எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நவீனமயமாதல், டிஜிட்டல் இந்தியா என நம் நாடு பல முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் நம் நாடு விவசாயத்தையே முதகெலும்பாய் நம்பியுள்ளது. நாட்டின் மொத்த பரப்பளவில் 60.4 சதவீதம் விவசாய நிலமாகும். இந்திய ஜிடிபியில் 16 சதவீதம் விவசாயத்திலிருந்து கிடைத்துள்ளது.
பல வகையான உணவு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவே முதலிடம். இவ்வளவு பெருமையிருப்பினும், இந்தியாவில் பத்தில் இரண்டு பேர் பசியோடு தான் இருக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பு இன்னும் தொடர்கிறது. விவசாயியின் நிலைகளை சொல்லி உலகம் அறிய வேண்டியதில்லை. முப்போகம் தந்த அதே மண் ஒரு போகம் கூட தர மறுக்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? காரணம் காரியம் இரண்டுமே ஒன்று தான்...அதுவும் நாம் தான்....
பசுமை புரட்சி என்றோம்! இரசாயணங்களை பூமியில் கொட்டித் தீர்த்தோம்! இயந்திரங்களை கொண்டு பூமியை கிளறி பதம் பார்த்தோம்! பூமியின் உதிரத்தை இயந்திரம் கொண்டு உறிந்தோம்! விளைச்சல் என்று நம்பி விதைகளை மாற்றினோம்! மாற்றம் செய்த விதையை நம்பி பாரம்பரிய விதைகளை மாற்றினோம்! உலகையே ஆக்கி அழிக்கும் நுண்ணுயிர்களை இழந்தோம்! உயிரும் உதிரமும் கொண்ட மண்ணை உயிரற்ற திடப்பொருளாக்கினோம்!
நம்மால் விளைந்த இந்த விளைவுக்கு நாமே விடை காண்போம்... பூமியைக் காக்க புதியதோர் மாற்றம் கொண்டு வருவோம்....
அந்த மாற்றம் இயற்கை முறையில் வேண்டும்..விளை நிலத்திற்கான உண்மை பொருளை உலகறிய செய்த நம்மாழ்வர் அவர்கள் கொண்டு வரா விரும்பிய மாற்றமாக இருத்தல் வேண்டும்.
நிலத்தின் வளத்தை பெருக்க வேண்டும் அதுவும் இயற்கை முறையில்... இது சாத்தியமா? நிச்சயம்... பயிர்த்தொழில் என்பது இயற்கை சார்ந்த்தாக மட்டுமே அமைதல் வேண்டும்.... காரணம் இயற்க்கையை வெல்ல மணிதன் எடுக்கும் அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடியும்.
மண்ணை காக்க வேண்டிய பொருட்களை தெருவின் குப்பைகளில் கொட்டி விட்டு, இரசாயனத்தை நம்பிக் கொண்டிருக்கிறோம். இரசாயணங்கள் முதலில் விளைச்சல் தரலாம். ஆனால், இவை அனைத்தும் விசங்கள்.சிறிது சிறிதாய் நிலத்தை மலடாக்கும்.அதன் விளைவு.... விளை நிலம் விலை நிலமாகும்...
நிலத்தின் வளத்தை பெருக்க.... பயிர் சுழற்சி செய்ய வேண்டும்... கலப்பு பயிர் சாகுபடி செய்யலாம். கலப்பு பயிரால் நுண்ணுயிர்கள் மேம்படும். பயிருக்கு தேவையான தனிமங்கள் அனைத்தையும் நுண்ணுயிர்கள் பெருகச் செய்யும். நுண்ணுயிர்கலாள் காற்றோட்டம் அதிகரிக்கும். ஈரப்பிடிப்பு அதிகரிக்கும். மண் அரிப்பு தடுக்கப்படும்.
இதை கடந்து பலர் அறியாத உண்மை ஒன்றும் உண்டு. கலப்பு பயிர் சாகுபடியால் கரி உள்வாங்கப்படுவதால், புவி வெப்பமயமாதல் குறைக்கப்படுகிறது. மண்ணில் அதிகப்படியான வளங்கள் அதன் மேல் புறத்தில் தான் உள்ளது.
நவீன வேளாண் இயந்திரம் கொண்டு மண்ணை கிளருவதால் வளங்களை சரியாக பயன்படுத்த இயலவில்லை.
“இயற்கையை இயற்கைக்கே திருப்பியளிக்க வேண்டும்” என்பது ஒற்றை வைக்கோல் புரட்சியின் ஆசிரியர் ஃபுகாக்கோவின் கருத்து. அவரது கருத்து நிதர்சனமான உண்மை. முதல் பருவத்தில் கிடைக்கும் வைக்கோலை மண்ணிலேயே வைத்து மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும். இதுவே நம் பாரம்பரியம்.
இது மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தை காக்க மண்புழு உரம் மிக அவசியமானது. இரசாயன உரத்தில் கிடைக்கும் தாதுக்களை விட இது 20 சதவீதம் அதிகமாக வளத்தை பெருக்கும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தோராயமாக 40,000 மண்புழுக்கள் இருக்கும் என்பது டார்வினின் ஆராய்ச்சி. மண்புழுக்கள் இருக்கும் நிலமே வளமானது. நிலத்தின் வளத்தை மண்புழுவே காட்டிக்கொடுக்கும். தனிமங்களை மண் ஏற்றுக்கொள்வதற்கு மண்புழுக்களே பெரிதும் உதவுகிறது.
