எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கியவர்களிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் நேற்று நேர்காணல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுத்தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடிபழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் பெருமளவில் திரண்டனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி பாக்கியலட்சுமி மற்றும் மகன் ரவி உள்ளிட்டோரும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலி்ங்கம், எம்.ஜி.ஆர் மன்றத் துணைசெயலாளர் எம்.எஸ். பாண்டியன், பாக்கியராஜ் ஆகியோரும் மதுரை மாநகர முன்னாள் துணை மேயர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேலு, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான தொழில் அதிபர் என்.கே.கே.ரவி, தனலட்சுமி ஆகியோரும் மல்லிகா சுப்ரமணியம், செந்தில்நாதன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல் சூலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் வி.கந்தசாமி, ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஒ.வி.ஆர். ராமச்சந்திரன், வக்கீல் பிரபுராம், கே.ஆர்.எஸ். சக்திவேல், எஸ்.ஜி. சுப்ரமணியம், சண்முகசுந்தரம், கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சிக் கழக செயலாளர் பொன்ராம், செந்தூர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கே.ஏ. மதியழகன் ஆகியோர் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். கட்சியினரின் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்காணல் நேற்று மாலை தொடங்கியது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த நேர்காணலில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆட்சி்மன்றக் குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர். இந்த நேர்காணலில் குறிப்பிட்ட தொகுதியில் கட்சியின் வெற்றி வாய்ப்பு விருப்பமனு செய்தவர்களின் வெற்றி வாய்ப்பு நிலவரம் கட்சிக்காக ஆற்றிய பணி எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பிட்ட தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இந்த நேர்காணல்களில் பங்கேற்றனர். நேர்காணல்கள் முடிந்த பின்னர் இத்தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி