எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயற்கையில் கிடைக்கக்கூடிய அங்ககக் கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணியிர் மற்றும் நொதிகளால் மண்புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறுசிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே (நாங்கூழ் கட்டிகள்) மண்புழு உரம் எனப்படுகிறது.
மண்புழு
மண்புழுவானது உழவர்களின் நண்பன் மற்றும் மண்ணின் குடல் என்று அழைக்கப்படுகிறது. உலகில் 10 குடும்பங்களைச் சார்ந்த 3220 வகையான மண்புழுக்கள் உள்ளன. இந்தியாவில் ஏறக்குறைய 500 வகையான மண்புழுக்கள் உள்ளன. மண்புழுக்கள் வாழும் வாழ்விடத்திற்கேற்ப மேல்மட்ட, இடைமட்ட மற்றும் அடிமட்ட புழுக்கள் என மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மேல்மட்ட மற்றும் இடைமட்ட வகை புழுக்களே உரம் தயாரிக்க சிறந்தவையாகும். மண்புழுக்கள் தனது எடையைப் போல் 2 முதல் 5 மடங்கு அங்ககப் பொருட்களை உண்டு, அவற்றுள் 5-10 சதவீதத்தை உணவாகப் பயன்படுத்தி மீதியை கழிவாக அதாவது உரமாக வெளித்தள்ளும் திறன் கொண்டவை.
மண்புழுக்களை தேர்வு செய்தல்
விரைவாக இனப்பெருக்கம் செய்ய கூடியதும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதும், பொருளாதார முக்கியத்துவம் கொண்டதாகவும் உள்ள இனங்களையே தேர்வு செய்ய வேண்டும். பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டர்ஸ், யூட்ரிலஸ் யூசினியே மற்றும் எய்சீனியா பேட்டிடா போன்ற மண்புழுக்களே அதிகமாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உரம் தயாரிக்கும் முறைகள்
தொட்டி முறை, குவி முறை, குழி முறை
தொட்டி முறையில் புழுக்களானது சிறிய அளவு முதல் பெரிய அளவிலான தொட்டிகளில் வளர்க்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக 10 அடி நீளம், 5 அடி அகலம், 2 அடி உயரமுள்ள சிமெண்ட் தொட்டிகளில் மண்புழு வளர்க்கப்படுகிறது. இந்த முறையில் மண்புழு உரம் அதிக அளவில் தயாரிப்பது கடினம். குறைந்த அளவு தயாரிப்பதற்கு உம்முறை சிறந்தது. மேலும் இம்முறையில் மண்புழு வடிநீர் சேமிக்கப்பட்டு பயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
குவி முறையானது வாணிப ரீதியில் அதிக அளவில் உரம் தயாரிக்க சிறந்த முறையாகும். இம்முறையில் நீளவாக்கில் படுக்கைகள் போன்ற அமைப்பினை ஏற்படுத்தி அதில் புழுக்கள் வளர்க்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு சதுர மீட்டருக்கு 1000 முதல் 1500 புழுக்கள் இருக்க வேண்டும். படுக்கையானது 3 அடி அகலமும், 15 அடி நீளமும் 2 அடி உயரமும் உள்ளதாக அமைத்திடல் வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்பட்ட படுக்கையில் முதல் ஐந்து முதல் பத்து செ.மீ. உயரத்திற்கு மரத்தூள் (அ) சிறிதாக வெட்டப்பட்ட கரும்புத் தோகை (அ) தேங்காய் நார் கழிவினை இட்டு புழுக்களுக்கு அடித்தளம் அமைத்திடல் வேண்டும். இதற்கு மேல் 10 முதல் 15 செ.மீ. உயரத்திற்கு கால்நடைகளின் மட்கவைக்கப்பட்ட சாணம் (அ) மட்க வைக்கப்பட்ட தாவரக்கழிவுகள் (அ) இலைகளை இட வேண்டும். 50 சதவீதம் மாட்டுச்சாணத்துடன் 50 சதவீதம் மட்கிய கோழி கழிவுகளையும் பயன்படுத்தலாம். இதன் மேல் 2 செ.மீ. உயரத்திற்கு வயல் மண் இட்டு கழிவுகளை அடுக்கடுக்காக இட்டு அதற்கு மேல் மண்புழுக்களை விட வேண்டும். பின்னர் கடைசியாக வைக்கோல் (அ) காய்ந்த புல் கொண்டு அடுக்கினை போர்வையாக மூடவேண்டும். இதன் மூலம் ஈரப்பதம் காக்கப்படுகிறது.
