எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டதைத்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடர்பான ஆவண புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேற்று வெளியிட்டார். மாநிலங்களவைத் தலைவராக உள்ள துணை ஜனாதிபதியின் சாதனைகளையும், மாநிலங்களவையின் செயல்திறனையும், ஆற்றலையும் உயர்த்துவதற்கான இவரின் முன்முயற்சிகளையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், ராஜஸ்தான் மத்திய பல்கலை கழக வேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன், அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், பேட்மிண்டன் அணியின் இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தநிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
தமிழில் பேச எனக்கு ஆர்வம் உண்டு. நான் முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் பேச முடியாமல் போனது. நிச்சயம் விரைவில் பேசுவேன். உள்துறை அமைச்சர் என்ற முறையிலோ பா.ஜ.க. தலைவர் என்ற முறையிலோ நான் வரவில்லை. வெங்கையா நாயுடுவின் மாணவர் என்ற முறையில் நான் பங்கேற்றுள்ளேன். அவரது வாழ்க்கை மாணவர்கள், இளைஞர்கள் கற்று கொள்வதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
காஷ்மீரில் 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என வெங்கையா நாயுடு போராடினார். காஷ்மீர் பிரச்னையை ஒரு கண்ணில் அடிபட்டால் மற்ற கண்ணில் வலி ஏற்படுவது போல் என அவர் கூறியுள்ளார். 370-வது சட்ட மசோதா ரத்து செய்யப்பட்ட போது வெங்கையா துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் இருந்தார் என்பது தனிச்சிறப்பு ஆகும். 370-வது சட்டம் ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 370-வது சட்டம் ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன். மேலும் இந்த சட்ட ரத்து மூலம் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் .
அவரது வாழ்நாளில் ஏ.பி.வி.பி., சட்டசபை உறுப்பினர், சிறைவாசம் என பா.ஜ.க.வில் போராட்டங்களுடன் அந்த அளவுக்கு உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். அனைவருக்கும் அறிவுரை கூறி கட்சியை வளர்த்தவர். மத்திய அமைச்சராக இருந்த போது தான் ஸ்மார்ட்சிட்டி கொண்டு வரப்பட்டது. அவசர நிலை கொண்டு வந்த போது அவர் சிறைவாசம் அனுபவித்தார். 19 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யாரும் செல்லாத நாடுகளுக்கு வெங்கையா சென்றார். கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு பேசியதாவது:
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. மாணவர்கள் எல்லோரும் எப்போதும் கற்கும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் பொதுவாழ்வில் பலரிடம் பாடம் கற்றுள்ளேன். பொருளீட்டும் முன் கல்வி அவசியம், பொருளீட்டும் போது கற்றல் அவசியம். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் சோர்ந்து விடவில்லை. நான் வசதி கொண்ட குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை. எனக்கு எந்தவொரு அரசியல் குடும்பமும் உதவி செய்யவில்லை. சாதாரணமாக பணியை துவக்கினேன். வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன். வாஜ்பாய் அருகில் தலைவராக அமர்ந்தேன். விவசாயி மகனான நான் துணை ஜனாதிபதியாக வந்த போது கண்ணீர் விட்டேன். நான் ஒன்றும் இந்த பதவிக்கு வர வேண்டும் என விரும்பியது இல்லை. கட்சி பணிகளை பார்க்க முடியாதே என்று வருந்தினேன். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இவ்வாறு வெங்கையா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்