எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சார கம்பம் விழுந்ததால் சென்னையில் வாலிபர் உயிரிழக்கவில்லை. லாரி மோதி மின்கமபம் விழுந்ததால் இறந்தார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-
பொதுவாக மின்சார வாரியத்தில் புகார்கள் எங்கே வந்தாலும், அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அங்கே சென்று, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி விடுகிறார்கள். பொதுவாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் தெரிவிப்பார்கள். அல்லது எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். அல்லது என்னுடைய வீட்டில் 24 மணி நேரமும் புகார் செய்வார்கள். வந்த அனைத்து புகார்களையும் எடுத்து பார்த்தோம். குறிப்பிட்ட மின்கம்பம் பழுதடைந்தாக, எந்த இடத்திலும் பதிவு ஆகவில்லை. அங்கு விழுந்த கம்பமும், சேதாரம் இல்லாமல் நன்றாக தான் உள்ளது. அந்த கம்பம் கடைசி கம்பமாக இருக்கும் காரணத்தினால் லாரி பட்டுதான் விழுந்திருக்கும் என்பது தான் யூகம். தற்போது காவல்துறையிடம் கண்காணிப்பு கேமரா வைத்து அது எந்த லாரி என்பதை கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கண்டுபிடித்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் சேதுராஜ் இறந்தது வருந்தத்தக்க ஒன்றுதான். மழைக் காலம் வரும் காலம் என்பதால் மின்வாரியத்தில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மின் கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ, மின்கம்பிகள் பழுதடைந்திருந்தலோ அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் ( நேற்று) அது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை வைத்துள்ளோம். 15-ம் தேதி நடைபெற்ற விபத்து என்பது, அனைத்து பத்திரிகைகளும் மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்றது என்று செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. மின்சார வாரியமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு. இதற்கு மாற்று கருத்து இல்லை. மின்சார வாரியத்தை பொறுத்தவரை இது போன்ற புகார்கள் எங்கே வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சரும் மழைக்காலம் என்பதால் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, விபத்துக்கள் வாராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த அடிப்படையில் நாங்களும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சியை பொறுத்தவரை, புதைவட கேபிள்கள் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சியோ, வடிகால் வாரியமோ, பி.எஸ்.என்.எல். போன்றவைகள் எங்களுக்கு தெரியாமல், சாலையை தோண்டுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்காவது கேபிள் புதைக்க வேண்டும்என்றால் எங்களிடம் கேளுங்கள். நாங்கள் எங்கள் கேபிள் எங்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்று நாங்களும் அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தகவல் தெரியாமல் நடக்கும் போதுதான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். பொதுவாக மின்கம்பங்கள் பழுதடைந்தது என்றால், 14 மாதத்தில் கிட்டதட்ட, 62 ஆயிரத்து 688 மின்கம்பங்களை நாங்கள் மாற்றியுள்ளோம். புகாரின் அடிப்படையில், இன்றும் 2 ஆயிரத்து 238 மின்கம்பங்கள் மாற்ற வேண்டியுள்ளது. அதுவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எ
ங்காவது மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது என்றால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கும், எனக்கோ, இங்கு இருக்கும் அதிகாரிகளுக்கோ, தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இருந்த போதிலும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, 10 அல்லது 15 நாட்களுக்குள் எங்கே, எங்கே பழுதடைந்துள்ளதோ, அதனை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கிள்ளோம். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் தோண்டும் நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். விதிமீறல் செய்வோர்களுக்கு அடிப்படையில் வசூல் செய்துள்ளோம். சம்பந்தபட்ட இடத்தில் இருந்த மின்கம்பம் நன்றாக உள்ளது. தரமுள்ள மின்கம்பங்களைதான் உபயோகப்படுத்துகிறோம். தரம் இல்லை என்று நிருபித்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். மின்கம்பங்களை ஒரு முறைக்கு மூன்று முறை ஆய்வு செய்கிறோம். பொதுமக்கள் பல்வேறு புகார்களை எனக்கு தெரிவிக்கின்றார்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 1912 என்ற எண் .24 மணி நேரம் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் குறித்து தெரிவிக்க குழு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்