படுக்கைகள் அமைக்கப்பட்டு 45 முதல் 60 நாட்களில் உரம் தயாராகிறது. மண்புழு உரம் எடுப்பதற்கு முன்பு நீர் தெளிப்பதை நிறுத்திவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் புழுக்கள் அடிப்பகுதிக்கு சென்று விடுவதால் எளிதான முறையில் மேலுள்ள உரங்களை சேகரிக்கலாம். சேகரித்த உரங்களை 3 மில்லி மீட்டர் அளவுள்ள சல்லடைகள் மூலம் சளித்து தரமான உரத்தினை பிரித்து எடுக்கலாம். 1 டன் கழிவுகளுக்கு 1 கிலோ அளவில் அசோபாஸ் உயிர் உரத்தினை கலந்து ஊட்டமேற்றலாம்.
உரம் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை
வெப்பநிலையானது 25 முதல் 30 டிகிரி சென்டிகிரேட் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஈரப்பதமானது 50 முதல் 60 சதம் இருத்தல் வேண்டும்.
ஆங்கக்கழிவானது அதிக காரத்தன்மையோ (அ) அமிலத் தன்மையோ உடையதாக இருத்தல் கூடாது.
கழிவுகளில் கார்பன் நைட்ரஜன் விகிதம் 20:1 முதல் 30:1 வரை இருத்தல் வேண்டும்.
தயாரிக்கப்படும் இடமானது நல்ல காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உடையதாக இருத்தல் வேண்டும். மழை மற்றும் வெய்யிலில் இருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.
இடப்படும் அங்ககப் பொருட்களானது பாதியளவு மட்கியவையாக இருத்தல் வேண்டும்.
பசுமையான இலைகளையோ (அ) சாணத்தையோ உபயோகப்படுத்தல் கூடாது. ஏனெனில் இவை மட்கும்போது ஏற்படும் வெப்பத்தால் புழுக்கள் இறந்து விடும்.
எறும்பு, எலி போன்ற தீங்கு விளைவிக்கும் உயிரினங்களிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும்.
மண்புழு உரத்தின் பயன்கள்
நிலத்தின் அங்ககப்பொருட்களின் அளவு மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாகின்றது.
தேவையான பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்பாட்டினை அதிகரிக்கின்றது.
மண்புழு உரமிடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி குரணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் நீர்பிடிப்பு சக்தி, காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதியை அதிகரிக்கின்றது.
களிமண்பாங்கான மண்ணில் உள்ள குழம்பு தன்மையை குறைக்கிறது. கோடைக்காலத்தில் மண்ணில் வெப்பநிலையை குறைத்து வேர் காயம் ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் மழைக்காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது.
மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணின் உப்புக்கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.
மண்புழு உரத்தில் உள்ள ஆக்சின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச்செய்கிறது. ஜிப்ரலின் பயிரை பூக்கச்செய்கிறது மற்றும் கியூமிக் அமிலம் வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மண்புழு உரம் தயாரிப்பதை தொழிலாக டேற்கொள்வதால் வருமானமும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
மண்புழு உரத்திலுள்ள சத்துப்பொருட்களின் அளவு
மண்புழு உத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவு பொருள்களை பொருத்தே அமைகிறது. பொதுவாக மண்புழு உரத்தில் சுமார் 12-17 சதவீதம் அங்கக்க கார்பன், 0.5 – 1.5 சதவீதம் தழைச் சத்து, 0.1 – 0.6 சதவீதம் மணிச்சத்து, 0.1 – 0.9 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது. மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து “பி” மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.
மண்புழு உரமிட பரிந்துரைகள்
பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2 டன் அளவில் இட பரிந்துரை செய்யப்படுகிறது (அனைத்து பயிர்களுக்கும்). தேன்னை மற்றும் பழ வகை மரங்களுக்கு வருடத்திற்கு மரம் ஒன்றுக்கு 10 கிலோ அளவில் இட பரிந்துரை செய்யப்படுகிறது. மல்லிகை, ரோஜா மற்றும் அலங்கார செடிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தலா 250 கிராம் என்ற அளவில் இட வேண்டும். மண்ணின் மேற்பரப்பில் இட்டால் மண்புழு உரத்தில் இருக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெயில் படும் பொழுது இறந்து விடும் நிலை உள்ளது.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்-636001.
தொகுப்பு – ப.ரவி, து.ஜெயந்தி, நா. ஸ்ரீபாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.