முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துக்கான காவிரி நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே. வாசன் கருத்து

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை குறைத்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று த.மா.கா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

தமிழக நிலத்தடி நீரின் அளவு அதிகம் என்ற காரணத்தை கூறி 192 டி.எம்.சி தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி தண்ணீராக குறைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.  - ஜி.கே.வாசன்

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்திற்கு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த 192 டி.எம்.சி தண்ணீரின் அளவிலிருந்து தற்போது 14.75 டி.எம்.சி அளவிலான தண்ணீரை குறைத்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதாவது, தமிழக நிலத்தடி நீரின் அளவு அதிகம் என்ற காரணத்தை கூறி 192 டி.எம்.சி தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி தண்ணீராக குறைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்திருப்பதோடு, தற்போது விவசாயிகள் வறட்சியின் விளிம்பில் இருக்கிறார்கள் என்பதையும் முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து