தாவர, விலங்குக் கழிவுகள் மீது பூஞ்சை, பாக்டீரியா மண்புழுக்கள் வளரும்.இதனால் அந்த கழிவு பழுப்பு நிறத்திற்கு மாறும். இத்தகைய கழிவைக் கொண்டு நில வளத்தைப் பெரிதும் மேம்படுத்தலாம்.
மாட்டின் சானத்தை மட்டுமே எருவாக பயன்படுத்தலாம் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் தமிழன் தன் இரண்டாவது தாயாக கருதும் மாடு தரும் அனைத்துமே விளைச்சலை ஊக்குவிக்கும். பஞ்சகாவ்யாவை விதை நேர்த்தி தொடங்கி, நடவு, வளர்ச்சிப் பருவம், பூ வளர்ச்சி, காய்ப் பெருக்கம்,
அறுவடைக்குப் பின் கெடாமை என பல இடத்திலும் பயன்படுத்தலாம். இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% கால் நடைகள் மூலமே கிடைக்கின்றன. நிலக்கரி, பெட்ரோல், டீசல் மூலம் கிடைப்பவை 14% மட்டுமே. கால் நடைகள் மூலம் கிடைக்கும் சக்தியும் எருவும் சூழலை மாசுபடுத்துவது இல்லை.
மாறாக மண் நலத்தையும், மக்கள் நலத்தையும் காக்க வல்லவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
உழவு பற்றிய அறிவியலின் வயது ஒரு 100 வருடந்தான். 10,000 ஆண்டுகளாய் விவசாயம் செய்யும் உழவன், ஒரே பயிரில் பல இரகங்களை கையாண்டான்.
அவனது பாரம்பரிய விதைகள் நோய்க்கு உட்படவில்லை. அறிவியலின் ஆட்சியால் பல இரகங்கள் அழிந்தன. இரசாயன உரங்களுக்கு கட்டுப்படாத பல இரகங்கள் ஓரங்கட்டப்பட்டன. இரசாயனத்தை கொட்டி வணிகத்தை மட்டுமே பெருக்கியது, நவீன வேளாண்மை. இந்த நிலை தொடர்ந்தால் இருக்கும் ஓரிரு இரகங்களும் அழிந்துவிடும்.
நாம் பின்பற்றும் நவீன வேளாண்மையில் 38% இழப்பீடு நோய், பூச்சி மற்றும் களைகளால் ஏற்படுகிறது. இத்தகைய இழப்பீடுகளை இயற்கை வேளாண்மையால் கட்டுபடுத்தலாம். பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல் ஆகியனவே உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
பூச்சிகள் அனைத்துமே எதிரிகள் அல்ல. மகரந்த சேர்க்கைக்கு அவை அனைத்துமே இன்றியமையாதவை. கால் ஏக்கர் நிலத்தில் பல லட்சம் சிலந்திகள் வாழ்கின்றன. அவை பல ஆயிரம் மீட்டர் வலைகளை பின்னுகின்றன. பயிரை அழிக்கும் தாய்ப் பூச்சிகள், சிலந்தி வலையில் சிக்குவதால் பயிர்கள் காப்பற்றப்படுகின்றன. ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படும்போது சிலந்தி வலைகள் நொடியில் அழிக்கப்படுகின்றன.
நாட்டில் 60சதவீதம் நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த நிலங்களில் எந்தவித இழப்பும் இன்றி இயற்கை வேளாண்மை செய்யலாம். இது குறித்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான “இக்ரிசாட்” ஆராய்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தைஉயர்த்த பண்ணைக் குட்டை அமைக்கலாம்.
உலகமெங்கும் நஞ்சில்லா உணவுக்கான வரவேற்பு உயர்ந்துள்ளது. மேற்கண்ட நடைமுறையை பின்பற்றுவதால் உலகுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது.
இயற்கை வழங்கிய நீரையும், நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு, மக்களுக்குச் சத்துணவு வழங்கிய மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பிவிட்டு, ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி, விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து, உழவர்களை நிலத்தை விட்டு வெளியேறி, ஏற்றுமதி இறக்குமதிக்கு அகலச் சாலை போட்டு, பசியை மாற்றாவும் ஆற்றவும் போகிறோமா... அல்லது ஆலைத் தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்கப் போகிறோமா?
இது நம்மாழ்வார் அவர்கள் உலகிற்க்கு விட்டுச் சென்ற கேள்வி... இதுக்கான விடை நாம் இந்த பூமிக்காக மேற்கொள்ளும் மாற்றாந்தான்......
கவிபிரியா.பா - பி.எஸ்.சி(வேளாண்மை) இறுதி ஆண்டு. பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி, வேட்டாம்பாடி, நாமக்கல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வங்கதேசம் செல்ல பி.சி.சி.ஐ. மறுப்பு? - ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல்
19 Jul 2025மும்பை : ஆலோசனை கூட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), வங்காளதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
உண்மையான சோதனையே இனிதான்: கிரேக் சேப்பல்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித
-
அசாருதீன் வீட்டில் திருட்டு
19 Jul 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: கருண் நாயர் இடம் பெறுவாரா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்
19 Jul 2025மான்செஸ்டர் : 4வது டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்
19 Jul 2025லண்டன் : கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.