பல நாட்களாக வியாதியில் பாதிக்கப்பட்டு தேறியவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை டானிக். உடல் குளிர்ச்சி பெற, உடல் வலுப்பெற ஆரஞ்சு மரப்பூ சிறந்தது. ஆரஞ்சுப்பழச்சாறை கர்ப்பிணிகள் தினமும் ஒரு டம்ளரில் சிறிதறவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தோலை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் வேகவைத்து அந்த நீரில் வாய் கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் அழியும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி, பல் ஈறுகளில் இரத்தம் போன்றவையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றை ஒரு வாரம் கொப்பளித்து விழுங்கி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத்திலுள்ள வைட்டமின் சி உருவாக கொலாஜென்எ ( COLLAGEN ) ன்ற வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து - எலும்புகள், இரத்தகுழாயின் உட்புறச் சுவர் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சுப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக்குறைக்கவும், நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சுப்பழம் குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எப்போதும் சுறுசுறுப்புடனும், நோய் தாக்குதலின்றி உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க உதவுகிறது. மாதவிலக்குக் காலங்களில் ஒருசிலருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்ந்து, மன உளைச்சல் ஏற்பட்டால், இவர்கள் ஆரஞ்சுப்பழச்சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து குடித்துவந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள். ஆரஞ்சுப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் வறட்சியை போக்கும், முகம் அழகு பெறும், தலைச்;சுற்றல் நீங்கும், வாய் துர்நாற்றம் போக்கும், தாகத்தைத் தணிக்கும் மருந்தாகும். ஆரஞ்சுப்பழத்தின் தோலை உலர்த்தி, அதில் சிறிது ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பொடி செய்து தினமும் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
100 கிராம் எடை கொண்ட ஆரஞ்சுபழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி – 53 கிராம் , வைட்டமின் ஏ – 99 மி.கிராம், வைட்டமின் பி – 40 மி.கிராம், வைட்டமின் பி2 – 18 மி.கிராம், வைட்டமின் சி – 80 மி.கிராம், நீர்ச்சத்து – 88 கிராம், பாஸ்பரஸ் - 18 மி.கிராம், கரோட்டின் - 1100 மி.கிராம், சுண்ணாம்புச்சத்து – 24 மி.கிராம், இரும்புச்சத்து – 0.2 மி.கிராம், புரதம் - 0.6 கிராம், கொழுப்பு – 0.2 கிராம், தாதுப்பொருள் - 0.3 கிராம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்
25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.


